Monday, December 7, 2020

திரு. லக்ஷ்மண்

ஏன் ஒரு சமூகம் படுகொலையை கொண்டாடுகிறது? - மீள் பதிவு

**********************************************
'ஏன் உங்க குழந்தைய அடிக்கிறீங்க?

தப்பு பண்ணான் சார் அதான் அடிச்சேன். என் குழந்தை மேல எனக்கு மட்டும் பாசம் இருக்காதா?

'உங்க குழந்தை தப்பு பண்ணலைங்கிறது இல்லை என்னோட வாதம்.நீங்க அதுக்கு அடிக்கிறது தான் தீர்வுன்னு யோசிச்சீங்க இல்லையா? நீங்க கவனிக்க வேண்டியது உங்கள் செவ்வாய் ஆதிக்க மனம் வன்முறை தான் தீர்வுன்னு யோசிச்சதை தான்.

உங்களுக்கு செவ்வாய் ஆதிக்கம் இல்லாம சந்திரன் ஆதிக்கம் இருந்திருந்தா அவன் தப்பு பண்றத பாத்து அடிச்சிருக்க மாட்டீங்க. அழுதிருப்பீங்க.கெஞ்சியிருப்பீங்க. கொஞ்சி சொல்லியிருப்பீங்க.

உங்க செயலுக்கு உங்க குழந்தையின் தப்பு மட்டும் காரணமில்லை. அடக்கு முறை விரும்புற உங்க மனதோட இயல்பு தான் காரணம். அதே போல உங்க பையன் மேல உங்களுக்கு பாசம் இருகுங்கிற உண்மையையும் நான் ஒத்துக்கிறேன் '

**********************************************

சமூகம் என்பது உருவாக அடிப்படை காரணம் சூரியன் ஆதிக்கம் நிறைந்தவர்கள். இன்றும் சூரியன் ஆதிக்கம் நிறைந்தவர் தான் மற்ற மனிதர்களை ஒன்று சேர்த்து எந்த ஒரு இயக்கத்தையும் கட்டமைப்பார்கள். தன் குடும்பம் தன் ஊர் தன் இனம் தன் நாடு போன்ற பல வகையான உணர்வுகள் மூலம் மக்களை ஒன்றினைத்து வாழ முற்படுவார்கள்.

அதே சமயம் மதம் வருவதற்கு முன் நம் சமூகம் வன்முறை நிறைந்த சமூகமாகவே இருந்திருக்கிறது. யார் பலம் பொருந்தியவரோ அவரே வாழ முடியும். முழுக்க முழுக்க பொது சமூகம் செவ்வாய் ஆதிக்கத்தில் வாழ்ந்து வந்தது.

என்னதான் மன்னர்கள் சூரியன் களாக இருந்தாலும் ஒரு உயிர் வாழமுடியுமா என்பதை அதன் வீரமே முடிவு செய்துகொண்டிருந்தது.

பின் மதம் மனிதர்களுக்கு குற்ற உணர்வை போதித்தது. அதாவது ஒரு வகையில் குரு கிரகத்தின் ஆதிகத்தில் பொது சமூகம் வாழத்தொடங்கியது. அது தான் popeகள் மற்றும் மதகுருக்கள் உருவாக காரணம்.

மதம் எப்பொழுதும் ஒரு கேள்விக்குட்படுத்தப்படாத ஒரு புனிதத்தையே முன்னிறுதத்தும். அதாவது கடவுள் , புனித நூல், புனித ஊர் ,புனித சிலைகள் இன்ன பிற.. இந்த புனிதம் மனிதர்களை இரண்டாக பிரித்தது. நல்லவர்கள் தீயவர்கள் உருவானார்கள். நல்லவர்களாக இருந்தால் இந்த சமூகத்தோடு வாழலாம். கெட்டவராக இருந்தால் இந்த சமூகம் அவர்களை புறகணித்துவிடும் என்ற மனநிலை உருவாக்க்கியது.

இந்த புனிதப்படும் குணம் மெல்ல வளர்ந்து மக்கள் வன்முறையை கைவிட்டனர். அதற்காக மதம் நல்லது என்று நான் பேசவரவில்லை. மதம் எப்படி இயங்குகிறது என்பதையே கூறுகிறேன்.

மதம் முக்கியமாக செய்ததது செவ்வாய் ஆதிக்க வீரர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது தான். அதற்கு பிறகே ஓரளவிற்கு மனிதர்கள் எதற்கெடுத்தாலும் சண்டை கொலை என்ற எண்ணம் விடுத்து கடவுளையும் ஓரளவிற்கு சட்டத்தையும் புனிதத்தை ஏற்றுக்கொண்டார்கள். காலம் ஆக ஆக மதம் மெல்ல அரசர்களையே சூரியனையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரச்செய்தது.

இந்த புனிதப்படுத்தபட்ட சமூகத்தில் கோவத்தை வெளிடுத்த வண்முறை உணர்வை வெளிபடுத்த இடம் மிக க்குறைவாகவே உள்ளது. என்னதான் எந்த அதீத வன்முறை உணர்ச்சி இல்லாமல் மனிதர்கள் வளரும் சூழலை நாம் உருவாக்கி இருந்தாலும் பிறக்கும் அனைவரும் செவ்வாய் ஆதிகம்மே இல்லாமல் பிறப்பதெல்லாம் இல்லை.

இன்றும் மனிதர்கள் பிறந்து கொண்டே இருக்கிறார்கள். அதாவது மதத்திற்கு முந்தைய காலத்தில் இருந்து இன்று வரை பிறக்கும் மனிதர்கள் மாறவில்லை. அவர்கள் வாழும் சூழல் மட்டுமே மாறியிருக்கிறது.

கோவத்தை உடல் பலத்தை ஆயுதத்தை விரு்பபவர்கள் காவல் துறை மற்றும் ராணுவத்துறையில் சேர்ந்து கொள்ளலாம். இவர்கள் இயங்குவது சட்டம் என்ற புனிதத்திற்கு உட்பட்டுத்தான். அதனால் தான் அவர்களை புனித சமூகம் தனது அங்கமாக வைத்திருக்கிறது. அதாவது அவர்களுடைய செவ்வாய் குணம் சமூகத்தில் நல்லவைகளுக்காக சமூகத்தை காப்பாற்றுவதற்காகவே இருக்கிறது என்ற அளவிவேயே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதே சட்டத்தை மீறுபவர்கள் ரௌடிகள் அடியாட்களாக ஆகிவிடுகின்றனர். இருவருமே அடக்குமுறையை வீரத்தை முன்னிறுத்துபவர்களே. ஒன்றும் வித்யாசமில்லை. இதில் சிறு பகுதியினர் செவ்வாய் உடைய சக்தியை மடைமாற்றும் நெருப்பு சார்ந்த தொழில்கள் மற்றும் வாகனங்கள் ஓட்டுவது போன்றறவற்றில் இருப்பார்கள்.

