Monday, December 7, 2020

திரு. லக்ஷ்மண்

ஏன் ஒரு சமூகம் படுகொலையை கொண்டாடுகிறது? - மீள் பதிவு

**********************************************
'ஏன் உங்க குழந்தைய அடிக்கிறீங்க?

தப்பு பண்ணான் சார் அதான் அடிச்சேன். என் குழந்தை மேல எனக்கு மட்டும் பாசம் இருக்காதா?

'உங்க குழந்தை தப்பு பண்ணலைங்கிறது இல்லை என்னோட வாதம்.நீங்க அதுக்கு அடிக்கிறது தான் தீர்வுன்னு யோசிச்சீங்க இல்லையா? நீங்க கவனிக்க வேண்டியது உங்கள் செவ்வாய் ஆதிக்க மனம் வன்முறை தான் தீர்வுன்னு யோசிச்சதை தான்.

உங்களுக்கு செவ்வாய் ஆதிக்கம் இல்லாம சந்திரன் ஆதிக்கம் இருந்திருந்தா அவன் தப்பு பண்றத பாத்து அடிச்சிருக்க மாட்டீங்க. அழுதிருப்பீங்க.கெஞ்சியிருப்பீங்க. கொஞ்சி சொல்லியிருப்பீங்க.

உங்க செயலுக்கு உங்க குழந்தையின் தப்பு மட்டும் காரணமில்லை. அடக்கு முறை விரும்புற உங்க மனதோட இயல்பு தான் காரணம். அதே போல உங்க பையன் மேல உங்களுக்கு பாசம் இருகுங்கிற உண்மையையும் நான் ஒத்துக்கிறேன் '

**********************************************

சமூகம் என்பது உருவாக அடிப்படை காரணம் சூரியன் ஆதிக்கம் நிறைந்தவர்கள். இன்றும் சூரியன் ஆதிக்கம் நிறைந்தவர் தான் மற்ற மனிதர்களை ஒன்று சேர்த்து எந்த ஒரு இயக்கத்தையும் கட்டமைப்பார்கள். தன் குடும்பம் தன் ஊர் தன் இனம் தன் நாடு போன்ற பல வகையான உணர்வுகள் மூலம் மக்களை ஒன்றினைத்து வாழ முற்படுவார்கள்.

அதே சமயம் மதம் வருவதற்கு முன் நம் சமூகம் வன்முறை நிறைந்த சமூகமாகவே இருந்திருக்கிறது. யார் பலம் பொருந்தியவரோ அவரே வாழ முடியும். முழுக்க முழுக்க பொது சமூகம் செவ்வாய் ஆதிக்கத்தில் வாழ்ந்து வந்தது.

என்னதான் மன்னர்கள் சூரியன் களாக இருந்தாலும் ஒரு உயிர் வாழமுடியுமா என்பதை அதன் வீரமே முடிவு செய்துகொண்டிருந்தது.

பின் மதம் மனிதர்களுக்கு குற்ற உணர்வை போதித்தது. அதாவது ஒரு வகையில் குரு கிரகத்தின் ஆதிகத்தில் பொது சமூகம் வாழத்தொடங்கியது. அது தான் popeகள் மற்றும் மதகுருக்கள் உருவாக காரணம்.

மதம் எப்பொழுதும் ஒரு கேள்விக்குட்படுத்தப்படாத ஒரு புனிதத்தையே முன்னிறுதத்தும். அதாவது கடவுள் , புனித நூல், புனித ஊர் ,புனித சிலைகள் இன்ன பிற.. இந்த புனிதம் மனிதர்களை இரண்டாக பிரித்தது. நல்லவர்கள் தீயவர்கள் உருவானார்கள். நல்லவர்களாக இருந்தால் இந்த சமூகத்தோடு வாழலாம். கெட்டவராக இருந்தால் இந்த சமூகம் அவர்களை புறகணித்துவிடும் என்ற மனநிலை உருவாக்க்கியது.

இந்த புனிதப்படும் குணம் மெல்ல வளர்ந்து மக்கள் வன்முறையை கைவிட்டனர். அதற்காக மதம் நல்லது என்று நான் பேசவரவில்லை. மதம் எப்படி இயங்குகிறது என்பதையே கூறுகிறேன்.

மதம் முக்கியமாக செய்ததது செவ்வாய் ஆதிக்க வீரர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது தான். அதற்கு பிறகே ஓரளவிற்கு மனிதர்கள் எதற்கெடுத்தாலும் சண்டை கொலை என்ற எண்ணம் விடுத்து கடவுளையும் ஓரளவிற்கு சட்டத்தையும் புனிதத்தை ஏற்றுக்கொண்டார்கள். காலம் ஆக ஆக மதம் மெல்ல அரசர்களையே சூரியனையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரச்செய்தது.

இந்த புனிதப்படுத்தபட்ட சமூகத்தில் கோவத்தை வெளிடுத்த வண்முறை உணர்வை வெளிபடுத்த இடம் மிக க்குறைவாகவே உள்ளது. என்னதான் எந்த அதீத வன்முறை உணர்ச்சி இல்லாமல் மனிதர்கள் வளரும் சூழலை நாம் உருவாக்கி இருந்தாலும் பிறக்கும் அனைவரும் செவ்வாய் ஆதிகம்மே இல்லாமல் பிறப்பதெல்லாம் இல்லை.

இன்றும் மனிதர்கள் பிறந்து கொண்டே இருக்கிறார்கள். அதாவது மதத்திற்கு முந்தைய காலத்தில் இருந்து இன்று வரை பிறக்கும் மனிதர்கள் மாறவில்லை. அவர்கள் வாழும் சூழல் மட்டுமே மாறியிருக்கிறது.

கோவத்தை உடல் பலத்தை ஆயுதத்தை விரு்பபவர்கள் காவல் துறை மற்றும் ராணுவத்துறையில் சேர்ந்து கொள்ளலாம். இவர்கள் இயங்குவது சட்டம் என்ற புனிதத்திற்கு உட்பட்டுத்தான். அதனால் தான் அவர்களை புனித சமூகம் தனது அங்கமாக வைத்திருக்கிறது. அதாவது அவர்களுடைய செவ்வாய் குணம் சமூகத்தில் நல்லவைகளுக்காக சமூகத்தை காப்பாற்றுவதற்காகவே இருக்கிறது என்ற அளவிவேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதே சட்டத்தை மீறுபவர்கள் ரௌடிகள் அடியாட்களாக ஆகிவிடுகின்றனர். இருவருமே அடக்குமுறையை வீரத்தை முன்னிறுத்துபவர்களே. ஒன்றும் வித்யாசமில்லை. இதில் சிறு பகுதியினர் செவ்வாய் உடைய சக்தியை மடைமாற்றும் நெருப்பு சார்ந்த தொழில்கள் மற்றும் வாகனங்கள் ஓட்டுவது போன்றறவற்றில் இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் இந்த வகைகளையும் தவிர்த்து செவ்வாய் ஆதிக்கம் உள்ள மனிதர்களுக்கு தங்கள் உணர்வை தீர்த்துக்கொள்ள இருக்கும் இன்னும் ஒரு முக்கிமான வடிகால் தான் சினிமா.

சினிமாவில் MASS Hero என்றால் யாரையாவது அடிக்க வேண்டும் யாரையாவது குத்த வேண்டும் சுட வேண்டும். வெட்ட வேண்டும். அப்படி இருந்தால் தான் நாம் ஒத்துக்கொள்வோம். அதாவது மக்கள் நலனுக்காக என்ற போர்வையில் இதை செய்தால் போதும். படம் பார்த்து முடியும் பொழுது நாம் பலரை சுட்டுவிட்ட திருப்தியில் வீடு வந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறோம்.

இப்பொழுது கலையையும் புனிதப்படுத்தும் வேலையை சிலர் செய்கின்றனர். அதீத புத்திமதி கூறுவது அங்கே போய் தேசிய கீதம் போடுவது போன்று சினிமா வன்முறையை தூண்டுகிறது என்று கூறி வடிகாலை அடைக்க முயற்சிக்கிறார்கள். அது மிகவும் ஆபத்தானது.ஒரு புனிதமான சமூகம் வாழவேண்டுமென்றால் அந்த புனிதத்திற்கு உட்படாத கலை மிகவும் அவசியம் ( இதை பற்றி விரிவாக தனியாக பேசலாம் )

நேற்று நடந்த படுகொலைகளை, தன் கோபத்தை பழி உணர்வை வெளிபடுத்த முடியாத எளிய மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையில் வடிகாலாக ஆகிவிட்டது. அதனால் இதை வரவேற்கவே செய்வார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கோபம் வந்தால் தன் குழந்தையையே அடிக்க தயங்காதவர்கள்.

மேலும் இவர்களுக்கும் காவல் துறைக்கும் செவ்வாய் ஆதிக்கம் பொதுவாக இருப்பதால் காவல் துறை அவர்களை குற்றவாளிகளாக சித்தரித்ததும் எந்த கேள்வியும் இன்றி அதை ஏற்றுக்கொண்டனர்.உண்மையில் பல encounter கள் அரசு அதிகார நலன் கருதி அப்பாவிகளை கொன்றிருகிறது என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள மறுகிறார்கள்.

ஏனென்றால் கொலை மற்றும் பழிவாங்குதல் என்ற தங்கள் மனதின் நீண்ட நாளைய அழுத்ததில் இருந்து விடுவித்துகொள்ள கிடைத்திருக்கும் வாய்ப்பை எப்படி நழுவவிட முடியும். காமத்திற்கு ஏங்குபவனுக்கு முன் ஒருத்தி தனது சேலையை நழுவவிட்டால் அதை பார்த்துவிட நினைப்பான?இல்லை புனித நியாயத்தை யோசித்து கண்கள் மூடுவானா? அல்லது கண்களை மூடினாலும் பார்த்ததையே நினைத்து மனதிற்குள் மகிழாமல் இருப்பானா?

நான் யாரையும் தப்பாவனவர்களாக சித்தரிக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. ஒரு பிரச்சனையை புரிந்து கொள்ளவே ஆசைப்படுகிறேன்.

இங்கே அரசு அதிகாரம் ( சூரியன் ) புனிதமாக உள்ளது.
அன்பு (சந்திரன் ) புனிமாக உள்ளது
அமைதி நல்லிணக்கம் (ராகு ) புனிதமாக உள்ளது
ஒழுக்கம் (குரு ) புனிதமா உள்ளது
கடின உழைப்பு அடிபணிதல் (சனி) புனிதமாக உள்ளது
அறிவு ( புதன் ) புனிதமாக உள்ளது
ஞானம் ( கேது ) புனிதமாக உள்ளது

ஆனால் வன்முறையும் ( செவ்வாய் ) காமமும் (சுக்கிரன் ) மட்டும் மிகவும் கட்டுப்பாட்டில் உள்ளது.வன்முறை நிறைந்த விளையாட்டுளையோ ( வேறு வடிகாலையோ ) விபச்சராத்தையையோ நாம் அனுமதிகவில்லை. அந்த உணர்வு தான் ஒரு புறம் கற்பழிப்பை தூண்டுகிறது. மறுபுறம் கொலையை ஆதரிக்கவும் தூண்டுகிறது.

நாம் எல்லா வகையான மனிதர்களோடும் வாழ்கிறோம். நாம் யாரும் வன்முறையாளனகாவோ கற்பழிப்பவனாகவோ பிறக்கவில்லை. ஆனால் நம் உணர்வுகளுக்கான வடிகால் இல்லாத பொழுது அழுத்தம் ஏற்படும். அந்த நீண்ட நாளை அழுத்தம் வாய்ப்பு கிடைக்கும் பொழுது மீண்டும் மீண்டும் கற்பழிப்பும் பழிவாங்கமாக தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்

மற்றபடி சுட்டுவிட்டால் பயம் வரும் நடக்காது என்பெதல்லாம் முட்டாள்தனம். இந்தியாவில் அவன் அவன் வீட்டிலேயே தன் மனைவியை அவள் விருப்பம் இன்றி வன்புணர்வு செய்பவர்கள் மிக அதிகம். எல்லாரையும் சுட்டுவிடலாமா?

உண்மையான தீர்வை நோக்கி நகராமல் ஒவ்வொருவரையும் சுடத்தொடங்கினால் சீக்கிரேமே வன்முறை நிறைந்த சமூகமாகவே மாறுவோம். அதை தடுக்கவே முடியாது

***
நன்றி

திரு லஷ்மண் #thirulakshman #Thiru 

Dec 7 2019

பி.கு : 

1. சென்ற ஆண்டு ஆந்திராவில் நடந்த ஒரு கூட்டு வன்புணர்வும் அதை தொடர்ந்து நடந்த படுகொலையை குறித்தும் அதை எந்த கேள்வியும் இல்லாமல் மக்கள் ஆதரித்தது ஏன் என்பதை பற்றி எழுதிய கட்டுரை. இதில் இன்று சில மாற்றங்களை சேர்க்க வேண்டியுள்ளது. இருந்தாலும் அதை அப்படியே தருகிறேன்.

2. இதை படித்து ஒரு சிலர் , உன் குடும்பத்தில் இது போன்ற ஒரு விஷயம் நடந்தால் நிதானமாக இருப்பாயா என்று கேட்டிருந்தனர். நான் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக கொலை செய்ய தயங்கமாட்டேன். தனிப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்தாலும் அது சரியே. ஆனால் ஒரு படுகொலையை அரசாங்கம் செய்யக்கூடாது என்பதே என் நிலைப்பாடாக இருந்தது. இருக்கிறது.

திரு. லக்ஷ்மண்

ஆற்றலை சேமிப்பது எப்படி - 2 - உண்மையை நோக்கி பார்வையை விரிவு செய்யுங்கள்

*****

எந்த பிரச்சனையிலும் யார் சரி யார் தவறு என்று பார்த்து முடிவுக்கு வருவது நிறுத்துங்கள்.  எல்லோரும் சரி என்ற பார்வையை வளர்த்துக்கொள்ளுங்கள். அதுவே உண்மையை நோக்கிய பார்வை. அந்த உண்மையே உங்களுக்கு ஞானத்தை வழங்கும்

******

உதாரணமாக

நீங்கள் மெதுவாக அல்லது சரியான வேகத்தில் வண்டி ஓட்டுபவர். இன்னொருவர் வேகமாக வந்து உங்கள் வண்டியில் மோதிவிட்டார்

நீங்கள் சரி. அவர் தவறு என்று முடிவுக்கு வருவதும் வேகமாக வண்டி ஓட்டியவரை திட்டிவிட்டு செல்ல தண்டனை பெற்றுத்தர எல்லா வாய்ப்பும் உள்ளது. அந்த நிகழ்வுக்கப்புறம் வேகமாக வண்டி ஓட்டுபவரைக்கண்டாலே பிடிக்காது. இவர்களால் தான் இந்த உலகத்தில் எல்லா பிரச்சனையும் வருகிறது போன்ற வெறுப்புணர்வு அதிகமாக வாய்ப்புள்ளது.

நீதிமன்றதுக்கு சாட்சி போதும். . உண்மை தேவையே இல்லை. நமக்கு நம்வாழ்வில் நிம்மதி அடைய ஆற்றலை வளர்க்க அனைத்திற்கும் தேவையானது உண்மையே ஒழிய சரிதவறு அல்ல.

நீதிமன்றத்தின் விசாரனை யார் சரி யார் தவறு என்பதை நோக்கியே இருக்கும். ஆனால் நம் விசாரனை இருவரும் சரி என்ற இடத்தில் இருந்தே இருக்க வேண்டும். அதனால் தான் ஏன் என்று கேட்கிறோம்.

விபத்து ஏன் நடந்தது?

அவர் வேகமாக வந்தார். ( நீதிமன்றத்திற்கு இது போதும்.. நமக்கு இது போதாது)

அவர் ஏன் வேகமாக வந்தார்?

அவருக்கு வேகமாக வண்டி ஓட்டப்பிடிக்கும்

அவருக்கு ஏன் வேகமாக வண்டி ஓட்டப்பிடிக்கிறது?

அவருக்கு 3ம் பாவத்தில் செவ்வாய்த்தொடர்பு இருக்கும். அதனால் வண்டி வேகமாக ஓட்டப்பிடிக்கிறது.

அவர் ஏன் அந்த அமைப்போடு பிறந்தார்?

அவர் பிறந்த நேரத்தில் அப்படி ஒரு அமைப்பு உள்ளது.

அவர் ஏன் அந்த நேரத்தில் பிறந்தார்?

எதார்த்தமாக நடந்தது. அவரோ அவரது பிறந்த நேரமோ அவர் தீர்மாணிக்கவில்லை. பெற்றோருக்கும் இதை பற்றி பெரிய தெளிவு இல்லை.

இனி அந்த நேரத்தில் பிறப்பை மொத்தமாக தடுத்துவிடமுடியுமா?

வேகமாக வண்டி ஓட்டுபவர் இயல்பாக தைரியம் அதிகம் இருக்கும்.

தைரியம் இருப்பவர்களே இல்லாத சமூகத்தை உருவாக்க முடியாதே.

மேலும் வேகத்தால் உங்களை தொந்தரவு செய்த ஒருவர் இன்னொருவருக்கு பாதுகாப்பாகவும் இருந்திருக்க முடியும்.

பிரச்சனை வேகத்தில் இல்லை. அதை நடுரோட்டில் செய்யும் பொழுது அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

அவருக்கு வேகம் பிடிக்கும் என்றால் ஆம்புலன்ஸில் வேலை செய்தால் அங்கு அது உயிர்காக்கும் சேவையாக மாறும்.

Race ல் கலந்து கொண்டால் அது பெரிய விளையாட்டு வீரராக மாறமுடியும். Race ல் ஓட்டுபவர்கள் ரோட்டில் வேகமாக ஓட்டமாட்டார்கள்.

மேலும் ஒருவர்ரோட்டில் வேகமாக செல்வதற்கு வேகம் மட்டும் காரணமாக இருக்க முடியாது..

அவர் இளைஞராக இருந்தால் தன் ஆண்மையை நிரூபிக்க நினைத்தும் அதை செய்யலாம். அல்லது அவரது தோல்வியை கோபத்தை வெளிப்படுத்த நிதானம் இழந்து அப்படி செய்திருக்கலாம். இன்னும் பல காரணிகள்.

இவை அனைத்திற்குமே தீர்வு உள்ளது. இவை அனைத்தையும் ஆழமாக செல்லும் பொழுது மீண்டும் அவர் ரோட்டில் வேகமாக செல்வதை மொத்தமாக தவிர்க்க முடியும். இதை எல்லாம் அவருக்குள் ஏதோ ஒன்று தான் இதை செய்யத்தூண்டியது. காரணம் உள்ளது. மற்றபடி அவர் சரி என்று சிந்திக்க ஆரம்பித்தாலே விடைகிடைக்கும்..

ஒவ்வொரு காரியத்திற்கு பின்னும் இத்தனை காரணங்களை யோசிக்க முடியாதவர்கள் என்ன செய்வது?

எல்லோரும் நல்லவர்கள். அவர் செய்த செயல் நம்மை தொந்தரவு செய்துவிட்டது. மற்றபடி அவர் நல்லவராக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்று ஆழமாக நம்புவது. தெரிந்தவராக இருந்தால் அவர் செய்த நல்லவைகளை எல்லாம் சிந்தித்து அவரை மீண்டும் ஏற்றுக்கொள்வது.

இல்லை அவர் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்தால் அவரை விட்டு விலகிவிடுவது. விலகும் பொழுதும் அவர் நல்லவர்தான். அவர் மீது எந்த தவறும் இல்லை என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வது மட்டுமே நிரந்தரமான நிம்மதியை உங்களுக்கு சாத்தியப்படுத்தும்.

*****

ஏற்கனவே பல முறை கூறியது போல் உங்களிடம் தவறாக நடப்பவர்களிடம் சரியை மட்டுமே பாருங்கள். அவரை சரிசெய்ய பார்க்காதீர்கள். அது உங்களின் ஞானம் நோக்கிய பாதையில் நிம்மதி நோக்கிய பாதையில் ஆற்றலை சேர்க்க விரும்பும் பாதையில் தடையாகவே மாறும். சரி செய்ய முடியவில்லையா விலகிவிடுங்கள். ஆனால் தவறாக நினைக்கக்கூடாது.

உயிர் உள்ள எல்லோருக்குள்ளும் உண்மை இருக்கும். அதை தான் பார்க்கச்சொல்கிறேன். வெளியே ஒருவர் எப்படி நடந்துகொண்டாலும் எல்லாருக்குள்ளும் உண்மை தான் உயிராக விளங்குகிறது. உண்மையை பார்க்கத்துவங்கிவிட்டால் எல்லாரையும்பிடிக்கும். உங்கள் உயிரும் வளரும்.

சரி தவறு எல்லாம் சமூகம் சார்ந்தது.மனம் சார்ந்தது. அதற்கும் ஆன்மாவிற்கு ஞானத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 

அழகை கடந்தால் தான் ஞானம் என்றால் கோபத்தைக்கடந்தால் தான் ஞானம் என்றால் அறிவை கடந்தால் ஞானம் என்றால் ஒழுங்கையும் கடந்தால் தானே ஞானம். ஒழுங்கை மட்டும் புனிதபடுத்துவது ஏன்?
 
எல்லோரும் சரி என்ற பார்வையை வளர்த்துக்கொள்ளாமல் எத்தனை தியானம் செய்தால் பலன் இருக்காது. அது ஓட்டைப்பாத்திரத்தில் நீரை பிடிப்பது போல் தான். தியானம் செய்யும் வரை இருக்கும் நிம்மதி அது முடிந்த பிறகு இருக்காது.

தியானத்தை குறைத்து மதிப்பிடவில்லை. அது எதற்காக செய்கிறோம் என்ற உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். ஞானம் அடைய தியானம் செய்கிறீர்கள் என்றால் அங்கே உண்மை தான் உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். 

மேலும் எல்லாரும் சரி என்ற பார்வை வளரும் பொழுது உங்களை சுற்றி உள்ளவர்களின் சரியை பார்ப்பீர்கள். குறைபார்க்க மாட்டீர்கள். தவறான நினைவுகள் எல்லாம் விலகும். உங்களுக்கும் முழுமையான நிம்மதியை பார்ப்பீர்கள். ஆற்றல் உள்ளும் புறமும் நிறையும்.

திரு. லக்ஷ்மண்

வேற்றுமையைக் கடந்து கணவன் மனைவிக்குள் ஒற்றுமையைக் காண என்ன செய்ய வேண்டும்?

இதில் கூறும் அனைத்தும் எல்லா உறவுகளுக்கும் பொருந்தும். ஆனால் கணவன் மனைவிக்குத்தான் மிக அதிகமாக இதில் தெளிவு இருக்க வேண்டும்.

முக்கியமான 8 விஷயங்களை மட்டும் பட்டியல் இட்டிருக்கிறேன். அனைத்தையும் கடைசி வரை கட்டாயம் படியுங்கள். இல்லை என்றால் கடைசி ஒன்றையாவது படியுங்கள்.

********

1. வார்த்தையைக்கடந்து புரிந்துகொள்ள வேண்டும்.

பேச்சில் 9 வகை உண்டு. 

அதிகாரமாக பேசுவது. 
உளறுவது. 
கத்துவது.
அதிகமாக பேசுவது. 
மனதில் இருப்பதை அப்படியே பேசுவது ( straight forward ) , பேசாமலேயே இருப்பது (அ) திக்கித்திக்கி பேசுவது , 
இனிமையாக பேசுவது, தத்துவமாக (அ) ஆறுதலாக பேசுவது , 
பாலியல் கலந்து பேசுவது.

உங்களுக்கு எதெல்லாம் இதில் உள்ளது. உங்கள் துணைக்கு எதெல்லாம் உள்ளது என்பதை பிரித்துக்கொள்ளுங்கள். 

சிலருக்கு இனிமையாக பேச வரும். சிலருக்கு வராது. அதை அப்படி புரிந்துகொள்ளுங்கள். இனிமையாக பேசுபவர் எல்லாம் நல்லவர் கிடையாது. கடுமையாக பேசுபவர் எல்லாம் கெட்டவர்கள் கிடையாது.

ஏன் இப்படி பேசுகிறாய்? ஒழுங்காக பேசத்தெரியாதா என்று கேட்டுக்கொண்டே இருந்தால் வாழ்க்கை முழுதும் சண்டை இருக்கும். தயவு செய்து உங்கள் பேச்சின் இயல்பை புரிந்துகொண்டு அவரின் பேச்சின் இயல்பையும் புரிந்துகொண்டு காயங்களை குறைக்க பாருங்கள். இரண்டையும் ஏற்கப்பழகுங்கள்.

2. உங்கள் கனவை அவர் காணவேண்டும் என்று விரும்பாதீர்கள்

உங்களுக்கு வெளிநாடு போகவேண்டுமானால் நீங்கள் போக முயற்சியிங்கள். இன்னொருவருக்கு விருப்பம் இல்லை என்றால் அவரை தொந்தரவு செய்யாதீர்கள். 

வார இறுதியிலும் உங்களுக்கு ஏதாவது செய்துகொண்டே இருக்கத்தோன்றினால் கனவை நோக்கி ஓட நினைத்தால் நீங்கள் செய்யுங்கள். இன்னொருவருக்கு படுத்து தூங்க மட்டுமே பிடித்தால் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். மாற்ற நினைக்காதீர்கள். பெருங்கனவுகளே சரி என்று விவாதம் செய்வதும் தவறு. எளிமையான வாழ்க்கையே சரி என்று எதிர்வாதம் செய்வதும் தவறு. இரண்டுமே சரி.

3.சமூக ஒழுங்கை வீட்டிற்குள் கொண்டு வராதீர்கள்

சமூக ஒழுங்கு - சமூகத்திற்கு தேவையானது. வீட்டிற்கு அல்ல.

சமூக ஒழுங்கு என்பது ஒரு பாவனை. அந்த பாவனை நாம் முன் பின் அறியாதவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை தீர்மாணிப்பதற்காக மட்டுமே. 

அதை கொண்டு வந்து வீட்டில் வைத்தால் என்ன ஆகும்? 

24 மணிநேரம் ஒன்றாக வாழும் பொழுதும் , ஒருவரை ஒருவர் உண்மையை புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமே ஒழிய , இருவருக்குள் சமூக ஒழுங்கு என்ற பெயரில் நடித்துக்கொண்டிருந்தால் நிம்மதி துளியும் இருக்காது.

இருவருக்கும் ஒழுங்கு பிடித்தால் செய்து கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து நடித்துக்கொண்டிருக்காதீர்கள். உடன் இருப்பவர் தவறாக நினைத்துவிடுவார் என்று பயந்து பயந்து வாழ்ந்தால் நீங்கள் நிரந்தரமான அழுத்தத்திற்கு சென்று விடுவீர்கள். அதன் வெளிப்பாடாக வீட்டில் சண்டை இருந்துகொண்டே இருக்கும்.

ஒருவருக்கு ஒருவர் உண்மையில் என்ன வேண்டும் என்பது தெளிவானால் நிம்மதி பிறக்கும். 

4. ஞானம் அடைய திருமணம் சிறந்த வழியே

இந்த உலகத்தில் உங்களுடனேயே உண்டு உறங்கி வாழும் ஒரே ஒரு ஜீவனை புரிந்துகொண்டால் உலகத்தில் உள்ள எல்லோரையும் புரிந்து கொள்ள முடியும். அதை விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டிருந்தால் கோபப்பட்டுக்கொண்டிருந்தால் சண்டையிட்டுக்கொண்டே இருந்தால் நீங்களும் நிம்மதியாக இருக்க முடியாது. இந்த உலகம் முழுவதும் எதிர்மறையாகவே தோன்றும். 

உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் வேற்றுமை புரிந்துகொள்ளுங்கள். எல்லா வேற்றுமையும் உண்மை என ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு சாப்பாட்டுக்கடைக்கு செல்கிறீர்கள். அங்கு நீங்கள் வெளிச்சம் நிரம்பிய இடத்தில் அமர நினைக்கிறீர்கள். உங்கள் துணை கொஞ்சம் வெளிச்சம் குறைந்த இடத்தில் அமர நினைக்கிறார் என்றால் இரண்டில் எது சிறந்தது என்று பார்க்காதீர்கள். ஒரு முறை வெளிச்சத்திலும் ஒரு முறை வெளிச்சம் குறைந்த இடத்திலும் இருங்கள். 

இன்னொருவரின் விருப்பத்தை சரி பார்ப்பதை நிறுத்துங்கள். இருவரையும் அவர் அவர் இடத்தில் நின்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

5. அழுத்தம் அதிகமானால் கணவன்-மனைவி என்ற அடையாளங்களை தூக்கி எறியுங்கள்.

கணவன்-மனைவி எனும் பொழுது நிறைய அடையாளங்கள் குழப்பங்கள் நம்பிக்கைகள் எல்லாம் வந்து சுமையாக்கினால் அதை தூக்கி எறிந்துவிட்டு boyfriend-girl friend என்ற பதத்திற்கு வந்துவிடுங்கள்.

ஒரு பெண்ணோடு ஒரே வீட்டில் வசிப்பது ஒரு ஆணுக்கும் ஒரு ஆணோடு ஒரே வீட்டில் வசிப்பது ஒரு பெண்ணுக்கும் மிகவும் பிடிக்கும். அந்த இடத்தில் நின்று வாழ்க்கையை அணுகுங்கள். 

உங்கள் மனைவியை ஒரு பெண்ணாக புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் கணவனை ஒரு ஆணாக புரிந்துகொள்ளுங்கள். 

இது தொடக்கம் மட்டுமே. பின்னர் இருவரும் உயிர் என்ற இடத்தில் இன்னும் இணக்கமாக சேர்ந்துவிடலாம்.

யாரோ ஒரு பெண்ணின் ஆணின் ஆசையை அப்படியே புரிந்துகொள்ளும் நாம் கணவன் மனைவி என்று வந்துவிட்டால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற இடத்திற்கு வருகிறோம். அதனாலேயே அதை தூக்கி எறியுங்கள்.

6. பிரிவது மட்டுமே தீர்வல்ல

மறுமணத்திற்கு எதிரானவன் அல்ல நான். ஆனால் இப்பொழுது இருக்கும் திருமணத்தை முதலில் தெளிவாக அணுகினீர்களா என்பதை கவனிக்கவேண்டும். இல்லை என்றால் எத்தனை திருமணம் செய்தாலும் புரியோஜனம் இருக்காது.

பிரிவது தான் தீர்வு என்று முடிவுக்கு வரும் முன்

1. திருமணம் என்றால் என்ன என்றாவது புரிந்ததா?

2. இனி மறுமணம் செய்தால் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்று நம்பிக்கை இருக்கிறதா?

3. இப்பொழுது இருக்கும் துணையை உண்மையிலேயே எந்த குழப்பமும் இல்லாமல் புரிந்துகொண்டீர்களா?

4. உங்களுக்கு திருமணம் முதலில் தேவையா?

உங்களுக்கு ஏற்றவர் வேறு எங்கோ இருக்கிறார்.இவர் இல்லை என்று நம்புவதை நிறுத்துங்கள். அது கடைசி உபாயம். 

முடிந்தவரை இருப்பவரை புரிந்துகொள்ள முடியுமா என்று பாருங்கள். எல்லோரும் மனிதர்கள். எல்லோரும் நல்லவர்கள். எல்லோருக்குள்ளும் உயிர் இருக்கிறது. அதனால் எல்லா முன் தீர்மாணங்களையும் விடுத்து கொஞ்சம் ஆழமாக சிந்தியுங்கள்.

7.  நல்ல நினைவுகளை உருவாக்கப்பாருங்கள்

ஒன்றாக ஒரு காபி குடிக்கக்கூட முடியவில்லை. இவரோடு எதற்கு வாழவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதற்கு தவறான நினைவுகளே காரணம். காபி குடித்தாலே சண்டையில் தான் முடியும் என்று நினைத்தாலும் அதற்கும் தவறான நினைவுகளே காரணம்.

கெட்ட நினைவுகள் தான் பல பிரிவுக்கு காரணம். நல்ல நினைவுகளை இன்றிலிருந்து உருவாக்கினாலே புதிய வாழ்க்கையை மறுபிறவி எடுக்கும் அளவிற்கு உங்கள் வாழ்க்கையையே மாற்ற முடியும்.

இருவருக்கும் எது பொதுவான குணம் உள்ளதோ அது எவ்வளவு சரியதாக இருந்தாலும் அதை முடிந்த அளவு தினசரி வாழ்க்கையில் கொண்டு வாருங்கள்.

இருவருக்கும் TVசினிமா பார்க்கப்பிடிக்குமா.. இருவருக்கும் அதில் ஒத்துவரும் ஏதேனும் ஒன்றை பிடித்துக்கொள்ளுங்கள். உடன் இருங்கள். நடக்கப்படிக்குமா ஓடப்பிடிக்குமா ஆடப்பிடிக்குமா இசைபிடிக்குமா ஆன்மீகம் பிடிக்குமா எதுவாகிலும்...

குறைந்தது 2-4 மணிநேரம் ஒன்றாக இருவருக்கும் பிடித்த விஷயத்திற்குள் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். அந்த உடன் இருத்தலில் முடிந்த வரை இருவருக்குள்ளும் நல்ல நினைவுகள் உருவாக்க முயற்சிசெய்யுங்கள். 

இது தான் சரி என்று விவாதம் செய்யாமல் இருவருக்கும் சரி என்று தோன்றுவதை கைக்கொள்ளுங்கள். அந்த நேரத்தில் கண்டிப்பாக mobile பார்ப்பது எதுவும் கூடாது.

நல்ல நினைவுகள் வளரவளர மீண்டும் உங்களுக்குள் மகிழ்ச்சி பொங்குவதை உணர்வீர்கள்.

8. உயிர் வளர்த்தல்

எல்லாவற்றையும் கணக்கிட்டுக்கொண்டே இருக்காதீர்கள். அறிவைத்தூக்கி குப்பையில் போடுங்கள்.

அன்று நீ இதை செய்தாய் அதனால் இன்று நீ இதை சுமக்க வேண்டும் என்ற இடத்திற்கு தள்ளாதீர்கள்.

நீங்கள் ஒருவருக்கு நல்லது செய்தால் அவர் திருப்பி ஏதாவது செய்யவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் நல்லது செய்தாலே உங்கள் உயிர் வளரத்துவங்கிவிடும். அது ஆற்றலை கொடுக்கும். நிம்மதியைக்கொடுக்கும். 

அவர் ஏன் எதுவும் செய்யவில்லை. நான் மட்டும் ஏன் தியாகியாக இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். சண்டை இடாதீர்கள். நீங்கள் ஒருவருக்கு நல்லது செய்வதால் பெற்ற அணைத்து ஆற்றலையும் எதிர்பார்ப்பால் சண்டை இடுவதால் இழந்துவிடுவீர்கள்.

இதை தான் கடமையைச்செய் பலனை எதிர்பாராதே என்றனர்.

நீங்கள் அதிகம் செய்யச்செய்ய உங்கள் உள்ளே உயிர்வளரும். ஆற்றல் பெருகும். மெல்ல உங்கள் துனைக்கும் உங்களை மிகவும் பிடிக்கும். அவரும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தூண்டப்படுவார். அப்பொழுதும் அவருக்கு எந்த விதத்தில் செய்யவேண்டுமோ அப்படித்தான் அவர் செய்வார். அதனால் அதுவரை கவலையும் கூடாது.
எதிர்பார்ப்பும் கூடாது. 

உங்கள் துணை வந்து ஆசையாக உங்களுக்காக ஏதாவது செய்யும் பொழுதும் அவர் உங்களுக்காக ஒரு செயல் செய்கிறார் என்று ஆனந்தப்படவேண்டுமே ஒழிய நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் செய்யவில்லையே என்று கவலைக்குள் செல்லக்கூடாது.

இது அடிமைத்தனமோ தியாகமோ இல்லை. கொஞ்சம் பொறுத்தால் உங்களுக்குள் உயிர் வளர்வதை உணர்வீர்கள். எப்பொழுதெல்லாம் வாய்ப்பு வருகிறதோ எப்பொழுதெல்லாம் உங்கள் துணை உதவி என்று கேட்கிறாரோ அப்பொழுதெல்லாம் எப்படியாவது உதவுங்கள். உங்களுக்கு வராதைத்தைகூட செய்ய முயற்சியுங்கள். ஆனால் மனநிறைவோடு அதை செய்ய வேண்டும். குழப்பம் கூடாது. எதிர்பார்ப்பு கூடாது.

time waste என்று எண்ணாதீர்கள். உங்கள் உயிர் வளர்ப்பதை விட இந்த உலகித்தில் நீங்கள் செய்யவேண்டிய விஷயம் ஒன்றுமே இல்லை.
அதற்கும் திருமணமே ஒரு நல்ல வாய்ப்பு.

நமக்கு எல்லாவற்றையும் கட்டாயாமாக்கி வாயில் திணிப்பதால் தான் ஏற்க மறுக்கிறோம் உண்மையான காரணம் தெரிந்தால் தயங்காமல் நம்மோடு இருப்பவருக்கு எது வேண்டுமானாலும் செய்வோம்.

உண்மையை உணருங்கள். எவ்வளவு முடியுமோ உங்கள் கணவருக்கோ மனைவிக்கோ செய்துகொண்டே இருங்கள். அதை செய்யும் பொழுது நிதானம் இழக்காதீர்கள். உங்களுக்குள் இருக்கும் உயிர் வளர வளர நிம்மதியும் பேராணந்ததையும் உணர முடியும்.

வெளியே நண்பர்களோடு இருக்கும் பொழுதும் வீட்டிற்குள் வந்து உங்கள் துணையோடு இருக்கும் பொழுதும் ஒரே மாதிரியான ஆனந்தத்தை உங்கள் மனம் உணரும். அதற்கு பெயர் தான் நிம்மதி. அதை விட இந்த உலகத்தில் வேறு ஒரு சாதனை இல்லை.

நன்றி
திரு லஷ்மண் #thirulakshman 

*துணை - என்பது spouse என்ற அர்த்ததில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் மூன்று பாலினத்திற்கும் இது பொருந்தும்.

திரு. லக்ஷ்மண்

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின் - திருவள்ளுவர்

தவம் செய்யும் ஒருவன் சினத்தை கொள்ளாமல் இருந்தால் அவன் உள்ளியது எல்லாம் அடைவான் - தேவநேயப்பாவாணர் உரை

****
கோபமும் கோபம் சார்ந்தவைகளும்…

*****
கோபம் எல்லாருக்கும் தானே வருகிறது? அதில் தவறென்ன உள்ளது?

கோபம் என்பது ஒரே காரணியினால் வருவதில்லை. அதனால் தான் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயத்தில் கோபம் வருகிறது. 

எ.கா : 

ஒருவருக்கு பெண்கள் ஆடையை புதுமையாக அணிந்தால் வருகிறது.
புதுமையாக ஆடை அணியும் பெண்ணிற்கு ஒருவர் பொய் சொன்னால் கோபம் வருகிறது

பொய் சொல்வது இயல்பான விஷயம் என்று கருதுபவருக்கு ஒருவர் குறை சொன்னால் கோபம் வருகிறது.குறை சொல்வதை இயல்பாக நினைக்கும் ஒருவருக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் தரவில்லை என்று கோபம் வருகிறது.

ஊதியம் கொஞ்சமாக வந்தாலும் போதும். எளிமையாக வாழ்வோம் என்று நினைக்கும் ஒருவருக்கு பெண் ஆடையை புதுமையாக அணிந்தால் கோபம் வருகிறது.

****

இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இந்த சுழற்சியை முழுவதும் உணர்ந்தால் போதும். கோபம் என்பது தாழ்ந்த உணர்ச்சி என்பது விளங்கும்.

நம் மனதிற்கு ஏற்பதை பார்க்கும் பொழுது ஆற்றல் கொஞ்சம் உயர்கிறது. நம் மனதிற்கு ஏற்பில்லாதவற்றை பார்க்கும் பொழுது ஆற்றல் குறைகிறது.

கோவம் என்பது ஆற்றல் குறைந்த நிலை. 

மனதிற்கு ஒவ்வாத விஷயத்தை பார்த்ததும் ஆற்றல் குறைவதால்  மனம் ஆற்றல் குறைந்ததும்  கோபத்தை எடுத்துக்கொள்கிறது. 

கோபம் கொள்வதால் ஆற்றல் இழக்கிறோம். தொடர்ந்து கோபத்தை வளர்த்தால் ஆற்றல் கொஞ்சம் கூட மிஞ்சாது.

கால் தவறி விழுகிறோம். உடனே எழுவதற்கு பதில் மேலும் மேலும் விழுந்துகொண்டே இருக்கிறோம்.

மனதை கவனித்தால் கோபம் வரும் புள்ளியை கண்டடைந்துவிடலாம்.
மற்றபடி கோபத்தில் நல்லவைகள் இல்லை.

2. தவறானவர்கள் மேல் கோபப்படுவதில் என்ன தப்பு இருக்கிறது?

ஒருவர் நம்மை கோபப்டுத்தும் பொழுது அவர் நமக்கு தப்பானவராக தோன்றலாம். அவர் தப்பானவர் என்று முடிவுக்கு வரும்பொழுது மேலும் கோபம் அதிகரிக்கும். நாம் அவருக்கு செய்த நண்மை நினைவுக்கு வர மேலும் மேலும் கோபம் அதிகரிக்கும். நாம் நல்லவராகி விடுவோம்.  சக மனிதனை தப்பாக நினைக்கும் பொழுதே நாம் ஆற்றலை இழக்கத்துவங்கி விடுகிறோம். அதை தடுக்கவே முடியாது.