தமிழ்நாட்டில் இந்த வகைகளையும் தவிர்த்து செவ்வாய் ஆதிக்கம் உள்ள மனிதர்களுக்கு தங்கள் உணர்வை தீர்த்துக்கொள்ள இருக்கும் இன்னும் ஒரு முக்கிமான வடிகால் தான் சினிமா.

சினிமாவில் MASS Hero என்றால் யாரையாவது அடிக்க வேண்டும் யாரையாவது குத்த வேண்டும் சுட வேண்டும். வெட்ட வேண்டும். அப்படி இருந்தால் தான் நாம் ஒத்துக்கொள்வோம். அதாவது மக்கள் நலனுக்காக என்ற போர்வையில் இதை செய்தால் போதும். படம் பார்த்து முடியும் பொழுது நாம் பலரை சுட்டுவிட்ட திருப்தியில் வீடு வந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறோம்.

இப்பொழுது கலையையும் புனிதப்படுத்தும் வேலையை சிலர் செய்கின்றனர். அதீத புத்திமதி கூறுவது அங்கே போய் தேசிய கீதம் போடுவது போன்று சினிமா வன்முறையை தூண்டுகிறது என்று கூறி வடிகாலை அடைக்க முயற்சிக்கிறார்கள். அது மிகவும் ஆபத்தானது.ஒரு புனிதமான சமூகம் வாழவேண்டுமென்றால் அந்த புனிதத்திற்கு உட்படாத கலை மிகவும் அவசியம் ( இதை பற்றி விரிவாக தனியாக பேசலாம் )

நேற்று நடந்த படுகொலைகளை, தன் கோபத்தை பழி உணர்வை வெளிபடுத்த முடியாத எளிய மனிதர்களுக்கு ஏதோ ஒரு வகையில் வடிகாலாக ஆகிவிட்டது. அதனால் இதை வரவேற்கவே செய்வார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கோபம் வந்தால் தன் குழந்தையையே அடிக்க தயங்காதவர்கள்.

மேலும் இவர்களுக்கும் காவல் துறைக்கும் செவ்வாய் ஆதிக்கம் பொதுவாக இருப்பதால் காவல் துறை அவர்களை குற்றவாளிகளாக சித்தரித்ததும் எந்த கேள்வியும் இன்றி அதை ஏற்றுக்கொண்டனர்.உண்மையில் பல encounter கள் அரசு அதிகார நலன் கருதி அப்பாவிகளை கொன்றிருகிறது என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள மறுகிறார்கள்.

ஏனென்றால் கொலை மற்றும் பழிவாங்குதல் என்ற தங்கள் மனதின் நீண்ட நாளைய அழுத்ததில் இருந்து விடுவித்துகொள்ள கிடைத்திருக்கும் வாய்ப்பை எப்படி நழுவவிட முடியும். காமத்திற்கு ஏங்குபவனுக்கு முன் ஒருத்தி தனது சேலையை நழுவவிட்டால் அதை பார்த்துவிட நினைப்பான?இல்லை புனித நியாயத்தை யோசித்து கண்கள் மூடுவானா? அல்லது கண்களை மூடினாலும் பார்த்ததையே நினைத்து மனதிற்குள் மகிழாமல் இருப்பானா?

நான் யாரையும் தப்பாவனவர்களாக சித்தரிக்கும் எண்ணம் எல்லாம் இல்லை. ஒரு பிரச்சனையை புரிந்து கொள்ளவே ஆசைப்படுகிறேன்.

இங்கே அரசு அதிகாரம் ( சூரியன் ) புனிதமாக உள்ளது.
அன்பு (சந்திரன் ) புனிமாக உள்ளது
அமைதி நல்லிணக்கம் (ராகு ) புனிதமாக உள்ளது
ஒழுக்கம் (குரு ) புனிதமா உள்ளது
கடின உழைப்பு அடிபணிதல் (சனி) புனிதமாக உள்ளது
அறிவு ( புதன் ) புனிதமாக உள்ளது
ஞானம் ( கேது ) புனிதமாக உள்ளது

ஆனால் வன்முறையும் ( செவ்வாய் ) காமமும் (சுக்கிரன் ) மட்டும் மிகவும் கட்டுப்பாட்டில் உள்ளது.வன்முறை நிறைந்த விளையாட்டுளையோ ( வேறு வடிகாலையோ ) விபச்சராத்தையையோ நாம் அனுமதிகவில்லை. அந்த உணர்வு தான் ஒரு புறம் கற்பழிப்பை தூண்டுகிறது. மறுபுறம் கொலையை ஆதரிக்கவும் தூண்டுகிறது.

நாம் எல்லா வகையான மனிதர்களோடும் வாழ்கிறோம். நாம் யாரும் வன்முறையாளனகாவோ கற்பழிப்பவனாகவோ பிறக்கவில்லை. ஆனால் நம் உணர்வுகளுக்கான வடிகால் இல்லாத பொழுது அழுத்தம் ஏற்படும். அந்த நீண்ட நாளை அழுத்தம் வாய்ப்பு கிடைக்கும் பொழுது மீண்டும் மீண்டும் கற்பழிப்பும் பழிவாங்கமாக தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்

மற்றபடி சுட்டுவிட்டால் பயம் வரும் நடக்காது என்பெதல்லாம் முட்டாள்தனம். இந்தியாவில் அவன் அவன் வீட்டிலேயே தன் மனைவியை அவள் விருப்பம் இன்றி வன்புணர்வு செய்பவர்கள் மிக அதிகம். எல்லாரையும் சுட்டுவிடலாமா?

உண்மையான தீர்வை நோக்கி நகராமல் ஒவ்வொருவரையும் சுடத்தொடங்கினால் சீக்கிரேமே வன்முறை நிறைந்த சமூகமாகவே மாறுவோம். அதை தடுக்கவே முடியாது

***
நன்றி

திரு லஷ்மண் #thirulakshman #Thiru 

Dec 7 2019

பி.கு : 

1. சென்ற ஆண்டு ஆந்திராவில் நடந்த ஒரு கூட்டு வன்புணர்வும் அதை தொடர்ந்து நடந்த படுகொலையை குறித்தும் அதை எந்த கேள்வியும் இல்லாமல் மக்கள் ஆதரித்தது ஏன் என்பதை பற்றி எழுதிய கட்டுரை. இதில் இன்று சில மாற்றங்களை சேர்க்க வேண்டியுள்ளது. இருந்தாலும் அதை அப்படியே தருகிறேன்.

2. இதை படித்து ஒரு சிலர் , உன் குடும்பத்தில் இது போன்ற ஒரு விஷயம் நடந்தால் நிதானமாக இருப்பாயா என்று கேட்டிருந்தனர். நான் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக கொலை செய்ய தயங்கமாட்டேன். தனிப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்தாலும் அது சரியே. ஆனால் ஒரு படுகொலையை அரசாங்கம் செய்யக்கூடாது என்பதே என் நிலைப்பாடாக இருந்தது. இருக்கிறது.

திரு. லக்ஷ்மண்

ஆற்றலை சேமிப்பது எப்படி - 2 - உண்மையை நோக்கி பார்வையை விரிவு செய்யுங்கள்

*****

எந்த பிரச்சனையிலும் யார் சரி யார் தவறு என்று பார்த்து முடிவுக்கு வருவது நிறுத்துங்கள்.  எல்லோரும் சரி என்ற பார்வையை வளர்த்துக்கொள்ளுங்கள். அதுவே உண்மையை நோக்கிய பார்வை. அந்த உண்மையே உங்களுக்கு ஞானத்தை வழங்கும்

******

உதாரணமாக

நீங்கள் மெதுவாக அல்லது சரியான வேகத்தில் வண்டி ஓட்டுபவர். இன்னொருவர் வேகமாக வந்து உங்கள் வண்டியில் மோதிவிட்டார்

நீங்கள் சரி. அவர் தவறு என்று முடிவுக்கு வருவதும் வேகமாக வண்டி ஓட்டியவரை திட்டிவிட்டு செல்ல தண்டனை பெற்றுத்தர எல்லா வாய்ப்பும் உள்ளது. அந்த நிகழ்வுக்கப்புறம் வேகமாக வண்டி ஓட்டுபவரைக்கண்டாலே பிடிக்காது. இவர்களால் தான் இந்த உலகத்தில் எல்லா பிரச்சனையும் வருகிறது போன்ற வெறுப்புணர்வு அதிகமாக வாய்ப்புள்ளது.

நீதிமன்றதுக்கு சாட்சி போதும். . உண்மை தேவையே இல்லை. நமக்கு நம்வாழ்வில் நிம்மதி அடைய ஆற்றலை வளர்க்க அனைத்திற்கும் தேவையானது உண்மையே ஒழிய சரிதவறு அல்ல.

நீதிமன்றத்தின் விசாரனை யார் சரி யார் தவறு என்பதை நோக்கியே இருக்கும். ஆனால் நம் விசாரனை இருவரும் சரி என்ற இடத்தில் இருந்தே இருக்க வேண்டும். அதனால் தான் ஏன் என்று கேட்கிறோம்.

விபத்து ஏன் நடந்தது?

அவர் வேகமாக வந்தார். ( நீதிமன்றத்திற்கு இது போதும்.. நமக்கு இது போதாது)

அவர் ஏன் வேகமாக வந்தார்?

அவருக்கு வேகமாக வண்டி ஓட்டப்பிடிக்கும்

அவருக்கு ஏன் வேகமாக வண்டி ஓட்டப்பிடிக்கிறது?

அவருக்கு 3ம் பாவத்தில் செவ்வாய்த்தொடர்பு இருக்கும். அதனால் வண்டி வேகமாக ஓட்டப்பிடிக்கிறது.

அவர் ஏன் அந்த அமைப்போடு பிறந்தார்?

அவர் பிறந்த நேரத்தில் அப்படி ஒரு அமைப்பு உள்ளது.

அவர் ஏன் அந்த நேரத்தில் பிறந்தார்?

எதார்த்தமாக நடந்தது. அவரோ அவரது பிறந்த நேரமோ அவர் தீர்மாணிக்கவில்லை. பெற்றோருக்கும் இதை பற்றி பெரிய தெளிவு இல்லை.

இனி அந்த நேரத்தில் பிறப்பை மொத்தமாக தடுத்துவிடமுடியுமா?

வேகமாக வண்டி ஓட்டுபவர் இயல்பாக தைரியம் அதிகம் இருக்கும்.

தைரியம் இருப்பவர்களே இல்லாத சமூகத்தை உருவாக்க முடியாதே.

மேலும் வேகத்தால் உங்களை தொந்தரவு செய்த ஒருவர் இன்னொருவருக்கு பாதுகாப்பாகவும் இருந்திருக்க முடியும்.

பிரச்சனை வேகத்தில் இல்லை. அதை நடுரோட்டில் செய்யும் பொழுது அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

அவருக்கு வேகம் பிடிக்கும் என்றால் ஆம்புலன்ஸில் வேலை செய்தால் அங்கு அது உயிர்காக்கும் சேவையாக மாறும்.

Race ல் கலந்து கொண்டால் அது பெரிய விளையாட்டு வீரராக மாறமுடியும். Race ல் ஓட்டுபவர்கள் ரோட்டில் வேகமாக ஓட்டமாட்டார்கள்.

மேலும் ஒருவர்ரோட்டில் வேகமாக செல்வதற்கு வேகம் மட்டும் காரணமாக இருக்க முடியாது..

அவர் இளைஞராக இருந்தால் தன் ஆண்மையை நிரூபிக்க நினைத்தும் அதை செய்யலாம். அல்லது அவரது தோல்வியை கோபத்தை வெளிப்படுத்த நிதானம் இழந்து அப்படி செய்திருக்கலாம். இன்னும் பல காரணிகள்.

இவை அனைத்திற்குமே தீர்வு உள்ளது. இவை அனைத்தையும் ஆழமாக செல்லும் பொழுது மீண்டும் அவர் ரோட்டில் வேகமாக செல்வதை மொத்தமாக தவிர்க்க முடியும். இதை எல்லாம் அவருக்குள் ஏதோ ஒன்று தான் இதை செய்யத்தூண்டியது. காரணம் உள்ளது. மற்றபடி அவர் சரி என்று சிந்திக்க ஆரம்பித்தாலே விடைகிடைக்கும்..

ஒவ்வொரு காரியத்திற்கு பின்னும் இத்தனை காரணங்களை யோசிக்க முடியாதவர்கள் என்ன செய்வது?