அதற்கு பதிலாக

1. ஒருமுறை தவறாக நடந்துகொண்டால் ,

அவர் தப்பானவர் இல்லை. அவருக்கும் நமக்கும் மனதளவில் வேற்றுமை உள்ளது. அதனால் அவருடைய இயல்பும் நம் இயல்பும் வேறு வேறாக உள்ளது. அதை நாம் தவறாக எதிர்தன்மையோடு அணுகுகிறோம். அவருக்குள்ளும் உயிர் தான் இருக்கிறது. உண்மை தான் உயிராக ஒளிர்கிறது. அவரது குணங்களில் உங்களுக்கு ஒற்றுப்போகும் குணங்களை எடுத்துக்கொண்டால் அவர் நண்பராக தெரிவார். அவர் முரண்படும் இடங்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

2. உங்களை மீண்டும் மீண்டும் காயப்படுத்துகிறார் என்றால்... 

அவர் தப்பானவர் இல்லை. ஆனால் திரும்ப திரும்ப நம்மிடம் தப்பு செய்ய அவர் தூண்டப்படுகிறார் என்று புரிந்து கொண்டால் கோபம் குறையும். 

அவர் ஏன் நம்மிடம் மீண்டும் மீண்டும் நாம் விரும்பாத வண்ணம் நடந்துகொள்கிறார் என்ற கேள்வியை கேட்டு விடையைத்தேடிச்சென்றால் அவருக்கு பிடிக்காத ஏதோ ஒன்றை நாம் அவரை செய்ய சொல்லியிருப்போம். அல்லது அவருக்கு பிடிக்காத ஒன்றை அவர் சுமந்த கொண்டிருப்பார். அந்த சுமைதந்த அழுத்ததில் நமக்கு பிடிக்காத வாறு நடந்து கொள்ளலாம்.

ஒன்று நம்மை காயப்படுத்திய புள்ளியில் அவரோடு பழகுவதை தவி்க்கலாம் அல்லது மீண்டும் அவரை நம்புவதை தவிர்கலாம் அல்லது அவரை விட்டு மொத்தமாக விலகி நிற்கலாம். 

ஆனால் மனதளவிலும் அவர் மேல் கோபம் மட்டும் இருக்கவே கூடாது. முடிந்தவரை அழித்துவிடுங்கள். பழைய கோபங்களை எல்லாம் அவருக்கு ஏதோ நியாயம் இருக்கும் என்று அதன் மேல் ஒரு ஈரத்தை அன்பை பரவவிடுங்கள். நிரந்தரமான கோபம் அவரைமட்டுமல்ல நம்மையும் காயப்படுத்திக்கொண்டே இருக்கும்.

கோபத்தை கையாள்வதில் சிக்கல் அதிகம் உள்ளவர்கள் யார்?

சமைக்கப்பிடித்தவர்கள்
வண்டியோட்ட பிடித்தவர்கள்
காவல் துறை ராணுவம் போன்ற பாதுகாப்பு துறைகளில் உள்ளவர்கள்
நெருப்பு சம்மந்தபட்ட ஆயுதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாட்டம் கொண்டவர்கள்
செல்போனை அல்லது வீட்டுப்பொருட்களை அதிகம் கைதவறி விடுபவர்கள்

இவர்கள் அனைவருக்குமே பெரும்பாலும் தைரியம் அதிகம் இருக்கும். அது கோபத்தின் ஆற்றல் நிறைந்த நிலை. அந்த தைரியத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அது கீழிறங்கி கோபமாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீரம் இருவரையும் பாதுகாக்கும். உயர்ந்த ஆற்றல்
கோபம் இருவரையும் அழிக்கும். தாழ்ந்த ஆற்றல்.

எப்படி வழிகாட்டியாக இருக்கும் ஒருவர் குறை சொல்லாமல் இருக்க வேண்டுமோ அதே போல வீரம் உள்ளஒருவர் எக்காரணம் கொண்டும் கோபம் உள்ளவராக மாறக்கூடாது. அது தான் அவரின் யோகமாக இருக்க வேண்டும்.

“Anger should be expressed. - Any anger that is not coming out, flowing freely, will turn into sadism, power drive, stammering, and other means of torturing.” - Bruce lee

கோபம் வந்துவிட்டால் காட்டிவிடவேண்டும் என்று நான் மிகவும் மதிக்கும் புரூஸ்லி கூறியுள்ளார். அதுவும் சரி தான். 

கோபம் வந்துவிட்டால் காட்ட வேண்டாம். அதே சமயம் அடக்கவும் வேண்டாம்.

கோபத்தை  வருவதையே உருவாவதையே தடுக்க வேண்டும். வந்துவிட்டால் அதை வளர்க்ககூடாது. அப்பொழுதே அந்த உண்ர்வை அழித்துவிடவேண்டும்.  அது தான் ஆற்றலை பாதுகாக்கும். மனதில் சுமந்துகொண்டிருந்தால் bruceelee கூறுவது போல் தான் நடக்கும். 

அடக்குவது வேறு உருவாகாமல் மனதை கவனித்து தடுப்பது வேறு. உருவாகிய பிறகு மனதில் அதை எடுத்துக்கொள்ளாமல் அழிப்பது வேறு.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் - திருவள்ளுவர்

( யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும். )

மேலும் நம் வயதில் சிறியவரிடம் கோபம் படும் பொழுது அவர்கள் நம்மை மீண்டும் தாக்க முற்படும் பொழுது நாம் அவர்களை விட மிகவும் குறைந்த அனுபவம் மிக்கவராக தாழ்ந்தவராகிவிடுவோம்.  தன் குழந்தையாக இருந்தாலும் வயதில் குறைந்தவரிடம் கோபம் கொண்டால் என்றைக்குமே நிம்மதி கிடைக்காது. வலி வேதனை மட்டுமே மிஞ்சும்.

மேலும் கோபத்தை பற்றி பேசுவோம்.

நன்றி
திரு லஷ்மண் #thirulakshman

திரு. லக்ஷ்மண்

ஆற்றலை சேமிப்பது எப்படி?- 1 - கோபத்தை விடுதல்

முன் சுருக்கம் :
ஆற்றல் குறையும் பொழுது நாம் எதிர்மறை எண்ணங்களால் உந்தப்படுகிறோம்.ஆற்றல் அதிகமாகும் பொழுது நாம் நேர்மறை எண்ணங்களால் உந்தப்படுகிறோம்.

ஆற்றல் குறைய குறைய சாத்தான் தன்மையை அடைகிறோம்..
ஆற்றல் அதிகமாக அதிகாமாக கடவுள் தன்மையை அடைகிறோம்..

உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களும் ஆற்றலை சேமித்து கடவுள் தன்மையை அடைய முடியும்.   அதனால் தயங்காமல் ஒவ்வொரு வழியாக கடைபிடியுங்கள். வாழ்க்கையில் நிம்மதி பரவும்.

ஆற்றல் குறித்து இரண்டு பகுதிகளாக  எழுதியிருக்கிறோம். அடுத்த கட்டமாக ஆற்றலை சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்..

*****

ஆற்றலை சேமிப்பதில் முதல் கட்டம் ஆற்றல் வீணாவதை தடுக்க வேண்டும். புதிதாக சேர்ப்பதை விட இருப்பதை காப்பது தான் முதல் அவசியம்.

நாம் ஆற்றலை இழப்பதில் முதல் பங்கு கோபத்திற்கு உள்ளது.

வேதாத்திரி மகரிஷி கூறும் பொழுது கோபமும் கவலையும் ஆற்றல் இழப்பை மிக விரைவாக செய்துவிடுவதாக கூறுவார்.

கோபம் வரும் பொழுது அது எந்த காரணமாக இருந்தாலும் உங்கள் பக்கம் எவ்வளவு நியாயமாக இருந்தாலும் கோபப்படவே கூடாது.

கோபப்படத்துவங்கும் பொழுது நம் பக்கம் நியாயம் இருப்பதாக தோன்றும். ஆனால் கோபப்பட்டு முடியும் பொழுது நம்முள் இருக்கும் ஆற்றல் மொத்ததையும் இழந்துவிடுவோம்.

சூரியனாக இருந்தால் - நீங்க சொன்னதை யாரும் செய்யவில்லை என்றால் கோபம் வரும். உங்களிடம் கேட்காமல் முடிவெடுத்தால் கோபம் வரும். உங்களை  சார்ந்திருக்கும் மக்கள் உங்களுக்கு எதிராக திரும்பினால் கோபம் வரும்.

சந்திரனாக இருந்தால் - நீங்கள் அசைப்பட்டது நடக்கவில்லை என்றால் உங்களை காக்கவைத்து மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கோபம் வரும்.  உங்கள் அன்பை உதாசினப்படுத்தினால் கோபம் வரும்.

செவ்வாயாக இருந்தால் - எல்லா செயலின் அடிப்படையும் தைரியம் இருக்கும். தாழ்ந்தால் கோபம் பழிவாங்கும் குணமாக மாறும்.

ராகுவாக இருந்தால் - சாப்பாடு சரியாக கிடைக்கவில்லை என்றால் கோபம் வரும்.

குருவாக இருந்தால் - பிறர் ஒழுங்காக இல்லையென்றால் கோபம் வரும். நேரம் தாழ்த்திவிட்டால்  கோபம் வரும்

சனியாக இருந்தால் - வீட்டில் யாரும் வேலை சொன்னால் கோபம் வரும் ( office ல் மாங்கு மாங்கு என்று வேலை செய்யப்பிடிக்கும் )

புதனாக இருந்தால் - உங்களை கடின உழைப்புக்கு தள்ளினால் கோபம் வரும். பத்து ரூபாய் செலவு செய்து 8 ரூபாய்க்கு வரவு வைத்தால் கோபம வரும். உங்களை தகாத வார்த்தைகளில் பேசினால் கோபம் வரும்.

கேதுவாக இருந்தால் - உங்கள் தீர்வை யாரும் மதிக்கவில்லை என்றால் உங்கள் உண்மையை யாரும் சந்தேகப்பட்டால் கோபம் வரும்.

இதில் ஒரு கோடு மட்டுமே காட்டியுள்ளேன். நிறைய விஷயங்களை சேர்க்க வேண்டும்.

****

கோபத்தை அடக்ககூடாது. அது ஆபத்தானது. அதை மொத்தமாக தவிர்க்க வேண்டும்.

கோபம் வந்தவுடன்.. 

1. எதிராளி ஆற்றல் குறைவில் உள்ளார். அதனால் அவர் அப்படி நடந்து கொண்டார். மற்றபடி அவர் நல்லவர் தான். அவரை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். 
2. அவரிடம் இருந்து விலகி இருங்கள். அது தவறில்லை. ஆனால் வெறுக்காதீர்கள். 
3. கோபத்துடம் இருக்காதீர்கள். கோபம் உங்கள் மனதை விட்டு உடனடியாக செல்லவேண்டும்.
4. உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். நீர் அருந்துங்கள். 
5. அவர் செய்த நல்லவைகளை பற்றி சிந்தியுங்கள். 

கோபம் வந்த மறுகணம் உங்களுக்குள் இருக்க வேண்டியது ஒன்றே ஒன்று தான். நாம் ஆற்றலை இழக்கப்போகிறோம். மீண்டும் இந்த ஆற்றலை பெற ஒரு வாரம் ஆகும். இப்படி இதை இழந்து நாம் நிரூபிக்க ஏதுமில்லை.

பயிற்சி :

முதலில் பதினைந்து நாட்கள் முயற்சி செய்யுங்கள். அது பற்றி அதில் நீங்கள் சந்தித்த சிக்கல்கள் குறித்தும் எனக்கு எழுதுங்கள். என்னால் முடிந்த அளவு உங்களுக்கு வழிகாட்டுகிறேன். எப்பாடு பட்டாவது கோபத்தை மொத்தமாக நீக்கி நிம்மதியை பேரிண்பத்தை அடைந்திடும் வைராக்கியத்தை மட்டும் கைகொள்ளுங்கள்.

இந்த பயிற்சியில் என்னுடன் இனைந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உங்கள் விருப்பத்தையும்   உங்களுக்கு எந்த எந்த விஷயத்தில் கோபம் வரும் என்பதை comment ல் கூறுங்கள். அல்லது என்னுடைய mail க்கோ ( thiru@timescience.org அல்லது https://gdpd.xyz/thirulakshman kubool id க்கோ தெரிவியுங்கள். 

நான் அதற்கான விளக்கத்தை சரியாக பார்க்க வழி கூறமுயற்சிக்கிறேன். ஆனால் எதுவாகினும் கோபம் கொள்ளக்கூடாது என்று முடிவு செய்துவிடவேண்டும்.

Saturday, November 28, 2020

திரு. லக்ஷ்மண்

நம் நிரந்தரமான மகிழ்ச்சியை உருவாக்கும் காரணிகள் என்ன என்ன?கெடுக்கும் காரணிகள் என்ன? ஆற்றலில் நிறை எது குறை எது?  நிரந்தரமான மகிழ்ச்சியை எப்படி மீட்டுக்கொள்வது.

***

ஆற்றல் குறைபாடு பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். அது பெருமாபாலனவர்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததை தொடர்ந்து வரும் அழைப்புகளும் கலந்தாய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. அதன் தொடர்ச்சியே இந்த பதிவு.

புதிதாக படிப்பவர்களுக்கும் ஏற்கனவே படித்தவர்களும் முன் சுருக்கத்தை முதலில் தருகிறேன். பின்னர் புதிய விஷயத்தைத்தருகிறேன். ( கீழே commentல் அதன் முழு பதிவின் சுட்டியைத்தருகிறேன் )

RECAP :

ஒவ்வொரு ஆற்றலிலும் நேர்மறை தன்மை எதிர்மறை தன்மை என்ற இரண்டு உண்டு.

வழிகாட்டுதல் vs குறை சொல்லுதல். 

இரண்டுமே குருவினுடைய ஆற்றல் தான். முதலாவது இருவருக்கும் மகிழ்ச்சியைத்தரும். இரண்டாவது இருவருக்கும் வருத்தத்தை தரும்.

நாம் ஆற்றல் நிறைவாக இருக்கும் பொழுது நேர்மறை தன்மையை எடுத்துக்கொள்கிறோம். நமக்கு ஆற்றல் குறைபாடு ஏற்படும் பொழுது எதிர்மறை தன்மையை எடுத்துக்கொள்கிறோம். 

அதாவது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது வழிகாட்டுகிறீர்கள்
நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாத பொழுது குறைசொல்ல முற்படுகிறீர்கள்

இங்கே மகிழ்ச்சி என்பதை ஆற்றல் நிறையாக எடுத்துக்கொள்கிறோம். நம் புரிதலுக்காக. ( இதவும் மாறும். அது பின்னாளில் கூறுகிறேன் )

இதன் மூலம் நமக்கு ஆற்றல் நிறைவாக இருந்தால் ஒருவரிடம் இருக்கும் நேர்மறைத்தன்மையை நோக்கி பேசுகிறோம். ஆற்றல் குறைபாடு இருந்தால் எதிர்மறைத்தன்மையை நோக்கி பேசுகிறோம்.

இதில் இருந்து 4 நிலைகளை பார்ப்போம்.

1. உங்களிடம் இருந்து துவங்கும் நேர்மறைத்தன்மை எதிரில் இருப்பவரிடம் நேர்மறைத்தன்மையை உருவாக்கினால் , இருவரும் ஆற்றல் நிறைந்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அங்கே மகிழ்ச்சி பொங்கும்.  

இருவரும் ஒருவருக்கு ஒருவர் வழிகாட்டுவது.

2.உங்களிடம் இருந்து துவங்கும் நேர்மறைத்தன்மை எதிரில் இருப்பவரிடம் எதிர்மறைதன்மையை தோற்றுவித்தால் நீங்கள் இப்பொழுது ஆற்றல் மிக்கவராக இருக்கிறீர்கள். அவரிடம் இப்பொழுது ஆற்றல் குறை உள்ளது.

நீங்கள் வழிகாட்டுகிறீர்கள். ஆனால் அவர் குறை சொல்வதாக பார்க்கிறார். பிரச்சனையில் தொடங்கும்.

3. உங்களிடம் இருந்து துவங்கும் எதிர்மறைதன்மை எதிரில் இருப்பவரிடம் நேர்மறைத்தன்மையை தோற்றுவித்தால் நீங்கள் இப்பொழுது ஆற்றல் குறைந்தவராக  இருக்கிறீர்கள். அவர் இப்பொழுது ஆற்றல் நிறைந்தவராக இருக்கிறார்.

நீங்கள் குறை சொல்கிறீர்கள். ஆனால் அவர் அதை வழிகாட்டுவதாக எடுத்துக்கொள்கிறார்.

4. உங்களிடம் இருந்து துவங்கும் எதிர்மறைதன்மை எதிரில் இருப்பவரிடம் எதிர்மறைத்தன்மையை தோற்றுவித்தால் இருவரும் ஆற்றல் குறைபாடோடு இருக்கிறீர்கள். 

நீங்களுயும் குறை சொல்கிறீர்கள். அவரும் எரிச்சல் அடைந்து எதிர்வினை ஆற்றுவார். பிரச்சனையில் சென்று முடியும்.

இதில் 2வாது நிலையில் நீங்கள் தொடங்கும் பொழுது நல்லவிதமாக தொடங்கி அவர் எதிர்மறையாக பேசி பின்னும் நீங்கள் நிதானமாக இருந்தால் உங்களுக்கு ஆற்றல் மிக மிக அதிகம். நீங்கள் கடவுள் தன்மையில் இருக்கிறீர்கள். ஆனால் அதுவே உடனடியாக நீங்களும் எதிர்மறைக்கு வந்து விட்டால் முன்பு உங்களிடம் இருந்தது பாவனை மட்டுமே. அல்லது குறைந்த ஆற்றல்.

ஆற்றல் எவ்வளவு நிறைகிறதோ அவ்வளவு தூரம் நீங்கள் இறைத்தன்மையில் இருக்கிறீர்கள்.ஆற்றல் எவ்வளவு குறைகிறதோ அவ்வளவு தூரம் நீங்கள் சாத்தனின் தன்மையில் இருக்கிறீர்கள்.

இந்த ஒட்டுமொத்த கோட்பாட்டில் நீங்கள் உணரவேண்டியது சுருக்கமாக 'தீதும் நன்றும் பிறர் தரவரா'

இந்த தெளிவு வரும் பொழுது ஒருவர் நம்மை குறை சொன்னாலும் அவரை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமக்கு வாய்க்கும். மேலும் அவர் அந்த நிமிடம் ஆற்றல் குறைவாக இருந்தார். அதனால் தவறாக நடந்துகொண்டார். அதை பெரிது படுத்தி நமக்குள் எதிர்மறை நினைவை உருவாக்கிவிடக்கூடாது என்ற உணர்வு இருக்கும். அது நம்மை எப்பொழுதும் ஆற்றல் குறைவில்லாமல் பாதுகாக்கும்.

முக்கிய குறிப்பு : இந்த நிகழ்வில் உங்கள் பக்கம் நியாயம் எதிராளி நியாயம் என்றெல்லாம் பிரித்துப்பார்க்கவேண்டியதில்லை. யாரையும் மன்னிப்பதாகவும் நினைக்ககூடாது. புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

****

உங்களுடைய ஆற்றலில் குறை எது நிறை எது?

1.  தலைமைப்பண்பு மிக்கவரா..

ஆற்றல் நிறை - பொறுப்புணர்வு. எடுத்த காரியத்தை முடிக்கும் தன்மை.

ஆற்றல் குறை - அதிகாரம். Manipulation மூலம் காரியத்தை சாதிப்பது

2. உணர்வுப்பூர்வமான மனிதரா..

ஆற்றல் நிறை - புதிதாக பழகுபவரிடம் தனக்கு பிடித்தைவை இருந்தால் மிக வேகமாக நெருங்குவது.

ஆற்றல் குறை - ஏற்கனவே பழகுபவரிடம் ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் கூட மிக வேகமாக விலக நினைப்பது.

3. தைரியமான மனிதரா..

ஆற்றல் நிறை - பாதுகாப்பு உணர்வு. உயிரை காக்கும் தன்மை. காப்பாற்றுவது

ஆற்றல் குறை - அடிப்பது, பழிவாங்குவது, கொலை செய்யும் வரை தோன்றுவது. 

4. உணவு பிரியரா...

ஆற்றல் நிறை -  புதிய விஷயங்களை கண்டடைவது. புதிய பாதைகளை. Upgrading. தனித்தன்மையை விரும்புவது.

ஆற்றல் குறை - அகங்காரம். தனக்கு மட்டுமே ஒரு விஷயம் தெரியும் என்ற மனநிலை

5. பழமையை வரலாற்றை விரும்புபவரா..

ஆற்றல் நிறை - வழிகாட்டுவது. புகழ்வது.