எல்லோரும் நல்லவர்கள். அவர் செய்த செயல் நம்மை தொந்தரவு செய்துவிட்டது. மற்றபடி அவர் நல்லவராக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்று ஆழமாக நம்புவது. தெரிந்தவராக இருந்தால் அவர் செய்த நல்லவைகளை எல்லாம் சிந்தித்து அவரை மீண்டும் ஏற்றுக்கொள்வது.

இல்லை அவர் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்தால் அவரை விட்டு விலகிவிடுவது. விலகும் பொழுதும் அவர் நல்லவர்தான். அவர் மீது எந்த தவறும் இல்லை என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்வது மட்டுமே நிரந்தரமான நிம்மதியை உங்களுக்கு சாத்தியப்படுத்தும்.

*****

ஏற்கனவே பல முறை கூறியது போல் உங்களிடம் தவறாக நடப்பவர்களிடம் சரியை மட்டுமே பாருங்கள். அவரை சரிசெய்ய பார்க்காதீர்கள். அது உங்களின் ஞானம் நோக்கிய பாதையில் நிம்மதி நோக்கிய பாதையில் ஆற்றலை சேர்க்க விரும்பும் பாதையில் தடையாகவே மாறும். சரி செய்ய முடியவில்லையா விலகிவிடுங்கள். ஆனால் தவறாக நினைக்கக்கூடாது.

உயிர் உள்ள எல்லோருக்குள்ளும் உண்மை இருக்கும். அதை தான் பார்க்கச்சொல்கிறேன். வெளியே ஒருவர் எப்படி நடந்துகொண்டாலும் எல்லாருக்குள்ளும் உண்மை தான் உயிராக விளங்குகிறது. உண்மையை பார்க்கத்துவங்கிவிட்டால் எல்லாரையும்பிடிக்கும். உங்கள் உயிரும் வளரும்.

சரி தவறு எல்லாம் சமூகம் சார்ந்தது.மனம் சார்ந்தது. அதற்கும் ஆன்மாவிற்கு ஞானத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. 

அழகை கடந்தால் தான் ஞானம் என்றால் கோபத்தைக்கடந்தால் தான் ஞானம் என்றால் அறிவை கடந்தால் ஞானம் என்றால் ஒழுங்கையும் கடந்தால் தானே ஞானம். ஒழுங்கை மட்டும் புனிதபடுத்துவது ஏன்?
 
எல்லோரும் சரி என்ற பார்வையை வளர்த்துக்கொள்ளாமல் எத்தனை தியானம் செய்தால் பலன் இருக்காது. அது ஓட்டைப்பாத்திரத்தில் நீரை பிடிப்பது போல் தான். தியானம் செய்யும் வரை இருக்கும் நிம்மதி அது முடிந்த பிறகு இருக்காது.

தியானத்தை குறைத்து மதிப்பிடவில்லை. அது எதற்காக செய்கிறோம் என்ற உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள். ஞானம் அடைய தியானம் செய்கிறீர்கள் என்றால் அங்கே உண்மை தான் உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். 

மேலும் எல்லாரும் சரி என்ற பார்வை வளரும் பொழுது உங்களை சுற்றி உள்ளவர்களின் சரியை பார்ப்பீர்கள். குறைபார்க்க மாட்டீர்கள். தவறான நினைவுகள் எல்லாம் விலகும். உங்களுக்கும் முழுமையான நிம்மதியை பார்ப்பீர்கள். ஆற்றல் உள்ளும் புறமும் நிறையும்.

திரு. லக்ஷ்மண்

வேற்றுமையைக் கடந்து கணவன் மனைவிக்குள் ஒற்றுமையைக் காண என்ன செய்ய வேண்டும்?

இதில் கூறும் அனைத்தும் எல்லா உறவுகளுக்கும் பொருந்தும். ஆனால் கணவன் மனைவிக்குத்தான் மிக அதிகமாக இதில் தெளிவு இருக்க வேண்டும்.

முக்கியமான 8 விஷயங்களை மட்டும் பட்டியல் இட்டிருக்கிறேன். அனைத்தையும் கடைசி வரை கட்டாயம் படியுங்கள். இல்லை என்றால் கடைசி ஒன்றையாவது படியுங்கள்.

********

1. வார்த்தையைக்கடந்து புரிந்துகொள்ள வேண்டும்.

பேச்சில் 9 வகை உண்டு. 

அதிகாரமாக பேசுவது. 
உளறுவது. 
கத்துவது.
அதிகமாக பேசுவது. 
மனதில் இருப்பதை அப்படியே பேசுவது ( straight forward ) , பேசாமலேயே இருப்பது (அ) திக்கித்திக்கி பேசுவது , 
இனிமையாக பேசுவது, தத்துவமாக (அ) ஆறுதலாக பேசுவது , 
பாலியல் கலந்து பேசுவது.

உங்களுக்கு எதெல்லாம் இதில் உள்ளது. உங்கள் துணைக்கு எதெல்லாம் உள்ளது என்பதை பிரித்துக்கொள்ளுங்கள். 

சிலருக்கு இனிமையாக பேச வரும். சிலருக்கு வராது. அதை அப்படி புரிந்துகொள்ளுங்கள். இனிமையாக பேசுபவர் எல்லாம் நல்லவர் கிடையாது. கடுமையாக பேசுபவர் எல்லாம் கெட்டவர்கள் கிடையாது.

ஏன் இப்படி பேசுகிறாய்? ஒழுங்காக பேசத்தெரியாதா என்று கேட்டுக்கொண்டே இருந்தால் வாழ்க்கை முழுதும் சண்டை இருக்கும். தயவு செய்து உங்கள் பேச்சின் இயல்பை புரிந்துகொண்டு அவரின் பேச்சின் இயல்பையும் புரிந்துகொண்டு காயங்களை குறைக்க பாருங்கள். இரண்டையும் ஏற்கப்பழகுங்கள்.

2. உங்கள் கனவை அவர் காணவேண்டும் என்று விரும்பாதீர்கள்

உங்களுக்கு வெளிநாடு போகவேண்டுமானால் நீங்கள் போக முயற்சியிங்கள். இன்னொருவருக்கு விருப்பம் இல்லை என்றால் அவரை தொந்தரவு செய்யாதீர்கள். 

வார இறுதியிலும் உங்களுக்கு ஏதாவது செய்துகொண்டே இருக்கத்தோன்றினால் கனவை நோக்கி ஓட நினைத்தால் நீங்கள் செய்யுங்கள். இன்னொருவருக்கு படுத்து தூங்க மட்டுமே பிடித்தால் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். மாற்ற நினைக்காதீர்கள். பெருங்கனவுகளே சரி என்று விவாதம் செய்வதும் தவறு. எளிமையான வாழ்க்கையே சரி என்று எதிர்வாதம் செய்வதும் தவறு. இரண்டுமே சரி.