ஆற்றல் குறை - குறை சொல்வது. குற்ற உணர்வு தருவது.

6. உழைப்பை விரும்புபவரா

ஆற்றல் நிறை - கடின உழைப்பு. தயாள மனம். அனைவருக்கும் உதவுவது.

ஆற்றல் குறை - சந்தேகம். தயக்கம். பயம்

7. அறிவு ஜீவியா

ஆற்றல் நிறை - நினைவு சக்தி. அனைத்தையும் நினைவில் நிறுத்தி அதன் மூலம் உதவுவது. அறிவின் மூலம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவது. நல்ல படிப்பு. திறமை.

ஆற்றல் குறை - அறிவுத்திமிர். ஒவ்வொருவரை பற்றியும் எதிர்மறை நினைவுகளை அதிமாக்கிக்கொள்வது.. சுயநலம். பதற்றம். எதிர்காலம் குறித்த பயம்.

8. தீர்வு சொல்பவரா

ஆற்றல் நிறை - பிரச்சனை என்று யார் வந்தாலும்  எப்படியாவாது தீர்வு சொல்வது.

ஆற்றல் குறை - தீர்வை விட்டு விட்டு பிரச்சனையை நோக்குவது.
வாழ்க்கையே பிரச்சனை என்று நினைப்பது. 

9. அழகு விரும்புபவரா

ஆற்றல் நிறை - தானும் தன்னை சுற்றியவை அனைத்தையும் அழகாக பார்ப்பது. அழகாக்குவது.

ஆற்றல் குறை - அழகின்மையை வெறுப்பது. அழகுத்திமிர்.

*******

இந்த பட்டியலை பல நூறு மடங்கு அதிகமாக்க வேண்டும். புரிந்துகொள்ளும் பொருட்டு சுருக்கமாக தந்திருக்கிறேன். ஆனால் பிரிவுகள் இந்த 9க்குள் தான் வரும்.

எல்லாவற்றையும் படியுங்கள். எந்த எந்த நிறை குணம் நேர்மறை குணம் இருக்கிறதோ அதை எதிர்மறையிலும் உங்களுடைய குணம் தென்பட்டால் ... 

இனி எதிர்மறை குணத்தை செய்யத்தோன்றும் பொழுது நிதானித்து அந்த இடத்தை தவிர்த்து உங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்து ஆற்றலை ஏற்றிக்கொண்டு மீண்டும் சிந்தியுங்கள். அப்பொழுது நேர்மறை குணமே மிஞ்சும். எதிர்மறை இருக்காது. அந்த நேர்மறையை மற்றவருக்கு தாருங்கள்.

இதை நாம் ஒவ்வொருவரும் கடைபிடித்தால் நேர்மறை ஆற்றல் மேலோங்கி எதிர்மறை ஆற்றல் குறையத்துவங்கும். 

****

எது நேர்மறை எது எதிர்மறை என்ற குழப்பம் வந்தால் , அது இன்னொருவரை சந்தோஷப்படுத்துகிறதா அல்லது நல்ல மாற்றத்தை உருவாக்குகிறதோ அது நேர்மறை ஆற்றல். இன்னொருவரை கஷ்டப்படுத்துகிறதா அல்லது சிக்கலை ஏற்படுத்துகிறதோ அது எதிர்மறை ஆற்றல். 

முக்கியக்குறிப்பு - நான் கூறும் எதை செய்யும் பொழுதும் அது உங்கள் அகத்திற்கு நிறைவைத் தர வேண்டுமே தவிர குறையைத்தரக் கூடாது. உங்களை கஷ்டத்தில் ஆழ்த்தி நான் எதையும் எப்பொழுதும் செய்யச்சொல்லமாட்டேன். கொஞ்சம் நிதானிக்க மட்டுமே கூறுவேன். கவனம் தேவை. குழப்பம் இருந்தால் இங்கே கேளுங்கள். அல்லது மடல் ( thiru@timescience.org) அனுப்புங்கள்.  

நன்றி

திரு
#Thiru #thirulakshman

திரு. லக்ஷ்மண்

எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி? நம்மிடம் எதிர்மறையாக நடந்து கொள்பவர்களிடம் நேர்மறையாக நடந்துகொள்வது சாத்தியமா ? 

மனதை கடப்பது எப்படி? கடவுள் தன்மை என்றால் என்ன?

*****
வாழ்க்கை பற்றி எனக்கு ஏற்பட்ட பல தரிசனங்களில் மிக மிக முக்கியமானது இது. இந்த தரிசனம் என்னுடைய தனிசொத்து அல்ல. 

இவை என்னுடன் எண்ணத்தாலும் வாக்காலும் செயலாலும் முரண்பட்ட முரண்படும் ஒவ்வொருவரின் பெரும் கருணையினால் நான் கண்டடைந்தவைகள். அதனால் என்னிடம் முரண்பாடுள்ள ஒவ்வொருவருக்கும்  இந்த தரிசனத்தில் பங்குண்டு.

நான் எழுதியிருப்பதை முழுவதும் உங்கள் மனம் உள்வாங்க முடிந்தால் உங்கள் வாழ்க்கையின் பல அடிப்படை பிரச்சனைகளில் இருந்து வலிகளில் இருந்து நிரந்தர விடுதலையை தரும் சாத்தியம் உள்ளது என்று ஆழமாக நம்புகிறேன்.  அதனால் கொஞ்சம் நேரம் ஒதுக்கி இறுதி வரை படியுங்கள்.

******
எப்பொழுதும் நேர்மறையாக சிந்திப்பது  சாத்தியமா ? 

சமீபத்தில் என்னுடைய ஜோதிடம் மற்றும் மனநலம் சம்மந்தமான ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக , ஒரே செயலுக்கு நேர் மறை எதிர் மறை என்ற இரண்டு தன்மைகள் உள்ளது என்பதை கண்டடைந்தேன்.

வழி காட்டுதல் / குறை கூறுதல்
தலைமைப் பொறுப்பு / அதிகாரம்
தீர்வை நோக்குதல் / பிரச்சனையை நோக்குதல்
விருப்பு / வெறுப்பு

இப்படி இன்னும் ஆழ ஆழ சென்றால் ஒவ்வொரு செயலிலும் நேர் மறை தன்மை எதிர் மறை  தன்மையை என்று இரண்டு உண்டு என்பது புலப்படும்.�� இதில் முக்கியமான விஷயம் , இவை எதிர் தன்மையா இருந்தாலும் ஒன்றுக்கொண்டு நெருக்கமான தொடர்பு கொண்டது. 

வழி காட்டுதல் / குறை கூறுதல் என்பதை எடுத்துக்கொள்வோம்.

நாம் நல்ல மனநிலையில் இருக்கும் பொழுது வழிகாட்டுவோம்.
நம் மனநிலை அவ்வளவு பலமாக இல்லாத பொழுது அதே வழிகாட்டுதலை குறையாக கூறுவோம்.

வழிகாட்டுதல் இருவருக்கும் மகிழ்ச்சியைத்தரும். குறை கூறுதல் இருவருக்கும் மகிழ்ச்சி இன்மையை எதிர்மனநிலையைத்தரும்.

 எடுத்துக்காட்டாக ஒரு நாள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். அப்பொழுது ஒருவரை சந்தித்தால் அவரைபற்றிய மகிழ்வான விஷயத்தை மனம் எடுத்துக்கொள்ளும்.  

அதே வேறொரு நாளில் மிகவும் அயர்ச்சியில் ஆற்றல் குறைபாட்டில் இருந்தால் அதே நபரை சந்தித்ததும் அவரைபற்றிய அயர்வான எதிர்மறையான விஷயத்தை மனம் எடுத்துக்கொள்ளும்.

அதனால் ஒருவரை பற்றி நல்லதும் கெட்டதும் நம் உயிரின் ஆற்றல் மூலமே முடிவு செய்யப்படுகின்றது. அதனால் ஆற்றலை பெருக்கினால் எல்லா நேரத்திலும் நிதானம் இழக்காமல் நேர்மறை சிந்தனையோடே வாழ முடியும். 

இது ஏதோ motivation க்காக பேசுகிறேன் என்று நினைக்கவேண்டும். நான் உண்மையை மட்டுமே பேசுவேன். ( motivation தவறல்ல. ஆனால் நான் அதை செய்யவில்லை)

அந்த ஆற்றலின் பெயர் என்ன? 

அந்த ஆற்றலை தான் இறைபேறாற்றல் என்று கூறுகிறோம்.

நாம் நேர் மறை செயல் செய்யும் பொழுது அந்த ஆற்றல் நமக்கு கூடும். இறை ஆற்றல் அதிகம் ஆகும் பொழுது  நேர்மறை செயல் தொடர்ந்து செய்யத்தூண்டப்படுவோம். அது நமக்கும் பிறருக்கும் ஒன்றுபோல மகிழ்ச்சியைத் தரும்.

அதுவே ஆற்றல் குறைய தொடங்கினால் யார் மீதோ அல்லது எல்லார் மீதும் ஒரு வெறுப்புணர்வு உண்டாக்கும். நாம் சாத்தானாக மாறுவோம்.அது எதிர்மறை செயல் செய்யத்தூண்டும். அது நமக்கும் பிறருக்கும் கஷ்டத்தைத்தரும்.

ஏன் ஆற்றல் குறைந்து சாத்தான் ஆகிறோம்?

எதிர்மறை எண்ணங்களோ செயல்களோ நம் ஆற்றலைக் குறைக்கிறது.
ஆற்றல் குறையும் பொழுது எதிர்மறை எண்ணங்களையோ செயல்களையோ மேலும் மேலும் செய்யத்தூண்டுகிறது. இது ஒரு சுழற்சி. இது தான் சாத்தானின் தன்மை. இந்த சுழற்சியை உடைத்தால் தான் ஆற்றல் பெருகும்.��

எப்படி ஆற்றலை பெருக்கிக்கொள்வது? 

ஞான மார்கத்தில் நம் உடலை சரி செய்வது. நம் சுவாஸத்தை சரி செய்வது. நம் எண்ணங்களை சரி செய்வது. நம் மனதை ஆள்வது.நமக்குள் இருக்கும் கடவுள் தன்மையை அடைவது. இது ஒரு வழி.

இதையே உலகியல் இருப்பவர்களுக்கு கர்மயோகம். அதாவது செயல்.

உங்களை மகிழ்விக்கும் காரியங்களில் ஈடுபடுவது.
பிறரை மகிழ்விக்கும் காரியங்களில் ஈடுபடுவது.
மன்னிப்பது மன்னித்து ஏற்றுக்கொள்வது
ஒருவரின் வலியை போக்குவது. 
மனம் இறங்குவது.
உங்களுக்கு பிடித்தவரைகள் சந்திப்பது. 
எதெல்லாம் உங்களுக்கும் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியை தருகிறதோ அது ஆற்றலை கூட்டும். 

உதாரணத்திற்கு நீங்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கும் பொழுது தானாக பிறரை மன்னிக்க தோன்றும் இல்லையா நமக்கு தீங்கு செய்தவருக்கும் நல்ல செயல் செய்யத்தூண்டும் இல்லையா அது தான் கடவுள் தன்மை.

நான் நல்ல செயலை செய்தாலும் பிறர் எதிர்மறை செயலை செய்கிறார்களே. அது ஏன்?�

நீங்கள் அந்த நொடியில் ஆற்றல் அதிகமாக வைத்திருப்பதால் நல்ல  செயல் செய்கிறீர்கள்.அவர்கள் ஆற்றல் குறைவில் இருக்கிறார்கள் அதனால் எதிர்மறை செயல் செய்கிறார்கள்.�

நீங்கள் நல்லது செய்தும் உங்களை தொந்தரவு செய்ய நினைக்கிறார் என்றால் நீங்கள் யோசிக்க வேண்டியது அவர் ஆற்றல் குறைவில் இருக்கிறார் என்பது மட்டுமே. அவர்கள் உங்களுக்கு காயம் ஏற்படுத்தியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

இன்னும் கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா?

மனைவியை / கணவனை இங்கு உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.��

இருவரும் நல்ல மனநிலை :��

நீங்கள் நல்ல மனநிலையோடு உங்கள் மனைவியிடம் பேசுகிறீர்கள். அவர்களும் நல்ல மனநிலையோடு உங்களிடம் பேசினால்.அந்த இடம் கடவுள் தன்மை அதிகம் ஆகும். அன்பு அதிகம். இருவரை பற்றி நல்ல நினைவுகள் உருவாகும். அது இன்னும் பல நல்ல நினைவுகளை கொண்டு வந்து சேர்க்கும்.  

இதுவே தான் அம்மா அப்பா குழந்தைகள் உறவுகள் நண்பர்கள் என்று அனைவருக்கும் பொருந்தும்.��

ஒருவர் நல்ல மனநிலை இன்னொருவர் எதிர் மனநிலை : 

நீங்கள் நேர்மறை செயலை செய்தாலும் உடன் இருப்பவர் ( எ.கா உங்கள் மனைவி ) எதிர்மறை செயலை செய்யும் பொழுது நீங்களும் எதிர்மறை செயலை செய்ய தூண்டப்படுவீர்கள். ��அப்படி தூண்டப்படுவதை ஏற்று எதிர்மறை செயலை நீங்கள் செய்யதால் இன்னொருவரை மேலும் எதிர்மறை செயலை செய்ய வைப்பீர்கள். 

இந்த தொடர்ச்சி உங்களுக்குள் இருக்கும் இறை ஆற்றலை மொத்தமாக அழித்துவிடும். இருவரும் சாத்தானின் நிலைக்கு தள்ளப்படுவீர்கள். இது அன்றோடு முடியாது.

இருவரைப்பற்றிய மிக மோசமான நினைவுகள் இருவருக்குள்ளும் உருவாக்கும். அது அடுத்த கட்ட பிரச்சனைகளுக்கு விதையாக மாறும்.

இங்கே என்ன நடந்தது? 

நீங்கள் முதலில் நேர்மறை செயல் செய்த பொழுது கடவுள் தன்மை இருந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது எதிர்மறை செயல் வந்ததும் அந்த கடவுள் தன்மை இழந்து சாத்தானின் தன்மைக்கு தள்ளப்பட்டிருக்கிறீர்கள்.இது தான் மனம் போன போக்கில் செல்வது.

உங்களிடம் ஆற்றல் இருந்திருக்கிறது. ஆனால் அதிகம் இல்லை. அதனால் அந்த ஆற்றலை இன்னொருவரின் எதிர் செயல் மொத்தமாக அழித்துவிட்டது. அதனால் அவரை பற்றியோ அவருடைய எதிர்மறை செயல்களை பற்றியோ எந்த அக்கறையும் கொள்வதில் அர்த்தம் எதுவும் இல்லை.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களுடைய ஆற்றல் குறைந்த வாக இருந்ததால் சீக்கிரம் தீர்ந்துவிட்டது. அதை பெருக்கிக்கொள்வது  தான் நிரந்த விடுதலை.. 

எதிர்மறை செயல்கள் எவ்வளவு வந்தாலும் நிதானம் இழக்காமல் இருக்க வேண்டுமானால் அபரிவிதமான ஆற்றல் வேண்டும். பிறரை காரணம் காட்டுவது உண்மையான தீர்வு ஆகாது.

 இதை புரிந்துகொண்டால் மீண்டும் அதை செய்ய மாட்டீர்கள். மனதை கடந்துவிட முடியும்.இதை தான் 

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று கணியன் பூங்குன்றனார் கூறினார்.�

என்னை தொந்தரவு செய்பவரிடம் எதிர்மறை செயல் செய்யாமல்  தவிர்ப்பது எப்படி?

நான் மேலே சொன்னது போல் , உங்களை ஒருவர் தொந்தரவு செய்கிறார், உங்களை எதிர்மறை செயலை ஒருவர் செய்யத்தூண்டுகிறார் என்றால் அவரைப்போலவே நீங்களும் ஆற்றல் குறைபாட்டில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உடனடியாக அவரிடம் இருந்து விலகிச்சென்று உங்கள் ஆற்றலை பெருக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். ( எப்படி ஆற்றலை பெருக்குவது ? என்று மேலே விடை கூறியிருக்கிறேன் ). 

பிரச்சனை துவங்கும் முன்பே அங்கிருந்து விலகிவிட்டால் அவர்களிடம் உங்களை பற்றிய தவறான எண்ணம் இல்லாமலோ அல்லது குறைவான பாதிப்புடனோ நீங்கள் தப்பித்துவிடலாம். அவரையும் தப்பித்துவிடலாம். இது பல எதிர்கால பிரச்சனைகளில் இருந்து இருவரையும் காத்துவிடும்.

முக்கியமான விஷயம்.. உங்கள் பக்கம் ஆயிரம் நியாயம் இருந்தாலும்  ஒரு எதிர்மறை செயலை நீங்கள் செய்தால் இன்னொருவரை கஷ்டபடுத்தினால் அது உங்கள் ஆற்றல் குறைபாட்டையே காட்டும். அப்பொழுதும் நீங்கள் ஆற்றலை பெருக்கத்தான் வேண்டும். அவர்களை பற்றி விமர்சிக்ககூடாது.

சரி. அந்த சூழலில் இருந்து அவரிடம் இருந்து விலக முடியவில்லை என்றால் என்ன செய்வது?

அவருடைய நல்ல விஷயங்களை பற்றி பேசுங்கள். அவரை புகழுங்கள். அவருடைய எல்லா நல்லவைகளையும் நினைவுபடுத்துங்கள். அவருக்கு எப்படியாவது ஆற்றல் தரப்பாருங்கள். அவர் தன் எதிர்மறை செயல்பாட்டை உடனே நிறுத்திவிடுவார்.

இதை  அந்த உயிரும் உங்களைப்போன்ற உயிர் இந்த நிமிடம் அந்த உயிர் கொஞ்சம் ஆற்றல் குறைபாடோடு உள்ளது என்று நினைத்துச்செய்ய வேண்டுமே ஒழிய அதை வைத்து அந்த உயிரை எடை போடக்கூடாது. நீங்கள் ஏதோ அவரை மன்னிபவராக நினைத்துக்கொள்ளவோ கூடாது. மிகுந்த சமநோக்கோடு அதை செய்யவேண்டும்.

அந்த முழுமையான நேர்மறை செயல் , அவருக்கு ஆற்றலை பெருக்கும். ஆற்றல் பெருகியதும் அவர் இப்பொழுது மகிழ்ச்சியில் திளைப்பார். அவர் உங்களுக்கு ஆற்றல் தருவார். உங்களை மகிழ்விக்க நினைப்பார். புகழ்வார். உங்களை கொண்டாடுவார். எல்லாம் சரியாகும்.  ஒரு துளி காயம் கூட இல்லாமல் நீங்கள் இருவரும் தொடர்ந்து பயணிக்க முடியும்.

இந்த மேஜிக்கை ஒரே ஒரு முறை அனுபவித்துவிட்டால் வாழ்க்கையில் மீண்டும் யாரிடமும் தொடர் வாதம் செய்யவே மாட்டீர்கள். கலந்துரையாட மட்டுமே முடியும். யாரையும் தவறாக நினைக்கத்தோன்றாது. யாரும் உங்களை கஷ்டப்படுத்த முடியாது.இன்னொரு உயிரின் ஆற்றலை அதிகரிக்க உதவும் பொழுது நீங்கள் இயல்பாகவே கடவுள் தன்மையை அடைகிறீர்கள்.

எப்பொழுது நாம் முழுமையான கடவுள் தன்மையை அடைவது?

இன்னொருவர் எதிர் மறையாக என்ன செய்தாலும் அப்பொழுதும் நீங்கள் நிதானம் இழக்காமல் இருந்து நேர்மறை செயலை மட்டுமே மீண்டும் அவருக்கு தந்தால் , நீங்கள் ஆற்றல் மிக்கவராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். கடவுள் தன்மையில் முழுமையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.( ஆற்றலை பெருக்கும் வழிகளை பற்றி இன்னும் விரிவாக விரைவில் எழுதுகிறேன். )

இந்த நிலையை அடைவது தான் ஞானம் அடைவது. இதை அடைவது தான் வீடுபேறின் முதல் நிலை. இது உங்களை நிரந்தரமான மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

உங்கள் மீது எப்பொழுதும் ஒரு நேர்மறை எண்ண அலைகள் பரவியிருக்கும். பிறரையும் உங்களிடம் நெருங்கச் செய்யும். அனைவருக்கும் உங்கள் இருப்பு ஒரு பாதுகாப்புணர்வை ஏற்படுத்தும்.��இது தான் மனதை கடந்து வாழ்வது. இது தான் காலத்தை கடந்து வாழ்வது. 

நாம் அனைவரும் காலத்தை கடந்து வாழ முடியும். ஆம். உண்மையாக கூறுகிறேன் நாம் அனைவருமே கடவுள் தன்மையை முழுவதுமாக அடைய முடியும். நமக்குள் இருக்கும் உயிர் தான் சாட்சி. உயிர் இருக்கும் எந்த ஜீவனும் கடவுள் தன்மையை அடைய முடியும்.

நன்றி
திரு #thiru #thirulakshman


திரு. லக்ஷ்மண்

திரு. லக்ஷ்மண் அவர்களின் முகநூல் பதிவுகள்


கடவுளைநம்பினால் உங்களுக்கு எந்த கஷ்டமும் வராதா?
***

 நேற்று காலை முதலே கடவுள் உண்மையிலேயே பாதுகாப்பு தரமுடியுமா? கடவுளை நம்பினால் எந்த கஷ்டமும் வராதா? என்பதிலேயே சிந்தனையோட்டம் ஓடிக்கொண்டிருந்தது. அதை சுமந்து கொண்டே பேருந்தில் ஏறினேன்.

வழியில் அழகை பார்த்துக்கொண்டே வந்தாலும் அந்த சிந்தனை வேறு எங்கும் நகரவில்லை. அப்பொழுது திடீரென ஒரு மின்னல் வெட்டியது. 

ஏசு நாதர் போன்ற ஒரு முக்தரையே அடித்து அடித்து சிலுவையில் அறைந்த பொழுது காப்பாற்றாத கடவுள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு வரும் சாதாரண பிரச்சனைகளை எல்லாம் தீர்ப்பார் என்று நம்புவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று.

கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.  இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை. அதற்கு பிறகு சில மனிநேரங்கள் நிதானம் இல்லை.தடுமாறிக்கொண்டிருந்தேன். இறைதூதருக்கு இது தான் நிலை என்றால் நாம் எம்மாத்திரம்? இங்கே கடவுள் எங்கே? அந்த ஆற்றலுக்கு என்ன தான் அர்த்தம்?

கிருஸ்துவ நண்பர்கள் இது போன்ற கேள்விகளை கண்டிப்பாக எதிர்கொண்டிருந்துப்பார்கள். அதற்கு விடையை பைபிளோ அல்லது அவர்களின் குரு மார்களோ கண்டிப்பாக கொடுத்திருப்பார்கள். எனக்கு அது எதுவும் தெரியாது.  இதுவரை பைபிளும் படித்ததில்லை. மிகச்சில வரிகள் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாய் தெரியும்.

எப்படி இந்த குழப்பத்தில் இருந்து விடுபடுவது என்று சிந்தித்துக்கொண்டிருந்த பொழுது , குழந்தை கருகொள்ள தாமதமாவது குறித்து ஒரு 40 வயது பெண் கலந்தாய்வுக்கு வந்திருந்தார்.  வயதின் காரணமாகவும் குழந்தைப்பிறப்பிற்கான சாதகம் மிகக் குறைவாக இருக்குமே என்று ஏற்கனவே இருந்த மனசஞ்சலம் மேலும் அதிகமானது. யோசனையுடன் ஜாதகம் பார்க்கத்துவங்ினேன்.

நல்ல வேளை இன்னும் ஒரு வருடத்திற்குள்ளாகவே உருவாகிவிடும் சாத்தியம் மிக அதிமாக இருந்தது. சரியான நேரத்திற்கு வந்திருந்தார். ( இதை பற்றி விரிவாக தனியாக எழுதுகிறேன் ). பத்து வருடமாக குழந்தை இல்லாமல் இருப்பவற்கு தீர்வு தர முடிந்ததை நினைத்து மனது சற்றே நிம்மதி அடைந்தது. மறுகனம் மேலும் ஒரு மின்னல் வெட்டியது.

'பிதாவே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதவர்கள்’என்ற ஏசுபிரான் சிலுவையில் அறையும் பொழுது கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. 

முள்கீரிடம் அணிவித்து சிலுவையை சுமந்து கை கால்கள் எல்லாம் ஆணியில் அறையப்பட்டு ரத்தம் வழிய வழிய தொங்கிக்கொண்டிருந்த ஏசுநாதரிடம் வந்த வார்த்தைகள் ''பிதாவே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதவர்கள்’ . 

எனக்கு கண்கள் பணித்துவிட்டது. கடவுள் எங்கே இருக்கிறார் என்று முட்டாள்தனமாக தேடியிருக்கிறேன். கடவுள் அந்த வார்த்தைகளை சொல்லியவனுக்குள் தான் இருக்கிறார். அருள் தன்மை இருப்பதாலேயே அத்துனை பெரிய வலியை தாங்க முடிந்திருக்கிறது. வலியெல்லாம் கடந்து அந்த வார்த்தைகளை சொல்ல முடிந்திருக்கிறது. 

***

கடவுளை வேண்டுவது என்பது உங்களை கஷ்டத்தில் இருந்து காப்பதற்கு அல்ல. கஷ்டம் ஏற்படும் பொழுதும் அதை தாங்கும் சக்தியை உண்டு பண்ணுவதற்காக என்ற வெளிச்சம் கிடைத்தது.

கடவுள் தன்மை உங்களுக்குள் எவ்வளவு இருந்தாலும் கடவுள் தன்மை இல்லாதவனுக்கு நீங்கள் சக மனிதன் தான். எதிரியாகவும் நினைப்பான். உங்களுக்கு கஷ்டம் தரவே விரும்புவான். அவனிடம் இருந்தும் உங்களை காத்துக்கொள்ள நீங்கள் செய்யவேண்டியது உங்கள் கடவுள் தன்மையை அதிகப்படுத்திக்கொண்டே இருப்பது தான். 

அதை எப்படி அதிகப்படுத்துவது? எதிரிகளுக்கும் நல்லதே நினைக்கும் பொழுது அருள் அதிகமாகும். இந்த செய்தியை நாம் உணரவே ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறார்.

இதை பற்றி ஏதாவது பைபிளில் இருக்கும் என்ற நம்பிக்கையில் தேடினேன். இருந்தது.

‘நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், 
உங்கள் சத்ருக்களை சிநேகியுங்கள்; 
உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; 
உங்களைப் பகைக்கிறவர் களுக்கு நன்மை செய்யுங்கள்; 
உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், 
உங்களைத் துன்பப் படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்’.

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்.

யார் ஒருவன் எதிரிகளையும ஏற்றுக்கொள்வதற்காக கடவுளின் பெயரை பயன்படுத்துகிறானோ அவன் இறைநிலையை அடைகிறான். எதிரிகளை உருவாக்குவதற்காக யார் ஒருவன் கடவுளின் பெயரை பயன்படுத்துகிறானோ அவன் சாத்தான் ஆகிறான்.

அதனால் தான் அடித்தவர்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாகினர். அதை அனைத்தும் தாங்கி அவர்களுக்காக ஜபித்தவனின் பெயர் இரண்டாயிரம் ஆண்டுகளாய் ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

நன்றி

திரு #thirulakshman #Thiru

Saturday, October 24, 2020

அப்பா

அப்பா...

சென்ற மாதம் இதே தேதியில் மதியம் மூன்று மணி அளவில் என் தந்தையின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது...

நம் கண் எதிரில் உயிர் பிரியும் போது நாம் எவ்வளவு கையாலாகாதவர்களாக இருக்கிறோம் என்பது புரிகிறது...

 உடலுக்கு மட்டுமே மரணம்.. உயிருக்கு அல்ல. என் தந்தையின் உடல்தான் மரணமடைந்தது. என் தந்தையின் உயிர் மரணமடையவில்லை...

மிகவும் லேசாக எல்லாவிதப்பற்றுகளையும் விட்டு மரணத்தை விரும்பி என் தந்தை ஏற்றுக்கொண்டார்.

சிறுவயதிலிருந்து எனக்கும் என் தந்தைக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருந்தது. அப்படிப்பட்ட இடைவெளி இருந்தும் அவருடைய இருப்பின் இழப்பை என்னால் தாங்க முடியவில்லை..

உயிர் பிரியும் நேரத்தை இறைவன் எவ்வளவு புத்திசாலித்தனமாக தன் கையில் வைத்திருக்கிறான்..
அதற்குள் எத்தனை தர்க்கங்கள்..விவாதங்கள்..முடிவுகள்...அபிப்பிராயங்கள்..எண்ணங்கள்.. உணர்வுகள்.. உணர்ச்சிகள்....


 


Friday, August 28, 2020

இமய குருவின் இதய சீடன்

ஸ்ரீ  எம் அவர்களின் சுயசரிதை நூலிலிருந்து.....

கண்களில் இருந்து அன்பு பொழிய எனது முகவாயை தொட்டு,"வாக்கு வாதங்களும் விவாதங்களும் அளவில்லாததிடம் நெருங்க முடிவதில்லை. அன்பு ஒன்று தான் அதைச் செய்ய முடிகிறது. இதயத்தை திறந்து கிருஷ்ணனை பார். கோபியர்கள் அன்பு காட்டியது போல நீயும் காட்டு.." என்றார் சுவாமி அபேதானந்தர்.

குறிப்பிட்ட சிலர் மட்டும் ஏன் இப்படிப்பட்டதொரு ஒரு அசாதாரண வாழ்க்கை வாழ்கிறார்கள்? நிர்வாணமாக, அழுக்காக,விநோதமான நடத்தைகள் கொண்டவர்களாக ஏன் இருக்கிறார்கள் என்றெல்லாம் நீங்கள் யோசிக்கலாம். பைத்தியக்காரர்கள் போலத் தோற்றமளித்தாலும் இந்த ஆண்களும் பெண்களும் புனிதமானவர்கள். இவர்கள் இந்து பாரம்பரியப்படி அவதூதர்கள் என அழைக்கப்படுகிறார்கள். சூபி வழிமுறையில் இவர்களெல்லாம் மஸ்தான்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவதூதர்களும், மஸ்தான்களும் ஆன்மீகத்தில் மிக உயர்நிலையை எய்தியவர்கள். எப்போதும் இறை தொடர்பிலேயே இருப்பதால், சமூகத்துக்கு கட்டுப்படாமல், அனைத்தையும் உதறிவிட்டு பைத்தியகாரர்கள் போலவே வாழ்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒருவரை, "ஏன் இப்படி பைத்தியக்காரர் போல நடந்து கொள்கிறீர்கள்?என வினவினேன்.
"உன்மத்தம் அற்ற ஒரு மனிதனைக் கூட நான் பார்த்ததே இல்லை. ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு விதத்தில் பைத்தியமாகவே இருக்கிறான்" என்று பதில் கூறினார்.

ஆன்மீகத்தேடல் ஈடுபடுபவர்கள் அற்புதங்கள் நிகழ்த்துபவர்களைக் கண்டு  மயங்கி அவர்களின் பின்னால் போய் விடக்கூடாது என்றும், அந்த வகை அற்புதங்களை பெறுவதற்கு ஆசைப்படக் கூடாது என்றும், ஆன்மிக உயர்நிலை எய்திய அனைவரும் எச்சரித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். 'புனிதமானவன் என்று சொல்லிக் கொள்பவன் அற்புத சக்திகளை காட்சிப்படுத்தினால் அங்கிருந்து எவ்வளவு தூரம் விலகிச் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் விரைவாக விலகிச் சென்று விடுங்கள்' என்று ராமகிருஷ்ண பரமஹம்சரும் கூறியிருக்கிறார்.

உணவு அறையிலிருந்து மணி ஒலித்தது. படிக்கட்டில் இருந்து எழுந்தேன். ஆத்மா அதற்குண்டான உணவைப் பெற்றுக் கொண்டு இருந்ததால் அது நிறைவுடன் இருந்தது. உடல் பசியுடன் இருந்தது.

"முட்டாள் சிறுவனே! வழிகாட்டுதலுக்கு, இந்த பௌதிக உடலை நம்பி இருக்க வேண்டியதில்லை. இந்த உடலுக்கு இந்த அளவு அன்பு காட்டி உன்னை இணைத்துக் கொள்ளாதே. உனக்கு கொடுக்கப்பட்ட பயிற்சிகள் எல்லாம், பிறர் ஆதரவு எதுவும் இல்லாமல் சுயேச்சையாக சுதந்திரமாக நீ இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்! உனது கால்களில் தான் நீ நிற்கவேண்டும். ஒரு குருவினையே நம்பி இருப்பதும் கூட ஒரு தடைதான். எந்தவித தடைகளும் இல்லாமல் சுதந்திரமாக இரு." என்றார் பாபாஜி அழுத்தமாக..

அருந்ததி குகையில் தங்கியிருந்த மூன்றாவது நாள் இரவு, கடகடவென்று உருளும் ஒலி ஒன்று கேட்டு விழித்துக் கொண்டேன். இடி என்று நினைத்தேன். பாபாஜி, எப்பொழுதும் போல தூனியை நோக்கியவாறு அமர்ந்திருந்தார். அவரது பின்புறம் எனக்கு தெரிந்தது. அவரது உடலின் உருவ கோடுகள் வரைபடம் போல் தூனியின் ஒளியில் தெரிந்தது.அவரை கடந்து பார்த்தேன்.
இரண்டு மேகங்களுக்கு நடுவில் ஒரு முழு நிலவு போன்ற அளவில் ஏதோ ஒன்று வெளிப்பட்டது . அது நிலவு இல்லை .  குளுமையான வெள்ளி நிற வெண்மையான ஒளியை சிந்தும் சந்திரனுக்கு பதிலாக அந்த பொருள் நெருப்பு பந்து போன்று தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்தது.
அது நெருங்கி வரவர கடகடவென்று ஓசை அதிகமாகிக் கொண்டே வந்தது. அது குகையை நோக்கி வந்து பலத்த இடி ஓசை போன்ற சத்தத்துடன் தூனூயின் மீதே வந்து இறங்கியது.
நான் மிகுந்த பீதியில் இருந்ததால் என்னால் எழுந்து உட்காரக்கூட முடியவில்லை. பாபாஜியோ சிலை போன்று நேராக அசைவோ பதட்டமோ இன்றி அமர்ந்திருந்தார். நான் அவருக்கு குரல் கொடுக்க வேண்டுமென நினைத்தேன். ஆனால் எனது தொண்டைக் குரல் நாண்கள் வேலையே செய்யவில்லை . எப்படியோ சமாளித்து எழுந்து அமர்ந்தேன். எனது உடல் முழுவதும் பீதியால் நடுநடுங்கியது . இதுவரை அறியப்படாத காணக் கிடைக்காத ஒரு அற்புத காட்சி ஒன்று கண்முன்னால் விரிந்தது.
  இடி இடிப்பது போன்ற சத்தம் அறவே நின்று போனது. திடீரென்று அமைதி சூழ்ந்தது. ஏறத்தாள இரண்டு அடி குறுக்களவு இருந்த அந்த நெருப்பு பந்து செங்குத்தாக இரண்டு பகுதிகளாக பிளந்தது.
   அதிலிருந்து வெளிவந்த உருவத்தைப் பார்த்ததும் என் உடல் முழுவதும் மயிர்க்கூச்செரிந்தது . அது ஒரு மிகப் பெரிய பாம்பு . நாகப் பாம்பை போன்று படம் எடுத்தவாறு இருந்தது . அது மின்சாரம் போன்ற நீல நிறத்தில் பிரகாசித்தது. ஒளியை ஊடுருவி எளிதில் பார்க்கக்கூடிய வகையில், ஊதா நிற கண்ணாடி போன்ற பொருளால் செய்யப்பட்டது போல் தோற்றமளித்தது . உள்ளே மின்சார இலைகள் எரிந்து கொண்டிருப்பது போல் காட்சி அளித்தது .
   பாம்பு போன்று இருந்த அந்த உருவத்தின் கண்கள் ஜொலித்தன . மேலும் அது ஹிஸ் என்று மிருதுவாக சீறிக் கொண்டிருந்தது .
   அந்த பாம்பு போன்ற உருவம் தனது விரிந்த படத்தோடு குனிந்து பாபாவின் பாதங்களை தொட்டு கும்பிட்டது. அதைப் பார்த்ததும் எனது பீதி எல்லாம் மறைந்தது. பாபாஜி அதன் படத்தினை தொட்டு ஆசிர்வதித்தார் . அதன்பிறகு பாபாஜியும் பாம்பு போலவே உஸ் என்று மெதுவாகச் சீறி அதற்கு பதில் அளித்தார் .
   நான் ஏதாவது முட்டாள்தனமான கனவு கண்டு கொண்டு இருக்கிறேனா அல்லது இவையெல்லாம் நனவுதானா?
    அந்த நீல நாகப்பாம்பு தன்னை நேர்ப்படுத்திக்கொண்டு பாபாஜியை எதிர்நோக்கி அமர்ந்தது.
உஸ் உஸ் என்ற ஒலியுடன் ஒரு உரையாடல் அவர்கள் இருவருக்கும் இடையே சற்று நேரம் தொடர்ந்தது .
பிறகு பாபாஜி திடீரென்று," மது, முன்னால் வந்து  சர்ப்பலோகத்துத் தலைவரின் பிரதிநிதியை பார் என்றார். திடுக்கிட்டேன் . இருந்தாலும் முன்புறம் வந்து பாபாஜியின் பின்னே ஜாக்கிரதையாக உட்கார்ந்து கொண்டேன் .
பாம்பு உஸ் என்று சீறியது. "நாகராஜனுக்கு தலை குனிந்து வணக்கம்  செய்"என்று அவர் கூறினார்.
பாம்பின் முன்னால் கீழே வளைந்து வணங்கினேன். நெருக்கமாக இருந்த அந்த சமயத்தில் அந்த பாம்பு மிகப்பெரியதாகவும், ஜுவாலை போல பிரகாசித்த, புத்திசாலித்தனம் நிறைந்த கண்களைப் பெற்று இருந்ததையும் கவனித்தேன். பாம்பு உஸ் என மெதுவாக சீறிய வாறு அதன் இரட்டை நாக்கினால் எனது தலையைத் தொட்டது. என்னுள் இப்போது கொஞ்சமும் பயம் இல்லாமல் போனதை உணர்ந்தேன். சாந்தமான ஒரு மின்சார அதிர்ச்சி என் உடல் முழுவதும் பாய்வதை உணர்ந்தேன்.
  திடீரென அது நகர்ந்து கோளத்தினுள்  நுழைந்து கொண்டது .இரண்டு பகுதிகளும் இணைந்து மூடிக்கொண்டது. கடகட என்னும் இடி போன்ற சத்தத்துடன் அந்தக் கோளம் எழும்பி விரைவிலேயே மேகங்களினூடே மறைந்தது. பாபாஜியிடம் என்னால் இதனைப்பற்றி கேட்காமல் இருக்கமுடியவில்லை. "பாபாஜி,  நடந்ததைப் பற்றி யாரிடமாவது கூறினால் அவர்கள் என்னை பைத்தியமென்றும், ஏதோ கற்பனை கதையை சொல்கிறேன் என்றும் நினைப்பார்கள். இந்த சம்பவத்தை எனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறேன். ஆனால் தயவு செய்து விளக்குங்கள்.."என்று வேண்டினேன்.
  "சரியாகத்தான் சொன்னாய். உனது இந்த அனுபவத்தை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனாலும், உனது சுய சரித்திரத்தை எழுதும் பொழுது இதைப் பற்றி மக்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். யார் நம்புகிறார்கள் யார் நம்பவில்லை என்பதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இதைப் பற்றி உனக்கு விளக்குகிறேன் . உண்மை பல நேரத்தில் கற்பனையை விட வினோதமாக இருக்கும்.‌.

  "பால் வண்ண வான் பாதையில் நட்சத்திர மண்டலத்தில் 18 சந்திரன்களும் ஏழு கிரகங்களும் இருக்கின்றன. ஒரு கிரகத்தின் பெயர் சர்ப்பலோகம். இதில் மிகவும் உயர் நிலையில் இருக்கும் பாம்புகள் வசித்துக் கொண்டிருக்கின்றன. இந்த பாம்புகள் எல்லாமே நாக தேவதைகள்.நீ பார்த்த அந்தப் பெரியவர் சர்ப்ப லோகத்தின் துணைத் தலைவர் ஆவார். அவர் நாகராஜா என்று அழைக்கப்படுகிறார்.ஐந்து தலை கொண்ட ஒரு தங்க பாம்பு தான் இந்த சர்ப்ப லோகத்தின் தலைவர். அவர் இந்திய புத்தகங்களில் ஆனந்தா என்று குறிப்பிடப்படுகிறார்...

"பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனித இனம் வெறும் குழந்தைப்பருவ அறிவு வளர்ச்சியை மட்டுமே அடைந்திருந்தது. அப்போது பூமியில் இருந்த மக்களுக்கு சர்ப்ப லோகத்துடன் தொடர்பு இருந்தது.