3.சமூக ஒழுங்கை வீட்டிற்குள் கொண்டு வராதீர்கள்

சமூக ஒழுங்கு - சமூகத்திற்கு தேவையானது. வீட்டிற்கு அல்ல.

சமூக ஒழுங்கு என்பது ஒரு பாவனை. அந்த பாவனை நாம் முன் பின் அறியாதவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை தீர்மாணிப்பதற்காக மட்டுமே. 

அதை கொண்டு வந்து வீட்டில் வைத்தால் என்ன ஆகும்? 

24 மணிநேரம் ஒன்றாக வாழும் பொழுதும் , ஒருவரை ஒருவர் உண்மையை புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டுமே ஒழிய , இருவருக்குள் சமூக ஒழுங்கு என்ற பெயரில் நடித்துக்கொண்டிருந்தால் நிம்மதி துளியும் இருக்காது.

இருவருக்கும் ஒழுங்கு பிடித்தால் செய்து கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து நடித்துக்கொண்டிருக்காதீர்கள். உடன் இருப்பவர் தவறாக நினைத்துவிடுவார் என்று பயந்து பயந்து வாழ்ந்தால் நீங்கள் நிரந்தரமான அழுத்தத்திற்கு சென்று விடுவீர்கள். அதன் வெளிப்பாடாக வீட்டில் சண்டை இருந்துகொண்டே இருக்கும்.

ஒருவருக்கு ஒருவர் உண்மையில் என்ன வேண்டும் என்பது தெளிவானால் நிம்மதி பிறக்கும். 

4. ஞானம் அடைய திருமணம் சிறந்த வழியே

இந்த உலகத்தில் உங்களுடனேயே உண்டு உறங்கி வாழும் ஒரே ஒரு ஜீவனை புரிந்துகொண்டால் உலகத்தில் உள்ள எல்லோரையும் புரிந்து கொள்ள முடியும். அதை விட்டுவிட்டு ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டிருந்தால் கோபப்பட்டுக்கொண்டிருந்தால் சண்டையிட்டுக்கொண்டே இருந்தால் நீங்களும் நிம்மதியாக இருக்க முடியாது. இந்த உலகம் முழுவதும் எதிர்மறையாகவே தோன்றும். 

உங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் வேற்றுமை புரிந்துகொள்ளுங்கள். எல்லா வேற்றுமையும் உண்மை என ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஒரு சாப்பாட்டுக்கடைக்கு செல்கிறீர்கள். அங்கு நீங்கள் வெளிச்சம் நிரம்பிய இடத்தில் அமர நினைக்கிறீர்கள். உங்கள் துணை கொஞ்சம் வெளிச்சம் குறைந்த இடத்தில் அமர நினைக்கிறார் என்றால் இரண்டில் எது சிறந்தது என்று பார்க்காதீர்கள். ஒரு முறை வெளிச்சத்திலும் ஒரு முறை வெளிச்சம் குறைந்த இடத்திலும் இருங்கள். 

இன்னொருவரின் விருப்பத்தை சரி பார்ப்பதை நிறுத்துங்கள். இருவரையும் அவர் அவர் இடத்தில் நின்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

5. அழுத்தம் அதிகமானால் கணவன்-மனைவி என்ற அடையாளங்களை தூக்கி எறியுங்கள்.

கணவன்-மனைவி எனும் பொழுது நிறைய அடையாளங்கள் குழப்பங்கள் நம்பிக்கைகள் எல்லாம் வந்து சுமையாக்கினால் அதை தூக்கி எறிந்துவிட்டு boyfriend-girl friend என்ற பதத்திற்கு வந்துவிடுங்கள்.

ஒரு பெண்ணோடு ஒரே வீட்டில் வசிப்பது ஒரு ஆணுக்கும் ஒரு ஆணோடு ஒரே வீட்டில் வசிப்பது ஒரு பெண்ணுக்கும் மிகவும் பிடிக்கும். அந்த இடத்தில் நின்று வாழ்க்கையை அணுகுங்கள். 

உங்கள் மனைவியை ஒரு பெண்ணாக புரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் கணவனை ஒரு ஆணாக புரிந்துகொள்ளுங்கள். 

இது தொடக்கம் மட்டுமே. பின்னர் இருவரும் உயிர் என்ற இடத்தில் இன்னும் இணக்கமாக சேர்ந்துவிடலாம்.

யாரோ ஒரு பெண்ணின் ஆணின் ஆசையை அப்படியே புரிந்துகொள்ளும் நாம் கணவன் மனைவி என்று வந்துவிட்டால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற இடத்திற்கு வருகிறோம். அதனாலேயே அதை தூக்கி எறியுங்கள்.

6. பிரிவது மட்டுமே தீர்வல்ல

மறுமணத்திற்கு எதிரானவன் அல்ல நான். ஆனால் இப்பொழுது இருக்கும் திருமணத்தை முதலில் தெளிவாக அணுகினீர்களா என்பதை கவனிக்கவேண்டும். இல்லை என்றால் எத்தனை திருமணம் செய்தாலும் புரியோஜனம் இருக்காது.

பிரிவது தான் தீர்வு என்று முடிவுக்கு வரும் முன்

1. திருமணம் என்றால் என்ன என்றாவது புரிந்ததா?

2. இனி மறுமணம் செய்தால் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்று நம்பிக்கை இருக்கிறதா?

3. இப்பொழுது இருக்கும் துணையை உண்மையிலேயே எந்த குழப்பமும் இல்லாமல் புரிந்துகொண்டீர்களா?

4. உங்களுக்கு திருமணம் முதலில் தேவையா?

உங்களுக்கு ஏற்றவர் வேறு எங்கோ இருக்கிறார்.இவர் இல்லை என்று நம்புவதை நிறுத்துங்கள். அது கடைசி உபாயம். 

முடிந்தவரை இருப்பவரை புரிந்துகொள்ள முடியுமா என்று பாருங்கள். எல்லோரும் மனிதர்கள். எல்லோரும் நல்லவர்கள். எல்லோருக்குள்ளும் உயிர் இருக்கிறது. அதனால் எல்லா முன் தீர்மாணங்களையும் விடுத்து கொஞ்சம் ஆழமாக சிந்தியுங்கள்.

7.  நல்ல நினைவுகளை உருவாக்கப்பாருங்கள்

ஒன்றாக ஒரு காபி குடிக்கக்கூட முடியவில்லை. இவரோடு எதற்கு வாழவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதற்கு தவறான நினைவுகளே காரணம். காபி குடித்தாலே சண்டையில் தான் முடியும் என்று நினைத்தாலும் அதற்கும் தவறான நினைவுகளே காரணம்.

கெட்ட நினைவுகள் தான் பல பிரிவுக்கு காரணம். நல்ல நினைவுகளை இன்றிலிருந்து உருவாக்கினாலே புதிய வாழ்க்கையை மறுபிறவி எடுக்கும் அளவிற்கு உங்கள் வாழ்க்கையையே மாற்ற முடியும்.

இருவருக்கும் எது பொதுவான குணம் உள்ளதோ அது எவ்வளவு சரியதாக இருந்தாலும் அதை முடிந்த அளவு தினசரி வாழ்க்கையில் கொண்டு வாருங்கள்.

இருவருக்கும் TVசினிமா பார்க்கப்பிடிக்குமா.. இருவருக்கும் அதில் ஒத்துவரும் ஏதேனும் ஒன்றை பிடித்துக்கொள்ளுங்கள். உடன் இருங்கள். நடக்கப்படிக்குமா ஓடப்பிடிக்குமா ஆடப்பிடிக்குமா இசைபிடிக்குமா ஆன்மீகம் பிடிக்குமா எதுவாகிலும்...

குறைந்தது 2-4 மணிநேரம் ஒன்றாக இருவருக்கும் பிடித்த விஷயத்திற்குள் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள். அந்த உடன் இருத்தலில் முடிந்த வரை இருவருக்குள்ளும் நல்ல நினைவுகள் உருவாக்க முயற்சிசெய்யுங்கள். 

இது தான் சரி என்று விவாதம் செய்யாமல் இருவருக்கும் சரி என்று தோன்றுவதை கைக்கொள்ளுங்கள். அந்த நேரத்தில் கண்டிப்பாக mobile பார்ப்பது எதுவும் கூடாது.

நல்ல நினைவுகள் வளரவளர மீண்டும் உங்களுக்குள் மகிழ்ச்சி பொங்குவதை உணர்வீர்கள்.

8. உயிர் வளர்த்தல்

எல்லாவற்றையும் கணக்கிட்டுக்கொண்டே இருக்காதீர்கள். அறிவைத்தூக்கி குப்பையில் போடுங்கள்.

அன்று நீ இதை செய்தாய் அதனால் இன்று நீ இதை சுமக்க வேண்டும் என்ற இடத்திற்கு தள்ளாதீர்கள்.

நீங்கள் ஒருவருக்கு நல்லது செய்தால் அவர் திருப்பி ஏதாவது செய்யவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் நல்லது செய்தாலே உங்கள் உயிர் வளரத்துவங்கிவிடும். அது ஆற்றலை கொடுக்கும். நிம்மதியைக்கொடுக்கும். 

அவர் ஏன் எதுவும் செய்யவில்லை. நான் மட்டும் ஏன் தியாகியாக இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். சண்டை இடாதீர்கள். நீங்கள் ஒருவருக்கு நல்லது செய்வதால் பெற்ற அணைத்து ஆற்றலையும் எதிர்பார்ப்பால் சண்டை இடுவதால் இழந்துவிடுவீர்கள்.

இதை தான் கடமையைச்செய் பலனை எதிர்பாராதே என்றனர்.

நீங்கள் அதிகம் செய்யச்செய்ய உங்கள் உள்ளே உயிர்வளரும். ஆற்றல் பெருகும். மெல்ல உங்கள் துனைக்கும் உங்களை மிகவும் பிடிக்கும். அவரும் ஏதாவது செய்ய வேண்டும் என்று தூண்டப்படுவார். அப்பொழுதும் அவருக்கு எந்த விதத்தில் செய்யவேண்டுமோ அப்படித்தான் அவர் செய்வார். அதனால் அதுவரை கவலையும் கூடாது.
எதிர்பார்ப்பும் கூடாது. 

உங்கள் துணை வந்து ஆசையாக உங்களுக்காக ஏதாவது செய்யும் பொழுதும் அவர் உங்களுக்காக ஒரு செயல் செய்கிறார் என்று ஆனந்தப்படவேண்டுமே ஒழிய நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் செய்யவில்லையே என்று கவலைக்குள் செல்லக்கூடாது.

இது அடிமைத்தனமோ தியாகமோ இல்லை. கொஞ்சம் பொறுத்தால் உங்களுக்குள் உயிர் வளர்வதை உணர்வீர்கள். எப்பொழுதெல்லாம் வாய்ப்பு வருகிறதோ எப்பொழுதெல்லாம் உங்கள் துணை உதவி என்று கேட்கிறாரோ அப்பொழுதெல்லாம் எப்படியாவது உதவுங்கள். உங்களுக்கு வராதைத்தைகூட செய்ய முயற்சியுங்கள். ஆனால் மனநிறைவோடு அதை செய்ய வேண்டும். குழப்பம் கூடாது. எதிர்பார்ப்பு கூடாது.

time waste என்று எண்ணாதீர்கள். உங்கள் உயிர் வளர்ப்பதை விட இந்த உலகித்தில் நீங்கள் செய்யவேண்டிய விஷயம் ஒன்றுமே இல்லை.
அதற்கும் திருமணமே ஒரு நல்ல வாய்ப்பு.

நமக்கு எல்லாவற்றையும் கட்டாயாமாக்கி வாயில் திணிப்பதால் தான் ஏற்க மறுக்கிறோம் உண்மையான காரணம் தெரிந்தால் தயங்காமல் நம்மோடு இருப்பவருக்கு எது வேண்டுமானாலும் செய்வோம்.

உண்மையை உணருங்கள். எவ்வளவு முடியுமோ உங்கள் கணவருக்கோ மனைவிக்கோ செய்துகொண்டே இருங்கள். அதை செய்யும் பொழுது நிதானம் இழக்காதீர்கள். உங்களுக்குள் இருக்கும் உயிர் வளர வளர நிம்மதியும் பேராணந்ததையும் உணர முடியும்.

வெளியே நண்பர்களோடு இருக்கும் பொழுதும் வீட்டிற்குள் வந்து உங்கள் துணையோடு இருக்கும் பொழுதும் ஒரே மாதிரியான ஆனந்தத்தை உங்கள் மனம் உணரும். அதற்கு பெயர் தான் நிம்மதி. அதை விட இந்த உலகத்தில் வேறு ஒரு சாதனை இல்லை.

நன்றி
திரு லஷ்மண் #thirulakshman 

*துணை - என்பது spouse என்ற அர்த்ததில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால் மூன்று பாலினத்திற்கும் இது பொருந்தும்.