"உயர்நிலையில் இருந்த அறிவு நிரம்பிய நாகர்கள் பூமிக்கு அடிக்கடி வந்து சென்று கொண்டிருந்தார்கள். இங்கேயே நிறைய காலம் தங்கியிருந்து மனிதர்களுக்கு கல்வி கற்பித்துக் கொண்டும் அறிவு போதனைகளை கொடுத்துக் கொண்டும் இருந்தார்கள்‌.... "பழமையான எல்லா நாகரீகங்களிலும் பாம்பினை பூஜிக்கும் வழக்கம் இருப்பதைக் கேள்விப்பட்டு இருப்பாய். அது மனிதர்கள் உயர் விழிப்புணர்வுடன் இருந்த நாகர்களுக்கு செலுத்திய மரியாதையின் வடிவம்தான்! அவர்கள் கொண்டிருந்த விவேகத்திற்காகவும், சூட்சும புத்திக்காகவும் தான் அவர்களை மக்கள் போற்றி வணங்கி வந்தார்கள்...
"நாகர்கள் தான் குண்டலினி சக்தி ரகசியத்தைப் பற்றி முதன்முதலாக கற்றுத் தந்தார்கள். அதுவும் பாம்பு வடிவத்தின் அடையாளமாகத்தான்....

"உலகுக்கு அஷ்டாங்க யோக சூத்திரங்களைக் கொடுத்த பதஞ்சலி கூட ஒரு நாகர் தான்! அவர் பாதி மனிதராகவும் பாதி நாகமாகவும் சித்தரிக்கப்பட்டு இருக்கின்றார். எகிப்திய பரோஹாவின் தலையிலுள்ள பாம்பும், சிவனைச் சுற்றிக்கொண்டிருக்கும் பாம்பும்  உயர் அறிவுடைமையையும் உயர் சக்தியையும் கொண்டிருந்த நாகர்களின் அடையாளத்தை குறிப்பிட்டு காட்டுவதேயாகும். சில மனிதர்களுக்கும் இந்த சக்திகளையெல்லாம் நாகா ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்து அனுக்கிரகித்திருக்கின்றார்கள்.

" ஆனால் மனிதர்கள் அதிக சக்தி வாய்ந்தவர்களாக ஆனதுமே அதிக சுயநலம் கொண்டவர்களாகவும் தந்திர குணம் கொண்டவர்களாகவும் மாறிவிட்டனர். பெரும்பான்மையினர் சுயநலத்திற்காக கொலை புரியவும் தயாராகி விட்டனர்.

" சிலர்  நாகர்கள் பெற்றிருந்த சிறப்பான அறிவு மற்றும் ஆன்மிக மேன்மைகளால் தங்களது நிலை என்ன ஆகுமோ என்று பயப்படவும் செய்தனர். மனிதர்கள் நாகர்களிடம் கொண்டிருந்த நன்றிக்கடனை மறந்து அவரிடமிருந்து பெற்ற சக்திகளையே அவர்களுக்கு எதிராக உபயோகித்தனர். ஒரு கால கட்டத்தில் நாயகர்களை அதிக அளவில் படுகொலை செய்தனர். கொன்று குவித்தனர்...

" நாகர்களின் பிரதானமான தலைவர், எஞ்சி இருக்கும் நாகர்களை எல்லாம் பூமியிலிருந்து நாகலோகத்திற்கே திரும்பி அழைத்துக் கொள்ள முடிவு செய்து விட்டார்.சில ஆன்மீக உயர்நிலை மனிதர்களைத் தவிர, மனித இனத்துடன் இருந்த எல்லா உறவுகளையும் துண்டித்தார். ஒரே இரவில், நாகர்கள் அனைவரும் நாடு, கடல் கடந்து சர்ப்பலோகத்திற்கே அழைத்துக் கொள்ளப்பட்டார்கள். நோய்வாய்ப்பட்டிருந்த நாகர்களும்,மிக வயதான நாகர்களும், தலைமையை எதிர்த்து கலகம் செய்த சில நாகர்களும் மட்டும் இங்கேயே விடப்பட்டார்கள்...

" இப்பொழுது பூமியில் ஊர்ந்து செல்லும் வகையைச் சேர்ந்த பாம்புகள் எல்லாமே அன்று பூமியில் விட்டுச் செல்லப்பட்டவைகளின் சந்ததிகளே ஆகும்.  அவைகளே எஞ்சியிருந்த தங்கள்  இனத்திற்குள்ளேயே பற்பல வருடங்களாக இனப்பெருக்கம் செய்து,வளர்ச்சியில் தடைப்பட்டு, வீரியம் குறைவாகவும் தங்களது முன்னோர்களின் உயர் குணங்கள் அற்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

"சில உயர்  குண மனித இனத்தினருடன் மட்டும் சர்வலோகத்தினர் தொடர்ந்து தொடர்பு வைத்து வருகிறார்கள். ஒரு சமயம் சீரடி சாய்பாபா மூன்று நாட்கள் தனது உடலை விட்டுச் சென்றிருந்தார். நான்காவது நாள் அவர் இறந்து விட்டார் என்று பொதுமக்கள் முடிவெடுத்த போது அவர்கள் வியப்படையும் வண்ணம் பாபா தனது உடலுக்கு திரும்பி வந்தார். அந்த சமயத்தில் பாபா தனது நெருங்கிய நண்பர்களிடம் வேறொரு உலகத்துப் பிரச்சினையை தீர்த்து வைக்க தான் சென்று வந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அவர் வேறொரு உலகம் என்று குறிப்பிட்டது சர்ப்ப லோகத்தைத்தான். அந்த பிரச்சினை என்ன என்பதை உனக்கு வெளிப்படுத்த முடியாது! அந்த பிரச்சினை முழுவதுமாக தீர்க்கப்படவும் இல்லை. அது மீண்டும் வந்துவிட்டது. நாகராஜ் குருவிடம் உதவிக்காக சென்றார். அவரது அறிவுரையின் பேரில் என்னுடன் விவாதிப்பதற்காக இங்கு வந்திருந்தார்..."என்று அந்த சம்பவத்தின் பின்னணியை விளக்கினார் பாபாஜி.

"பாபாஜி..இவைகள் எல்லாம் நம்ப முடியாதவைகளாக இருக்கின்றன. நான் எப்போதாவது எனது சுயசரிதை எழுதினால் இதனை படிப்பவர்கள் இதுவெல்லாம் புத்தி சமநிலையில் இல்லாத ஜன்னி பிடித்தவனின் பிதற்றல்கள் என்றோ அல்லது கட்டுக்கதை என்றோ ஒதுக்கி விடலாம். நான் அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை. நடப்பது நடக்கட்டும்..." என்றேன்.

பாபாஜி சிரித்தார்
. "மறுபடியும் சொல்கிறேன். உண்மை கற்பனையை காட்டிலும் வினோதமாக இருக்கும். இந்தக் கதையை அவர்கள் கற்பனை என்றே கூறட்டும்...
"மக்கள் தற்சமயம் தாங்கள் கொண்டுள்ள விவேகத்தாலும், வறண்ட தர்க்க சாத்திரத்தின் உதவியாலும் உயர்ந்த விழிப்புணர்வு உடைய உயிர்கள் நிறைந்த வேற்று உலகங்கள் இருப்பதை ஏற்றுக் கொள்ளாமல் போய்விடக்கூடும். இருப்பினும் பின்னாட்களில் எப்போதாவது ஒரு சமயம் அவை உண்மையிலேயே இருக்கத்தான் செய்கின்றன என்பதை உணர்ந்து கொள்வார்கள்.... "ஆனாலும் நீ உனது சுய சரித்திரத்தை எழுத தயாராகும் பொழுது விஞ்ஞான உலகம் விண்ணுலகை பற்றியும் இதர கிரகங்களை பற்றியும்  தனது அறிவாண்மையைப் பெருக்கி இருக்கும்...

"பிரபஞ்சத்தில் இதுவரை எண்ணிப்பார்த்து கூட இருக்க முடியாத இடங்களில் கிடைக்கும் நீர் மற்றும் இதர உயிர்வாழ் ஆதாரங்கள் ஆகியவை இதர கிரகங்களிலும் விண்மண்டலத்திலும் இருப்பது கண்டுபிடிக்கப் படலாம். அங்கே உயிரினங்கள் இருக்கலாம் அல்லது இருந்திருக்கலாம் என்று கருத்து வலுவாக ஆரம்பிக்கும்...

"தவறான  முன் அபிப்ராயம் இல்லாத ஏதாவது ஒரு விஞ்ஞானி உனது இந்த கதையின் மீது நியாயமான கவனம் செலுத்தலாம்...
" நடைமுறைகளுக்கு ஒவ்வாதவைகளை எல்லாம் விஞ்ஞான ரீதியாக சரியல்ல என்று ஒதுக்கும் முட்டாள்தனமான மனோபாவம் கொண்டவர்களாக இருந்து விட்டால் பிறகு இவைகளை எல்லாம் நம்பவே முடியாமல் போய்விடலாம்!

பாபாஜி, அந்த புனித மனிதரிடம் உடனே நேருக்கு நேராக அவரது பாணியில் பேச ஆரம்பித்தார்.

" சுவாமி! நீங்கள் கற்றிருக்கும் கல்வி மீது எனக்கு மிகுந்த மதிப்பு உள்ளது‌ தைரியமாக மடாதிபதி பதவியை துறந்த உங்களது செயலையும் மதிக்கிறேன். உங்களது கிரீடத்தையும், தண்டியையும் தூக்கி எறிந்து விட்டீர்கள். இன்றைக்கு ஊர் ஊராகத் திரிகின்ற சாதாரண சன்னியாசியாக இருக்கின்றீர்கள். ஆனால் உங்களது அறிவுச் சுமையும் பாண்டித்யமும் உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு தடையாக இருக்கின்றன. அந்த முழுமுதற் பொருளை, பிரஹ்மனை அடைய முடியாமல் தொலை தூரத்தில் இருக்கிறீர்கள். நான் பேச்சைத் தொடரலாமா?" என்று கேட்டு நிறுத்தினார் பாபாஜி.

"தயவு செய்து கூறுங்கள். நீங்கள் சொல்வதை இப்போதுதான் புரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறேன்.." என்றார் அவர்.

" நீங்கள் பெற்றிருக்கும் அறிவு உங்களினுள்ளே முழுவதுமாக நிறைந்து இருக்கிறது. அதனால் உங்களிடம் நுழைவதற்கு காத்திருக்கிற அந்த உண்மையை பெறுவதற்கு இடமே இல்லை. முன் அபிப்பிராயங்கள் கொண்ட அறிவுச்சுமையை இறக்குங்கள். உள்ளே இருக்கும் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு காலியாக இருங்கள். உண்மையை காண்பீர்கள்."என்று பாபாஜி கூறினார்.

"யார் அறிவை வணங்குகிறார்களோ அவர்கள் இருட்டைத் தழுவுகிறார்கள்' என்ற இஷாவாஸ்ய உபநிஷத ஸ்லோகத்திற்கு உண்மையான பொருள் என்னவென்று நான் பலமுறை யோசித்ததுண்டு. இந்த ஸ்லோகத்தில் காணப்படும் அறிவு என்ற சொல்லுக்கு, முக்கியமற்ற விஷயங்களின் மூலமாகப் பெறும் அறிவு தான் என்று எண்ணி நேரடியான இந்த விளக்கத்தை ஒத்துக் கொள்ளாமல் இருந்து இருக்கிறேன். இப்பொழுது தான் சரியாக புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். தொடர்ந்து சொல்லுங்கள் ஐயா..." என்று அவர் கேட்டுக்கொண்டார்.

"உண்மை என்னவென்றால், அறிவே உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு தடையாக இருக்கிறது. இதை சற்று விளக்கமாகக் கூறுகிறேன். ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள விழையும்பொழுது, நாம் என்ன செய்கிறோம்? முதலில் அதை கவனிக்கிறோம். பிறகு அதைப் பற்றி நமது நினைவில் சேமித்துக் கொள்ளுகிறோம்...சரியா...?
" ஆம், ஐயா "என்று ஆமோதித்தார் அந்தப் புனித மனிதர்.

" எக்ஸ் அல்லது ஒய் பற்றி எனக்கு தெரியும் என்று நான் சொல்வேனாகில் அந்த விஷயம் எனது நினைவில் சேமிக்கப் பட்டு விட்டது என்று தான் பொருள். நினைவு என்ற வார்த்தையே கடந்தகால விஷயமாக, இறந்த காலமாக ஆகிவிட்டது. நிகழ்காலத்தில் இல்லவே இல்லை. நினைவு என்பது சேமிக்கப்பட்ட தகவல்கள். எப்பொழுதும் அது இறந்த காலத்தைத் தான் குறிக்கிறது நான் சொல்வது புரிகிறதா?"

"ஆம்."

"நிரந்தர உண்மை என்கிற விஷயம் இறந்தகால நிகழ்ச்சியாக இருக்க முடியாது. உண்மை எப்பொழுதுமே அழிவில்லாமல் இருந்துகொண்டே இருக்கிறது. எனவே அதை நமது நினைவில் சேமித்து வைத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் நினைவு என்பது கடந்த காலம். ஆனால், உண்மை என்பது இப்போது நிகழ்வதைத்தான் குறிக்கும். உண்மை எப்போதும் உயிரோட்டத்துடன் இருந்து கொண்டே இருக்கும். அறிவினால் இதனைத் தொடமுடியாது...சரிதானே?"

"சரிதான் ஐயா"

"நாம் சுமந்து கொண்டிருக்கும் அறிவுப் பெட்டகமான மூளையில், குப்பைகள் எதுவும்  இன்றி காலியாக இருக்கும் தருணத்தில் தான் அமைதியாகவும் அசைவு இல்லாமலும் வேறு எதுவாகவும் ஆக முயற்சிக்காமலும் எதையாவது பெறப் போராடாமல் இருக்கும் தருணத்தில் தான், அந்த வெற்றிடத்தில் நிரந்தரமாக இருக்கின்ற அந்த உண்மை என்கிற தெய்வம் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்கின்றது."

மிகப்பெரிய அமைதிக்கு பிறகு "ஆஹா!பெரும் அமைதி. இந்த மாதிரி பெரும் அமைதியில், அசைவில்லாமல் என் வாழ்க்கையில் எப்போதுமே அமர்ந்து இருந்தது இல்லை. எப்போதாவது ஒன்று அல்லது இரண்டு முறை ஒன்றுமே செய்யாமல் நதியை பார்த்தவாறு இருந்த பொழுது அல்லது தெளிவான ஆகாயத்தை பார்த்தவாறு இருந்த பொழுது அந்த அமைதியின் விளிம்பு வரை சென்று இருக்கிறேன்...!" என்று அந்த  முதிய மனிதர் பேசினார்.

பாபாஜி கூறினார், "அந்தப் பெரும் அமைதி உங்களின் மேலே இயற்கையாகவே ஏற்படும் பொழுது அதில் குறுக்கிட வேண்டாம். அப்படியே அமைதியாக இருங்கள். ஸ்ரீ குரு பாபாஜி, உங்களின் மீது ஆசீர்வாதங்களை வழங்கட்டும். அந்த ஆசீர்வாதங்களால் நீங்கள் நிரந்தர உண்மையை கண்டுபிடிக்குமாறு ஆகட்டும். நான் மறுபடியும் உங்களை பார்க்க போவதில்லை. இன்னும் சில தினங்களில் கோமுக்கிற்கு செல்ல இருக்கிறோம்..."என்று கூறிவிட்டு அவரிடம் விடைபெற்றுக் கொண்டார் பாபாஜி.

"எதிலும் தீவிரம் இன்றி மிதமாகத் தணிந்து இருக்கும் வரை அவை எல்லாமும் நல்லதுதான்."

"எல்லா உயிரினங்களையும் முக்தி நிலைக்கு அழைத்துச் செல்லும் வரை நான் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருப்பேனாக!"என்பது போதிசத்துவர் உறுதிமொழி.

பகல் நேரங்கள் கடினமான படிக்கும் பணிகளும், ஆழ்ந்த சிந்தனைகளும்,  உண்ணாநோன்பு களமுமாக கழிந்தன. எனது அகங்காரம் அறுத்து கூறு போடப்பட்டு என் கண்ணெதிரே காட்சிப்பொருளாக தெரியும்வரை மேற்குறிப்பிட்ட பணிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

பல வருடங்களுக்கு முன்னர் ராமகிருஷ்ணா மடத்தில் நான் பிரம்மச்சாரியாக இருந்த போது, சுவாமி ரங்கநாதர், "ஆசிரமம் என்பது ஒரு சிறிய உலகம். எல்லாவித மனிதர்களை அங்கே நீ சந்திக்கக்கூடும். அவர்கள் எல்லாம் பெரிய சாதகர்கள் என்றோ, அல்லது ஆன்மீகத்தில் மிக உயர்நிலையை எய்திய ஆத்மாக்கள் என்றோ நினைத்து விடாதே. உனது சாதகத்தை, பயிற்சியை உன் பாட்டுக்குச் செய்து கொண்டிரு. எப்போதும் கண்களைத் திறந்து வைத்து விழிப்புடன் இரு!"என்று கூறியது நினைவுக்கு வந்தது.

திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது, ஆன்மிகத்தில் வளர்ச்சி அடைய நினைப்பவர்களுக்கு அப்படி ஒன்றும் விசேஷ தகுதி அல்ல. எதிர்காலத்தில் உன்னிடம் வருபவர்கள் எல்லாம் பெரும்பாலும் திருமணம் ஆனவர்களாகவே இருப்பார்கள். உனக்கே திருமணம் ஆகவில்லை என்றால் திருமண வாழ்க்கையைப்பற்றி அவர்களுக்கு அறிவுரையோ உதவியோ உன்னால் செய்ய முடியாது." என்று கூறி நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

"ஆன்மிகப் பரிணாம வளர்ச்சி என்பது தனிப்பட்ட மனிதனுக்குக் கிடைக்கும் வளர்ச்சியே ஒழிய அது கூட்டமாக நிகழ்த்த முடிகிற அற்புதம் அல்ல.  தியான முறைகளுக்கு உரிமை கோருவது எல்லாம் நல்ல பயனைத் தராது. ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் தனித்தன்மையானவர். பணியாற்றத் துவங்கும் பொழுது சுவரொட்டி விளம்பரங்களும், விளம்பர போர்டுகளும் கூடவே கூடாது" என்றும் கூறுவார்.

ஸ்ரீ குருப்யோ  நம

இமயகுருவின் இதய சீடன்

ஸ்ரீ எம் அவர்களின் சுயசரிதை நூலிலிருந்து சில பகுதிகள்...

 பாபாஜி ஒருமுறை, "காய்கறிகளைக் கூட சரியாக வெட்டத் தெரியாமலோ, அரிசியினை முழுமையாக சமைக்கத் தெரியாமலோ இருந்தால், இந்த உலகத்தில் நீ எப்படி அதி உன்னதமான பூரணத்தை கண்டு பிடிப்பாய்? இது எப்படி இருக்கிறது என்றால், ஒருவன் நாள் முழுவதும் பொய் சொல்லிவிட்டு முழுமையான சத்தியத்தை தேடுகிறேன் என்று சொல்வது போல இருக்கிறது..." என்று கூறினார். மேலும் அவர், அரசியல்வாதிகள் எல்லாம் சத்யமேவ ஜெயதே என்று உண்மையின் மேல் உறுதிமொழி எடுத்துக் கொள்வதைப் போல நாடகம் ஆடாதே. நமது அன்றாட வாழ்க்கையை சரிவர முழுமைப்படுத்து. அதுதான் உண்மையான பூரணத்தை அடைய வழி என்றும் சொன்னார்.