திரு. லக்ஷ்மண்

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின் - திருவள்ளுவர்

தவம் செய்யும் ஒருவன் சினத்தை கொள்ளாமல் இருந்தால் அவன் உள்ளியது எல்லாம் அடைவான் - தேவநேயப்பாவாணர் உரை

****
கோபமும் கோபம் சார்ந்தவைகளும்…

*****
கோபம் எல்லாருக்கும் தானே வருகிறது? அதில் தவறென்ன உள்ளது?

கோபம் என்பது ஒரே காரணியினால் வருவதில்லை. அதனால் தான் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயத்தில் கோபம் வருகிறது. 

எ.கா : 

ஒருவருக்கு பெண்கள் ஆடையை புதுமையாக அணிந்தால் வருகிறது.
புதுமையாக ஆடை அணியும் பெண்ணிற்கு ஒருவர் பொய் சொன்னால் கோபம் வருகிறது

பொய் சொல்வது இயல்பான விஷயம் என்று கருதுபவருக்கு ஒருவர் குறை சொன்னால் கோபம் வருகிறது.குறை சொல்வதை இயல்பாக நினைக்கும் ஒருவருக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் தரவில்லை என்று கோபம் வருகிறது.

ஊதியம் கொஞ்சமாக வந்தாலும் போதும். எளிமையாக வாழ்வோம் என்று நினைக்கும் ஒருவருக்கு பெண் ஆடையை புதுமையாக அணிந்தால் கோபம் வருகிறது.

****

இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இந்த சுழற்சியை முழுவதும் உணர்ந்தால் போதும். கோபம் என்பது தாழ்ந்த உணர்ச்சி என்பது விளங்கும்.

நம் மனதிற்கு ஏற்பதை பார்க்கும் பொழுது ஆற்றல் கொஞ்சம் உயர்கிறது. நம் மனதிற்கு ஏற்பில்லாதவற்றை பார்க்கும் பொழுது ஆற்றல் குறைகிறது.

கோவம் என்பது ஆற்றல் குறைந்த நிலை. 

மனதிற்கு ஒவ்வாத விஷயத்தை பார்த்ததும் ஆற்றல் குறைவதால்  மனம் ஆற்றல் குறைந்ததும்  கோபத்தை எடுத்துக்கொள்கிறது. 

கோபம் கொள்வதால் ஆற்றல் இழக்கிறோம். தொடர்ந்து கோபத்தை வளர்த்தால் ஆற்றல் கொஞ்சம் கூட மிஞ்சாது.

கால் தவறி விழுகிறோம். உடனே எழுவதற்கு பதில் மேலும் மேலும் விழுந்துகொண்டே இருக்கிறோம்.

மனதை கவனித்தால் கோபம் வரும் புள்ளியை கண்டடைந்துவிடலாம்.
மற்றபடி கோபத்தில் நல்லவைகள் இல்லை.

2. தவறானவர்கள் மேல் கோபப்படுவதில் என்ன தப்பு இருக்கிறது?

ஒருவர் நம்மை கோபப்டுத்தும் பொழுது அவர் நமக்கு தப்பானவராக தோன்றலாம். அவர் தப்பானவர் என்று முடிவுக்கு வரும்பொழுது மேலும் கோபம் அதிகரிக்கும். நாம் அவருக்கு செய்த நண்மை நினைவுக்கு வர மேலும் மேலும் கோபம் அதிகரிக்கும். நாம் நல்லவராகி விடுவோம்.  சக மனிதனை தப்பாக நினைக்கும் பொழுதே நாம் ஆற்றலை இழக்கத்துவங்கி விடுகிறோம். அதை தடுக்கவே முடியாது.

அதற்கு பதிலாக

1. ஒருமுறை தவறாக நடந்துகொண்டால் ,

அவர் தப்பானவர் இல்லை. அவருக்கும் நமக்கும் மனதளவில் வேற்றுமை உள்ளது. அதனால் அவருடைய இயல்பும் நம் இயல்பும் வேறு வேறாக உள்ளது. அதை நாம் தவறாக எதிர்தன்மையோடு அணுகுகிறோம். அவருக்குள்ளும் உயிர் தான் இருக்கிறது. உண்மை தான் உயிராக ஒளிர்கிறது. அவரது குணங்களில் உங்களுக்கு ஒற்றுப்போகும் குணங்களை எடுத்துக்கொண்டால் அவர் நண்பராக தெரிவார். அவர் முரண்படும் இடங்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

2. உங்களை மீண்டும் மீண்டும் காயப்படுத்துகிறார் என்றால்... 

அவர் தப்பானவர் இல்லை. ஆனால் திரும்ப திரும்ப நம்மிடம் தப்பு செய்ய அவர் தூண்டப்படுகிறார் என்று புரிந்து கொண்டால் கோபம் குறையும். 

அவர் ஏன் நம்மிடம் மீண்டும் மீண்டும் நாம் விரும்பாத வண்ணம் நடந்துகொள்கிறார் என்ற கேள்வியை கேட்டு விடையைத்தேடிச்சென்றால் அவருக்கு பிடிக்காத ஏதோ ஒன்றை நாம் அவரை செய்ய சொல்லியிருப்போம். அல்லது அவருக்கு பிடிக்காத ஒன்றை அவர் சுமந்த கொண்டிருப்பார். அந்த சுமைதந்த அழுத்ததில் நமக்கு பிடிக்காத வாறு நடந்து கொள்ளலாம்.

ஒன்று நம்மை காயப்படுத்திய புள்ளியில் அவரோடு பழகுவதை தவி்க்கலாம் அல்லது மீண்டும் அவரை நம்புவதை தவிர்கலாம் அல்லது அவரை விட்டு மொத்தமாக விலகி நிற்கலாம். 

ஆனால் மனதளவிலும் அவர் மேல் கோபம் மட்டும் இருக்கவே கூடாது. முடிந்தவரை அழித்துவிடுங்கள். பழைய கோபங்களை எல்லாம் அவருக்கு ஏதோ நியாயம் இருக்கும் என்று அதன் மேல் ஒரு ஈரத்தை அன்பை பரவவிடுங்கள். நிரந்தரமான கோபம் அவரைமட்டுமல்ல நம்மையும் காயப்படுத்திக்கொண்டே இருக்கும்.

கோபத்தை கையாள்வதில் சிக்கல் அதிகம் உள்ளவர்கள் யார்?