ஒரு மாலைப்பொழுதில், இரவு நெருங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பாபாஜியிடமிருந்து ஒரு வித்யாசமான பாடத்தை கற்றுக் கொண்டேன்‌.  தூனியை எதிர் நோக்கி நாங்கள் உட்கார்ந்து இருக்க, அக்னி ஜுவாலைகள் நாட்டியமாடிக் கொண்டிருந்தன. பாபாஜி, "அக்னி எல்லா நாகரீகங்களிலும் புனிதமாகக் கருதப்பட்டு வந்தது. வேத காலங்களிலே அக்னிபகவான் ஒவ்வொருநாளும் பிரார்த்திக்கப்பட்டு வந்திருக்கிறார். எப்போதாவது அக்னி ஏன் இவ்வளவு முக்கியமாக கருதப்பட்டு வந்தது என்பதை நினைத்துப் பார்த்து இருக்கிறாயா? என்று கேட்டார். "உணவு சமைப்பதற்கு நெருப்பு வேண்டும்! மேலும், குளிர் காலங்களில் நம்மை உஷ்ணமாக வைத்துக்கொள்ளவும், காட்டு மிருகங்களை நெருங்கவிடாமல் தூரத்தில் நிறுத்தவும் அக்னி உதவுகிறது. அதனால்தான் என்னவோ, பண்டைய காலத்தில் அக்னிக்கு மதிப்பு கொடுத்தனர்" என்று கூறினேன். பாபாஜி சிரித்தார். "ஆம், ஆம். அதற்கு மேலேயும் பயன்கள் இருக்கின்றன. பண்டைய காலங்களில் தீப்பெட்டி கிடையாது. நெருப்பை உண்டாக்குவதற்கு இரு காய்ந்த குச்சிகளை வைத்துக் கொண்டு அக்னி பகவானிடம் பிரார்த்திப்பார்கள். ஒரு தீப்பொறி ஏற்பட்டு விட்டால் அதுவே அதிசயமாகக் கருதப்பட்டது... "அப்போதைய சிந்தனையாளர்கள், அந்த நெருப்பு, அங்கே உண்டாவதற்கு முன்னால் எங்கே இருந்தது என்று கேட்டார்கள். அந்த கட்டைகளிலே தான் அது ஒளிந்திருந்தது. சமயத்திற்கு ஏற்றவாறு வெளிப்பட்டது. எனவே, அக்னி ஆத்மாவின் அடையாளமாக கருதப்பட்டு, எங்கும் வியாபித்து, சில சூழ்நிலைகளின் கட்டாயங்களுக்கு ஏற்ப காட்சியளிக்கிறது... "மற்றொரு காரணம், அக்னி ஆத்மாவின் அடையாளமாக உபயோகிக்கப்பட்டது. ஏனென்றால், எப்பொழுதும் அக்னி மேலெழுந்தவாறுதான் எரிகிறது. எரிகிற கட்டையைக் கீழ்நோக்கி வைத்தாலும் தீயின் ஜுவாலைகள் மேல்நோக்கி தான் எழுகின்றன. அதேபோல ஒரு சிறிய தீப்பொறியே, ஒரு முழு காட்டை எரித்து விடுவதற்கு போதுமானது... ஒரு தீயின் ஜுவாலையிலிருந்து ஆயிரம் மெழுகுவர்த்திகளைப் பற்ற வைக்கலாம். அதற்குப் பிறகும் முந்தைய தீ ஜுவாலை எரிந்துகொண்டுதான் இருக்கும். எனவே,ஆத்மாவிற்கு இதைவிட வேறு எந்த அடையாளம் மிக ஏற்றதாக இருக்க முடியும்...? 

"நெருப்பு அழிக்கும் சக்தியாக மாறும்போது, எல்லாவற்றையும் சாம்பலாக ஆக்குகிறது. தீயானது அனைத்தையும் கருடிக்கிறது.. "இரக்க குணத்திற்கும், அன்பிற்கும் உரிமையான புனித அக்கினியே எல்லா சுய நலங்களையும் எரித்துச் சாம்பலாக ஆக்குகிறது. ஆஸ்திகர்கள், தங்களுக்கு எந்த வரம்புகளும் இல்லை என்று எடுத்துக் காட்டுவதற்காக இந்தச் சாம்பலை உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்கள்... "பார்வைக்கு தெரியும் நெருப்பு மட்டும்தான், அக்னி என்று அழைக்கப்படுவதில்லை. எளிதில் தீப்பிடிக்கும் எல்லாப் பொருள்களும் அக்னி தான். மனித உடலில் ஜீரணத்திற்காக நடக்கும் எல்லா ஆக்க, அழித்தல் பணிகளும் ஜீரண அக்னி என்று அழைக்கப்படும். ஆசை என்னும் நெருப்பு அதிகமானாலும் குறைவானாலும் அதுவும் அக்னிதான்... "உனக்கு முன்பு ஒரு காதலி இருந்திருந்தால் அவளை முந்தைய நெருப்பு என்று கூறுவது இல்லையா?யாரும் முந்தைய காற்று என்றோ, முந்தைய தண்ணீர் என்றோ குறிப்பிடுவது இல்லை. ஏனென்றால், அன்பு, ஆசை, உள்ளுணர்ச்சி எல்லாமே ஒரு விதமான நெருப்புதான்... "கற்பனை என்பது கூட நெருப்புதான். அதனால்தான், அக்னி பல காலமாக வணங்கப்பட்டு வருகிறது. நாத் பரம்பரையில் இருக்கும் எங்களுக்கு அக்னி, எங்களைச் சேர்ந்த சுய அங்கமாகவே ஆகிவிட்டது... "தூனியைப் பற்றவைத்து எரியும் ஜுவாலைகளை பார்த்தவாறே மணிக்கணக்கில் அமர்ந்து இருப்போம். அக்னி எங்களது நண்பனுமாய் பாதுகாவலனுமாய் ஆகிவிட்டது. எங்களது மனது அந்த ஜுவாலைகளுடன் ஒன்றுபட்டு கலந்துவிடும்.... " இயற்கையின் எல்லா தன்மைகளைப் போல,  அக்னிக்கும், தனியாக ஒரு மனது இருக்கிறது. எங்களது மனதும் தீயுடன் அதாவது அக்னி பகவானுடன், இரண்டறக் கலந்து விடுகிறது. அதனால் தான், ஜுவாலைகள் நாங்கள் கேட்கும் எந்த விருப்பத்தையும் நிறைவேற்றுகிறது. இதை நீ நம்பித்தான் ஆக வேண்டும்... "எனவே, நம் உள்ளே இருக்கும் அக்னியான குண்டலினி, பரந்த உலகின் ஆக்கல், அழித்தல் சக்தியின் அங்கமாகத்தான் உள்ளது. அது, வெளியே உள்ள அகில உலக ஆக்கல் அழித்தல் சக்திகளுடன் ஒன்றுபட்டு இந்த தூனியில் பிரவேசித்து காட்சியளிக்கிறது... "தீ ஜுவாலைகள், தூனியிலிருந்து ஆர்த்தெழுந்து, ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரைக்குச் செல்வதால் மனிதன் கடவுள் ஆகிறான். அப்பொழுது பரந்துவிரிந்த எண்ண உணர்வுகளை அணுகவும் செய்யலாம், உபயோகிக்கவும் செய்யலாம், கவலைகள் மறையும். எச்சரிக்கையுடன் கவனித்தல் அவசியம்."

"பாபாஜி, யோகாவைப் பற்றியும் யோகப் பயிற்சியை பற்றியும் சொல்லுங்கள்"என்றேன். பாபாஜி புன்னகையுடன். "மது, யோகா புராதனமான விஞ்ஞானம். பின் பதஞ்சலி முனிவரால், வரைமுறைப்படுத்தப்பட்டது. பதஞ்சலியால் எழுதப்பட்ட அஷ்டாங்க யோக சாஸ்திரம், விலைமதிக்க முடியாத மாணிக்கம்... "எட்டு அங்கங்கள் கொண்ட யோகாவின் குறிக்கோள், சித்த விருத்தி நிரோதன். அதாவது மனதின் சஞ்சலங்களைத் தவிர்த்துவிடுவது என்பதாகும். தியானத்திற்குரிய யோகாவில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறை திட்டங்களை பயிற்சி செய்து அதன் பயிற்சிகளான ஆசனா, பிராணாயாமா, பந்தம், முத்திரைகள், மேலும் கிரியா மூலம் மனது அமைதிப்படுத்தப்பட்ட பிறகு அது சமாதி நிலைக்கு நுழைகிறது....
 "சமாதியில் பல வகைகள் இருக்கின்றன. சமாதி நிலை என்பது தான் அடிப்படை தேவையாகும். அதற்குப் பிறகு, உபநிஷதங்களின் கருத்துக்களைப் புரிந்து கொண்ட மனது, உயர்நிலை உணர்வுகளின் நிலைகளுக்குள் நுழைகிறது. அதனால், எல்லா கட்டுப்பாடுகளில் இருந்தும் விடுதலை அடைகிறது. இதுதான் விடுதலை நிலை அதாவது கைவல்ய நிலை. இதுதான் யோகாவின் இறுதிக் குறிக்கோள் ஆகும்." "ஆனால், பாபாஜி! யோக சக்திகள், சித்திகள், அமானுஷ்ய சக்திகளாக எங்கும் வியாபித்து இருப்பது, எல்லா சக்திகளையும் பெற்று சர்வ வல்லமையாக இருப்பது,எல்லாம் அறிந்த சர்வ ஞானியாக இருப்பது இவைகளை எல்லாம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?" 
 
பாபாஜி சத்தம் போட்டு சிரித்து விட்டு, "எல்லோரும் யோக சக்திகளின் மீதே நாட்டம் கொள்கின்றனர். எப்படி யோக சக்திகளை பெறுவது என்று ஒரு புத்தகத்திற்கு பெயரிட்டு விட்டால், அந்தப் புத்தகம் சூடான இட்லிகள் போல விற்றுவிடும்... "யோக சக்திகள் இருக்கின்றன. ஆனால் அவை மிக அரிதாக இருக்கின்றன. அற்புதங்கள் என கூறப்படுபவைகளை நிரூபித்து காண்பிப்பது எல்லாம் வெறும் தந்திர வேலைகள் தான். யோகா செய்யும் பொழுது, மனது ஒருமுக படுகிறது. சாதாரண மனிதன் ஒரு வேலையை செய்து முடிக்க பல வருடங்கள் ஆகும் போது யோகிகளால், அதே வேலையை குறுகிய காலத்திலேயே முடிக்க முடிகிறது.... "மேலும் மனது சஞ்சலம் இல்லாமல் இருந்து, அமைதியாக இருப்பதாலும், 'தான்' என்ற சுயநல எண்ணங்கள் இல்லாமல் இருப்பதாலும், இதர மனதுகளுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறது. அதனால் இன்னொரு மனதினில் ஓடும் எண்ணங்களை யோகியால் உணரமுடிகிறது...
" இதனை ஆரம்ப நிலை யோகிகளால் கூட உணர முடியும். இந்த உண்மையை சரியான விதத்தில் புரிந்து கொள்ளாவிட்டால், யோகியின் எண்ணங்களும், நடவடிக்கைகளும், பக்குவப்படாத மனதினருக்கு மிகப்பெரிய வினோதங்களாகவும், ஏன்.. அற்புதங்களாகவும் கூடத் தென்படுகின்றன... "ஒன்று தெரிந்து கொள். ஆண் பெண் சேர்க்கையால் உருவான ஆணோ,  பெண்ணோ,அவர்கள் எவ்வளவு மிக உயர் நிலையில் உள்ளவராக இருந்தாலும், சர்வ வியாபியாகவோ, சர்வ சக்தி படைத்தவராகவோ அல்லது சர்வ ஞானியாகவோ  இருக்கவே முடியாது...
" ஒரு உடல் திடகாத்திரமான உணவை உண்டாலும், யோகாவின் மூலம் புத்துயிர் பெற்றிருந்தாலும், எவ்வளவு காலமானாலும் இறந்துதான் ஆகவேண்டும்...
"எனது குருவான ஸ்ரீ பாபாஜி கூட, பல நூறு வருடங்கள் வாழ்ந்து இருந்தாலும் உயிரை நீத்து தான் ஆக வேண்டும். நானும் ஒருநாள் இறந்துதான் போவேன்... 
"மனிதன் எதை அற்புதங்கள் என்று அழைக்கிறானோ அவை எல்லாம் மனிதனால் இன்னும் புரிந்து கொள்ளப்படாத இயற்கையின் சில கோட்பாடுகளினால் நடக்கிறது. எந்த யோகி, இந்தக் கோட்பாடுகளை அறிந்து இருக்கிறாரோ, அவரால் இவைகளை எல்லாம் செய்ய முடியும்" என்றார்.

"உண்மை என்னவென்றால் புத்திக் கூர்மையுடன் இருக்கக்கூடிய எந்த மனிதனாலும் எல்லாம் அறிந்த சர்வ ஞானியாக இருக்கவே முடியாது. ஆனால் இன்னொரு மனிதனின் மனதுடன், தேவைப்படும் பொழுது இணக்கமாகும் சக்தியை முயன்று அடையலாம். அப்படி அடைந்த அறிவை தற்காலிகமாக சில பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ளவும் செய்யலாம்.

"தெய்வமே தன்னை வெளிப்படுத்திக் கொள்வது போல பிரம்மாண்டமாக அமைந்து இருக்கும் இப்படிப்பட்ட இயற்கை தான் தெய்வீகம். உன்னுள்ளே நீ தேடும் தெய்வம் இங்கே உன் கண்களுக்கு எதிரிலேயே இருக்கிறது. அமைதியாக தளர்வாக இரு. நறுமணம் நிறைந்த காற்றினை சுவாசி!" என்று பாபாஜி அந்த சொர்க்கத்தை அனுபவிக்கும் வழியைக் கற்றுக் கொடுத்தார்.

"பாபாஜி, இஷாவாஸ்ய உபநிஷதம் எதை நிலை நிறுத்த பார்க்கிறது என்பதை இப்பொழுது புரிந்து கொண்டேன். 'இஷா வாஸ்யம் இதம் சர்வம்...'அதாவது எல்லாவற்றையும் விட பிரதானமான ஆண்டவன், எல்லாவற்றிலும் உள்ளே மறைந்து வசித்துக் கொண்டிருக்கிறான் என்று நெடுங்காலமாக நினைத்துக்கொண்டிருந்தேன். இப்பொழுது என்ன புரிந்து கொண்டேன் என்றால், நாம் எவற்றையெல்லாம் பார்க்கிறோமோ,  எவற்றையெல்லாம் முகர்கிறோமோ, ஸ்பர்சிக்கிறோமோ, சுவைக்கிறோமோ,அவையெல்லாம்  இஷா என்னும் ஆண்டவனைத் தவிர வேறில்லை. ஆண்டவனை வேறு எங்கும் தேட வேண்டியதில்லை..."


கண்களைத் திறந்து வைத்துக்கொண்டே தியானம் செய்யும் முறையை பாபாஜி எனக்கு விளக்கினார். 
"பலருக்கு கண்களை மூடியவாறு தியானம் செய்வது எளிதாக இருப்பதில்லை. அவர்கள் தியானத்தில் ஆழ்ந்து இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், வெளி உலகத்துடன் வைத்திருக்கும் இணைப்புகள் துண்டிக்கப்படும் பொழுது, மனது, உள்ளேயே ஒரு தனி உலகைத் தந்திரமாக உருவாக்கிக் கொண்டு, அந்த எண்ண ஓட்டங்களின் பிடியில் சிக்கிக் கொள்ளும்...
"எனவே அதற்கு பதிலாக உனது கண்களை திறந்து கொண்டு, கீழே ஓடிக்கொண்டிருக்கும் கங்கையைப் பார். உயிரோட்டம் போலவே இடைவிடாமல் பாய்ந்து ஓடிக் கொண்டிருப்பதைப் பார். அசைவற்ற குட்டையைப் போல எங்கேயும் தேங்கி விடாமல், எப்பொழுதும் மாற்றம் அடைந்து கொண்டு, எப்பொழுதும் புதிதாக பளிங்கு போல தெள்ளத் தெளிவாக, தனது  வேர்களில் இருந்து விடுபட்டு, பிரமாண்டமான பிரம்மனாகவே ஆகிறது... "பார்த்துக்கொண்டு இருக்கும்பொழுதே எல்லையில்லாத பிரபஞ்சத்தின் ஓட்டத்தில் நீயும் ஒன்றிவிடுவாய். எந்தவிதக் கற்பனையும் செய்யாதே. திறந்த மனதுடன், எந்தவிதமான முன் குறிக்கோளும், முன் அபிப்ராயமும் இல்லாமல், கவனி. தடை எதுவும் இல்லாமல் போ. அதில் மகிழ்ச்சி கொள்..."


'ஒவ்வொரு நாளும் 13 மணிநேரம் என்ற கணக்கில் 13 ஆண்டுகள் நீ தியானம் செய்து வந்து இருக்கலாம். ஆனால் ஒரு உயிர் வலியினால் துடிக்கும் போது, அதன் அழுகைக் குரலை உன்னால் கேட்க முடியவில்லை என்றால், உனது 13 ஆண்டுகளின் தியானமும் வீணாகிவிட்டது. தியானம் உனது இருதயத்தை மிருதுவாக்கவில்லை என்றால், அதை ஜன்னல் வழியே  எறிந்து விடு. அப்படிப்பட்ட தியானத்தினால் உனக்கு எந்த உபயோகமும் இல்லை!'

                             ( தொடரும்)

Sunday, August 9, 2020

எல்லாம் ஒன்றே

பாகம்:-  .2. "நீ" 

*1*  நீ யார்? இந்த உடல் நீயா?  இந்த உடல் நீயாயின்: நீ தூங்கும் பொழுது இவ்வுடலில் ஒரு பாம்பு ஊர்ந்தாலும் நீ அறியமாட்டாயே. அப்படியிருக்க நீ இவ்வுடம்பு ஆவாயா? ஒருநாளும் நீ இவ்வுடம்பு ஆகாய். ஆகையால் இவ்வுடம்புக்கு வேறாயுள்ளவன் நீ.

*2* நீ தூங்கும்போது கனாக் காண்கிறாயே; அந்தக் கனவில் உன்னை ஏதோ ஒருவனாக எண்ணிக்கொள்கிறாயே;  அவ்வொருவன் நீயா? அல்ல. அவ்வொருவன் நீயாயிருந்தால் நீ விழித்துக் கொண்டவுடன் அவ்வொருவன் எங்கே? அவ்வொருவன் நீ ஆகாமற் போனதோடு அவ்வொருவனுக்காக உன்னை நீ எண்ணியிருந்ததற்காக நீயே வெட்கப்படுகிறாய். ஆகையால் அவ்வொருவனும் நீ அல்ல. அவ் வடிவத்துக்கு வேறாயுள்ளவன் நீ.

*3* கனவும் காணாமல் நீ அயர்ந்து தூங்கினாயே; அப்பொழுது உன் நிலைமை என்ன? அந்த நிலைமை தான் உனக்கு வடிவமோ என்னில், அந்த நிலைமையை உனது வடிவமாக ஒப்புக்கொள்ள உனக்கு ஒரு நாளும் சம்மதமிராது. ஏன்?- உன் நிலைமை இன்னதென உனக்கே உணர வராத ஒரு அந்தகாரத்தை நீயாக வைத்துக்கொள்ள நீ அவ்வளவு அறிவற்றவனல்லவே. அறிவினால் மற்றப் பொருட்களை விடப் பெருமை பெற்ற நீ, அறிவற்ற அதாவது தன் உணர்ச்சியற்ற ஒரு நிலையை நீயென எப்படி ஒப்புக் கொள்வாய்? அதுதான் எப்படி உண்மையில் உன்னுடைய வடிவமாயிருக்கும்? இருக்காது. "இந்த நிலை தன்னைத்தான் அறியாத அந்தகார நிலை" என்று அறிகிற அறிவாளி நீயாயிருக்க, உன்னால் உணர்ந்து இகழப்பட்ட ஒரு நிலை நீ ஆவாயா? ஆகையால், இந்த அந்தகார நிலையும் நீ அல்ல. அதற்கு வேறானவன் நீ.

*4*  உன்னுடைய இந்த ஸ்தூல உடம்பே நீ அல்ல என்னும்பொழுது, இதற்கும் புறம்பான ஒரு பொருள் நீ ஆவாயா? ஆகவே, இவ்வுடம்பு நீ அல்லாதது போலவே, இவ்வுடம்பு க்குப் புறம்பான பொருள்களும் நீ அல்ல;  இவ்வுடம்பினுள் நீ கண்ட கனவாகிய மற்றொரு உடம்பும் நீ அல்ல; ஒன்றும் அறியாத அறியாமை வடிவாகிய சுஷுப்தியும் நீ அல்ல; இம்மூவகை வடிவத்துக்கும் இவ்வுலகத்துக்கும்  வேறாயிருப்பவன் நீ.

*5* இம்மூவகை வடிவமும் இருவகையில் அடங்கும். ஒன்று-- மற்றொரு பொருளைச் சுட்டியறிந்து கொண்டிருக்கும் நிலைமை; மற்றொன்று--தன்னைக்கூடத் தான் அறியாத நிலைமை. ஜாக்ரத்திலும்  சொப்பனத்திலும் நீ ஏதாவது ஒரு பொருளை முன்னிலையாகக் கொண்டு சுட்டறிவுடையவனாக இருக்கிறாய். ஸுஷுப்தியில் நீ ஒன்றையும் அறியாத, அதாவது உன்னைக் கூட அறியாத நிலைமையில் இருக்கிறாய். இவ்விரண்டு நிலைமையில் உன்னுடைய சகல அனுபவங்களும் அடங்கும். இவ்விரண்டு நிலைமையும் உன் சொந்த நிலை அல்ல. இந்த இரண்டு நிலைமைக்கும் வேறாய் உள்ள மற்றொரு நிலைமையை உடையவன் நீ.

*6* அந்த நிலைதான் என்னவெனில், அதுவே துரீயம் எனப்படும். துரீயம் என்றால், நான்காவது நிலை. ஏன் இப்பெயர் வந்ததென்றால் "நீ கண்ட  ஜாகரம்,சுழுத்தி, சொப்பனம் என்னும் மூன்றும் உன் நிலை அல்ல; இதற்கு வேறாகிய நான்காவது நிலைமையையுடையவன் நீ" என்பதற்காக அந்த நிலைக்கு துரீயம் என்று பெயர் வைக்கப்பட்டது.ஜாகரம், சொப்பனம்,சுழுத்தி  என்னும் மூன்றையும் ஒரு சொப்பனமாக வைத்துக்கொண்டால், அம்மூன்றினின்றும் விழித்த ஜாகரம் துரீயமாகும். ஆகவே, துரீயமானது, ஒடுக்கத்தில்  ஸுஷுப்தியைக்காட்டிலும் ஒடுக்கமுள்ளதாயும், விழிப்பில் ஜாகரத்தைக் காட்டிலும் விழிப்புள்ளதாயும் இருக்கிறது. ஆகையால், ஜாகர, சொப்பன, சுழுத்திகளுக்கு வேறாயுள்ள அந்தத் துரீய நிலையே உன் சொந்த நிலை. அதுவே நீ.

*7* அத்துரீயம் எப்படிப்பட்டதெனில் --அறிவானது ஒன்றையும் சுட்டியறியாது; அவ்வறிவு தன்னையறியாமலும் இராது. அதாவது வேறொரு பொருளையும் அறியாததாயும், ஆனால்  ஜடத்தன்மை இல்லாததாயும் இருக்கிற அந்த அறிவே துரீயமாகும். அதை ஒரு க்ஷணமாவது கண்டவன், உண்மையை கண்டவன். அதுவே நீ. 

*8* இந்தத் துரீயத்தைக் கண்டவனுடைய மேல் நிலை என்னவெனில்--  அவன் அதே நிலையில், அதாவது ஒரு பொருளையும் சுட்டியறியாத நிலையில் எப்பொழுதும் இருப்பான் என்பது ஒருவருடைய அனுபவமும் அன்று.இந்த துரீயத்தைக் கண்டவன் அந்த நிலைமையிலிருந்து இவ்வுலகில் விழிக்கிறான். ஆனால், அவனுக்கு இவ்வுலகம் பழைய உலகம் அன்று; அன்று தான் கண்ட அந்த ஏகமான துரீய அறிவு எதுவோ அதுவே இந்த எல்லாமாய் விளங்குகிறதெனக் காண்கிறான். அந்த அறிவையன்றி இவ்வுலகத்திற்கு அவன் வேறு வடிவம் கற்பித்துக் கொள்ள மாட்டான். ஆகவே, அவன் தனக்குள் கண்ட அதையே  புறம்பில் வேறு வடிவமாகக் காண்கிறான். பழைய பேதம் ஒழிந்து அபேத நிலையை இப்பொழுது அவன் எங்கும் காண்கிறான். இப்பொழுது எல்லாம் அவன். அவனையன்றி ஒன்றும் இல்லை. கண் மூடினும் விழிக்கினும் எது எவ்வாறாயினும் எல்லாம் அவனுக்கு ஒரே நிலை. அதுவே பிரம்ம நிலை. அதுவே உள்ளபடி உள்ள நிலை. அவ்வுண்மை நிலையே நீ.

*9* இதற்குமேல் யாதொரு நிலையும் இல்லை. உள் என்றும் புறம்பு என்றும் சொல்லும் சொல்லுக்கு அவனுக்குப் பொருள் இல்லை. எல்லாம் ஒன்று. அவன் உடம்பும் சொல்லும் எண்ணமும், அவனுக்கென்று சுயநயத்தோடு உழைத்தலை மறந்துவிடும். அவற்றின் உழைப்பெல்லாம் எல்லாருக்கும் எல்லாப் பொருளுக்கும் பொதுவான அருள் உழைப்பு. "தான்" என்ற துண்டு போனது போனது தான். அந்த அகம்பாவத்துக்கு மறுபடி உயிர்த்தெழுதல் ஒரு நாளும் கிடையாது. இதனால் இவன் அப்பொழுதே முக்தன் என்று சொல்லப்படுகிறான். இந்த ஸ்தூல உடம்பு இருந்தாலும், அது அவன் இருப்பு அன்று. இந்த ஸ்தூல உடம்பு இறந்தாலும்,அது அவன் இறப்பு அன்று. அவன் நித்யன். அவனைத் தவிர ஒன்றும் இல்லை. அவனே நீ. 

*10* தெய்வம் என்பது எது?அருள் வடிவமானது. அருள் என்பது எது? தான் என்ற  துண்டான எண்ணம் அற்றது. இந்நிலைமை ஒன்று உண்டு என்பதை ஒருவன் உணர்வது எப்படி? தான் அந்த நிலையை பெற்றால் தான். அந்த நிலையைப் பெற்றவன் "தெய்வத்தோடு ஒன்றாகித் தெய்வத்தை அறிந்தான் "என்று வேதத்தில் புகழப்படுகிறான். ஆதலின், ஒருவன் இவ்வுலகத்தில் அடையக்கூடிய நன்மையும், உலகத்துக்குச் செய்யக்கூடிய நன்மையும் இந்த அபேத நிலையைப் பெறுதலே. உண்மையில் இதை அன்றி வேறு நிலைகள் இல்லை. வேறு நிலைகளெல்லாம் அறியாக் காலத்தில் தோற்றுபவை. அறிந்தவனுக்கு இருப்பது ஒரே நிலைதான் அதுவே நீ.

Tuesday, August 4, 2020

எல்லாம் ஒன்றே

எல்லாம் ஒன்றே என்ற நூலின் முதல் பாகத்தின் தொடர்ச்சி...

*7* இவ்வுலகத்தில் பொருள்களெல்லாம் வேறுவேறாகத் தோன்றுகின்றனவே, ஒன்று என்று எப்படி எண்ணுவேன், அதற்கு ஒரு வழி உண்டா? என்று கேள்; சொல்லுகிறேன்: ஒரு மரத்தில் இலை வேறு,பூ வேறு, காய் வேறு,கிளை வேறு - இப்படி காண்கிறோமே, ஆனாலும் அவையெல்லாம் ஒன்றே. மரம் என்ற சொல்லில் அவ்வளவும் அடங்கியதே. அவ்வளவுக்கும் மூலம் ஒன்று; உயிர் ஒன்று; அது போலவே, இவ்வுலகில் வேறு வேறாகக் காணப்படும் - எல்லா பொருள், எல்லா உடல், எல்லா உயிருக்கும் - மூலம் ஒன்றே, உயிர் ஒன்றே. ஆகையால் எல்லாம் ஒன்றே.

*8* ஓ! நல்லவனே! எல்லாம் ஒன்றென்பது நன்மைக்கோ தீமைக்கோ, நீயே கவனி. தன்னைப் போலப் பிறரையும் பிறரைப் போல தன்னையும் பார்க்கிறவனே நன்மையில் நடப்பான் என்றால், தானாகவே பிறரையும் பிறராகவே தன்னையும் எண்ணுகிறவனுக்குத் தீமை எப்படி வரும்? ஒன்றே என்று எண்ணுவதை காட்டிலும் உயர்ந்த வழி நன்மைக்கு வேறு இருக்குமானால் சொல். ஒரு நாளும் வேறு வழிகள் இவ்வளவு நன்மை தரமாட்டா. ஒன்றென்று எண்ணுவதை விட அதிகமாக எப்படி மற்ற உயிர்களிடத்தில் ஒருவன் அன்பாய் இருக்க முடியும். ஒன்றென்றே எண்ணு;  ஒன்றென்றே நேசி. உண்மையில் எல்லாம் ஒன்றே.

*9* ஒன்றென்று அறிந்தவன் மனது அடைந்த சாந்தம், ஆறுதல் யாருக்கு உண்டு! அவனுக்குக் கவலை இல்லை. எல்லாருடைய நன்மையும் அவனுடைய நன்மையாயிருக்கிறது. பிள்ளைகளினுடைய நன்மையை, தாய் தனது நன்மையாக கருதுகிறாள். ஆயினும், தான் வேறு, அந்தப் பிள்ளைகள் வேறு என்ற ஒரு எண்ணம் அவளுக்கு இருப்பதனாலே, அவள் அன்பும் பரிபூரண அன்பு அன்று. எல்லாம் ஒன்று என்று அறிந்த ஞானியின் அன்போ, தாய் அன்பிலும் மேலான அன்பு. ஒன்றென்று அறிந்து கொள்வதை விட இவ்வன்பு வருவதற்கு வேறு வழி இல்லை. ஆதலால் எல்லாம் ஒன்றே.

*10* இவ்வுலகமெல்லாம் உன்னுடைய அழியா உடம்பாகவும், நீ இவ்வுலகத் துக்கெல்லாம் அழியாத உயிராகவும் பார். இவ்வாறு நீ பார்ப்பதில் தீமை உண்டானால் சொல். தீமை இல்லாத வழியில் நடப்பதற்கு யார்தான் அஞ்சுவார்கள்? தைரியங்கொள். வேதம் இந்த உண்மையைத்தான் சொல்லுகிறது. உன்னைத் தவிர ஒன்றும் இல்லை. எல்லா நன்மையும் உனக்கு உண்டு. நீ நன்மையே வடிவாகிறாய். உன்னால் பிறர் அடைவதெல்லாம் நன்மையே. தன் உயிருக்கும் தன் உடலுக்கும் தீமை செய்வார் யார்? உடலில் புண் உண்டானால் சிகிச்சை செய்கிறோம்; அதில் உடலுக்குச் சிறிது துன்பம் உண்டாயினும் அது நன்மையின் பொருட்டே. அவ்வாறு நீ செய்கிற சில செய்கைகளும் இருக்கும்; அதுவும் உலக நன்மையின் பொருட்டே. அதனால் நீ பேத புத்தி உடையவனாகமாட்டாய். சுருக்கமாய்ச் சொல்லுகிறேன்:- ஒன்று என்று உணர்ந்தவன் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடப்பான். ஒன்று என்ற உணர்ச்சி, அவனை உண்மையில் நடத்துகிறது. அவனுக்குத் தவறுதல் என்பது கிடையாது. அவன்தான் உலகத்தில் கண்காணவந்த தெய்வம். எல்லாம் ஒன்றே.

எல்லாம் ஒன்றே

முக்திக்கு மிகச்சிறந்த வழி என்று ரமண பகவானால் கூறப்பட்ட "எல்லாம் ஒன்றே" என்னும் நூலை இனி சிந்திப்போம்..

முதல் பாகம்

1. ஒன்று.

*1* உன்னால் காணப்பட்ட இவ்வுலகமும், இவ்வுலகத்தைக் காண்கிற நீயும் எல்லாம் ஒன்றே.

*2* நான் என்றும், நீ என்றும், அவன் என்றும், அவள் என்றும், அது என்றும் நீ எண்ணுகிற எல்லாம் ஒன்றே.

*3* சித்து- அதாவது அறிவுடையது என்று நீ எண்ணுகிற உயிர்களும், ஜடம்- அதாவது அறிவற்றது என்று நீ எண்ணுகிற பூமி,ஜலம், நெருப்பு, காற்று முதலியவைகளும் எல்லாம் ஒன்றே.

*4* எல்லாம் ஒன்று என்று நீ எண்ணுவதனால் உண்டாகும் நன்மை, வேறு வேறு என்று எண்ணுவதனால் உண்டாவதில்லை. ஆகையால் எல்லாம் ஒன்றே.

*5* எல்லாம் ஒன்று என்று எண்ணுவதனால் உனக்கும் நன்மை; பிறருக்கும் நன்மை. ஆகையால் எல்லாம் ஒன்றே.

*6* நான் வேறு, நீ வேறு, அவன் வேறு என்று இவ்வாறு எண்ணுகிறவன், தனக்கு ஒருவிதம் நடப்பான்; பிறருக்கு ஒருவிதம் நடப்பான். அவ்வாறு நடக்காமலிருக்க அவனால் முடியாது. நான் வேறு, பிறர் வேறு என்று எண்ணிக்கொண்டிருக்கும் எண்ணம் ஒரு விதையாக இருந்து, தனக்கு வேறு பிறருக்கு வேறாக நடக்கிற பக்ஷபாதமாகிய மரத்தைத் தோற்றுவிக்கின்றது. தானும் பிறரும் எல்லாமும் ஒன்றே என்று அறிந்தவன், எப்படி நியாயம் தவறி நடப்பான்? பேதம் என்கிற விதை உள்ளவரையில் உன்னை அறியாமலே நீ தீமையில் பக்ஷபாதமாய் நடத்தலில் இறங்கிவிடுவாய். ஆதலால், பேதபுத்தியை விட்டுவிடு. எல்லாம் ஒன்றே.

Saturday, July 25, 2020

எல்லாம் ஒன்றே

            எல்லாம் ஒன்றே
            ---------------------------
"எல்லாம் ஒன்றே" என்னும் இந்நூல் வையை.ஆர்.சுப்பிரமணிய ஐயர் அவர்களால்  எழுதப்பட்டது. பின்னர்
1935 ஆம் ஆண்டில் மிகவும் கிடைப்பதற்கு அரிதாக இருந்த இந்நூலை பகவான் ஸ்ரீரமணமஹரிஷி சந்நிதானத்தில் பிரசுரம் செய்துள்ளார்கள்.

முகவுரை:

மனிதர்கள் விரும்புவது இன்பம்; வெறுப்பது துன்பம். இதையே மற்றப் பிராணிகளும் செய்கின்றன. ஆகையால், இவ்வளவோடு நின்றுவிட் டவர்கள் சாதாரண மனிதர்கள். ஆனால், மனிதர்களுக்குள் உயர்ந்த நிலையைப் பெற்றவர்களது கொள்கை என்னவென்றால் - நியாய வழியில் நடக்க வேண்டும்; அப்பொழுது வரும் இன்பமோ துன்பமோ இரண்டையும் பொறுமையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்- என்பதுதான். இந்த உணர்ச்சி உள்ளவர்களுடைய ஒற்றுமை நீடித்து நிற்குமே யொழிய, மேற்சொன்ன சாதாரண மனிதர்களுடைய ஒற்றுமை நீடித்து நிற்காது. இவ்வுணர்ச்சி யுடையவர்களுடைய ஒற்றுமையினாலேயே உலகத்துக்கு நன்மை உண்டாக வேண்டியிருக்கிறது. இதில், "நியாயம்" என்றால் என்ன?_ என்ற ஒரு கேள்வி மிக அவசியமானது. அதற்கு பதில் எழுதி முடிந்தபாடு எப்பொழுதும் இல்லை; ஏன்? நியாயம் என்பது அந்த அந்த இடம் நோக்கி உணர வேண்டியிருக்கிறது. யார் எவ்வளவு எழுதி வைத்தாலும், அவர்களாலும் விடப்பட்டுப்போன ஒரு இடம் உலகத்தில் நேரிடாமல் இராது. ஆகையால், எந்த ஒரு உணர்ச்சியை அடைந்தால் " நியாயம் என்பது இன்னது" என அந்தஅந்த இடத்துக்குத் தக்கபடி ஒருவனுக்குத் தோற்றுமோ, அந்த ஒரு உணர்ச்சியை ஒவ்வொருவரும் அடையவேண்டியது இன்றியமையாததாயிருக்கிறது.

    அது ஒரே உணர்ச்சிதான். அப்படிப்பட்ட உணர்ச்சிகள் பல இல்லை. அது ஒன்றாகவே யிருந்தும் அதை உலகத்தார் உணர்வது மிக அருமையாக இருப்பதுதான் இவ்வுலகத்தில் வியப்பை உண்டுபண்ணுகிறது. இதையன்றி வேறு வியப்பு உலகத்தில் இருப்பதாக எனக்குத் தோற்றவில்லை. அந்த ஒரு உணர்ச்சியை " உபநிஷத்துக்கள்" மிக வெளிப்படையாய்ப் போதிக்கின்றன. இந்நூலில், எனக்குத் தோற்றின ஒரு முறையில், அந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறேனேயொழிய, நான் புதிதாக எழுதினது ஒன்றுமில்லை. ஆயினும், இது என் கடமைகளில் ஒன்றாயிருக்கிறது.

       இதில் உள்ள அத்தியாயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவனாய் இருக்கையினாலே, ஒன்றில் விடுபட்டுப் போனதாகத் தோற்றும் ஒருவிஷயம் மற்றொன்றில் சொல்லப்பட்டிருக்கும்; வெளிப்படையாய்த் தோற்றாத ஒருவிஷயம், ஆழ்ந்து கவனித்தால் தோற்றும். அதிலும் விளங்காததை மற்ற நூல்களாலும் பெரியோர்களாலும் உணரவேண்டியது வாசிப்போர் கடமைகளில் ஒன்றாயிருக்கிறது.

ஜகஜ்ஜநநி ஸத்குரோபாஹி.

Friday, June 19, 2020

பஞ்ச மகா யக்ஞம்

      ✋பஞ்ச மகா யக்ஞம்✋
      --------------------------------

👨‍👩‍👧‍👦 இல்லறத்தில் இருப்பவர்கள் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய ஐந்து யாகங்கள் அல்லது யக்ஞங்கள்.

1. பிரம்ம/ ரிஷி யக்ஞம்
2. தேவ யக்ஞம்
3. பித்ரு யக்ஞம்
4. மனுஷ்ய யக்ஞம்
5. பூத யக்ஞம்

**பிரம்ம/ ரிஷி யக்ஞம்**
   
     மகான்கள், ரிஷிகள் எழுதிய நூல்களைப் படித்தல், கேட்டல் மற்றும் அவைகளை சிந்தித்தல் ( தினமும் ஒரு திருக்குறளைப் படித்து சிந்தித்தாலே இந்த யக்ஞத்தை செய்ததாகும்). வாழ்க்கையை நன்றாக வாழ்வது எவ்வாறு என்றும், உலகத்தின் இயல்பு என்ன என்றும், நமக்கு எதிரான சூழ்நிலைகளில் மனம் தளராமல் அவற்றைக் கடந்து செல்வது எவ்வாறு என்பதையும் சாஸ்திர நூல்கள் நமக்கு கற்றுத் தருகின்றன. இவற்றைத் தினந்தோறும் படிக்கவும் வாழ்வில் பின்பற்றவும் செய்வதன்மூலம் ரிஷிகளுக்கு நாம் பட்டுள்ள கடனைத் தீர்க்கிறோம்.

**தேவ யக்ஞம்**

    பூஜை, ஹோமம், ஜபம், தியானம், விரதம் போன்ற அனுஷ்டானங்கள். இவற்றில் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடிக்கும் போது தேவதைகளிடம் நாம் பட்ட கடன் தீர்கிறது. நமக்குப் பிடித்த ஏதாவது ஒரு தெய்வத் தை நினைந்து அவனுடைய நாமத்தை மனதிற்குள் சொன்னாலே போதும். மேலும் ஒரு எளிய வழி காலையில் எழும்போது அன்றைய பொழுது நல்லபடியாக விடிந்ததற்கு ஒரு நன்றியுணர்வும், இரவு தூங்கும்போது அன்றைய நாள் நல்லவிதமாக முடிந்ததற்கு ஒரு நன்றியுணர்வையும் வெளிப்படுத்தினாலே போதும்.( நம் கர்மவினையின் காரணமாக துன்பங்கள் ஏற்பட்டாலும் அதற்கு நடுவிலும் ஏதோ ஒரு நன்மை நடந்திருக்கும். )🌞

**பித்ரு யக்ஞம்**

   👥 மூதாதையரை வழிபடுதல், பெற்றோரைப் பேணுதல். இன்றைய பெற்றோர் தான் நாளைய பித்ருக்கள். அதனால் பெற்றோரைப் பேணுவது மிகவும் முக்கியமாகக் கூறப்படுகிறது. ஆதரவற்ற முதியவர்களைப் பேணும்போதும் பித்ருக்களிடம் நாம் பட்ட கடன் தீர்கிறது.

** மனுஷ்ய யக்ஞம்**

    வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்குத் தங்க இடம் கொடுத்து அமுது படைத்து விருந்தோம்புவது, குடும்ப அங்கத்தினர் அல்லாத மற்ற மனிதர்களிடம் அன்பு காட்டுவது, உதவி செய்வது போன்றவைகள் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் பட்ட கடனைத் தீர்க்கிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் விருந்தினர் வருகை குறைந்துள்ளதால் தினமும் நாம் சமைக்கும்போது ஒரு பிடி அரிசியை எடுத்து சேகரித்து வைத்து சமயம் வரும்போது தேவைப்படுபவர்களுக்கு  உதவி செய்யலாம். 👬

**பூத யக்ஞம்**

    மரம், செடி, கொடிகளை வளர்த்தல், பறவைகள், மிருகங்களுக்கு உணவளித்தல். இக் கடனைத் தீர்ப்பது மிகவும் எளிது. 🐶🐱🐿️🐜🐦🌳🌱 


   மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த ஐந்து யக்ஞங்களையும் தினமும் கடைப்பிடிக்க வேண்டும். இதை அனைவரும் கடைப்பிடித்தால் நம் வீடும், நாடும் நலம்பெறும்.🙏