சமைக்கப்பிடித்தவர்கள்
வண்டியோட்ட பிடித்தவர்கள்
காவல் துறை ராணுவம் போன்ற பாதுகாப்பு துறைகளில் உள்ளவர்கள்
நெருப்பு சம்மந்தபட்ட ஆயுதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாட்டம் கொண்டவர்கள்
செல்போனை அல்லது வீட்டுப்பொருட்களை அதிகம் கைதவறி விடுபவர்கள்

இவர்கள் அனைவருக்குமே பெரும்பாலும் தைரியம் அதிகம் இருக்கும். அது கோபத்தின் ஆற்றல் நிறைந்த நிலை. அந்த தைரியத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அது கீழிறங்கி கோபமாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீரம் இருவரையும் பாதுகாக்கும். உயர்ந்த ஆற்றல்
கோபம் இருவரையும் அழிக்கும். தாழ்ந்த ஆற்றல்.

எப்படி வழிகாட்டியாக இருக்கும் ஒருவர் குறை சொல்லாமல் இருக்க வேண்டுமோ அதே போல வீரம் உள்ளஒருவர் எக்காரணம் கொண்டும் கோபம் உள்ளவராக மாறக்கூடாது. அது தான் அவரின் யோகமாக இருக்க வேண்டும்.

“Anger should be expressed. - Any anger that is not coming out, flowing freely, will turn into sadism, power drive, stammering, and other means of torturing.” - Bruce lee

கோபம் வந்துவிட்டால் காட்டிவிடவேண்டும் என்று நான் மிகவும் மதிக்கும் புரூஸ்லி கூறியுள்ளார். அதுவும் சரி தான். 

கோபம் வந்துவிட்டால் காட்ட வேண்டாம். அதே சமயம் அடக்கவும் வேண்டாம்.

கோபத்தை  வருவதையே உருவாவதையே தடுக்க வேண்டும். வந்துவிட்டால் அதை வளர்க்ககூடாது. அப்பொழுதே அந்த உண்ர்வை அழித்துவிடவேண்டும்.  அது தான் ஆற்றலை பாதுகாக்கும். மனதில் சுமந்துகொண்டிருந்தால் bruceelee கூறுவது போல் தான் நடக்கும். 

அடக்குவது வேறு உருவாகாமல் மனதை கவனித்து தடுப்பது வேறு. உருவாகிய பிறகு மனதில் அதை எடுத்துக்கொள்ளாமல் அழிப்பது வேறு.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும் - திருவள்ளுவர்

( யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும். )

மேலும் நம் வயதில் சிறியவரிடம் கோபம் படும் பொழுது அவர்கள் நம்மை மீண்டும் தாக்க முற்படும் பொழுது நாம் அவர்களை விட மிகவும் குறைந்த அனுபவம் மிக்கவராக தாழ்ந்தவராகிவிடுவோம்.  தன் குழந்தையாக இருந்தாலும் வயதில் குறைந்தவரிடம் கோபம் கொண்டால் என்றைக்குமே நிம்மதி கிடைக்காது. வலி வேதனை மட்டுமே மிஞ்சும்.

மேலும் கோபத்தை பற்றி பேசுவோம்.

நன்றி
திரு லஷ்மண் #thirulakshman

திரு. லக்ஷ்மண்

ஆற்றலை சேமிப்பது எப்படி?- 1 - கோபத்தை விடுதல்

முன் சுருக்கம் :
ஆற்றல் குறையும் பொழுது நாம் எதிர்மறை எண்ணங்களால் உந்தப்படுகிறோம்.ஆற்றல் அதிகமாகும் பொழுது நாம் நேர்மறை எண்ணங்களால் உந்தப்படுகிறோம்.

ஆற்றல் குறைய குறைய சாத்தான் தன்மையை அடைகிறோம்..
ஆற்றல் அதிகமாக அதிகாமாக கடவுள் தன்மையை அடைகிறோம்..

உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களும் ஆற்றலை சேமித்து கடவுள் தன்மையை அடைய முடியும்.   அதனால் தயங்காமல் ஒவ்வொரு வழியாக கடைபிடியுங்கள். வாழ்க்கையில் நிம்மதி பரவும்.

ஆற்றல் குறித்து இரண்டு பகுதிகளாக  எழுதியிருக்கிறோம். அடுத்த கட்டமாக ஆற்றலை சேமிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்..

*****

ஆற்றலை சேமிப்பதில் முதல் கட்டம் ஆற்றல் வீணாவதை தடுக்க வேண்டும். புதிதாக சேர்ப்பதை விட இருப்பதை காப்பது தான் முதல் அவசியம்.

நாம் ஆற்றலை இழப்பதில் முதல் பங்கு கோபத்திற்கு உள்ளது.

வேதாத்திரி மகரிஷி கூறும் பொழுது கோபமும் கவலையும் ஆற்றல் இழப்பை மிக விரைவாக செய்துவிடுவதாக கூறுவார்.

கோபம் வரும் பொழுது அது எந்த காரணமாக இருந்தாலும் உங்கள் பக்கம் எவ்வளவு நியாயமாக இருந்தாலும் கோபப்படவே கூடாது.

கோபப்படத்துவங்கும் பொழுது நம் பக்கம் நியாயம் இருப்பதாக தோன்றும். ஆனால் கோபப்பட்டு முடியும் பொழுது நம்முள் இருக்கும் ஆற்றல் மொத்ததையும் இழந்துவிடுவோம்.

சூரியனாக இருந்தால் - நீங்க சொன்னதை யாரும் செய்யவில்லை என்றால் கோபம் வரும். உங்களிடம் கேட்காமல் முடிவெடுத்தால் கோபம் வரும். உங்களை  சார்ந்திருக்கும் மக்கள் உங்களுக்கு எதிராக திரும்பினால் கோபம் வரும்.

சந்திரனாக இருந்தால் - நீங்கள் அசைப்பட்டது நடக்கவில்லை என்றால் உங்களை காக்கவைத்து மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கோபம் வரும்.  உங்கள் அன்பை உதாசினப்படுத்தினால் கோபம் வரும்.

செவ்வாயாக இருந்தால் - எல்லா செயலின் அடிப்படையும் தைரியம் இருக்கும். தாழ்ந்தால் கோபம் பழிவாங்கும் குணமாக மாறும்.

ராகுவாக இருந்தால் - சாப்பாடு சரியாக கிடைக்கவில்லை என்றால் கோபம் வரும்.

குருவாக இருந்தால் - பிறர் ஒழுங்காக இல்லையென்றால் கோபம் வரும். நேரம் தாழ்த்திவிட்டால்  கோபம் வரும்

சனியாக இருந்தால் - வீட்டில் யாரும் வேலை சொன்னால் கோபம் வரும் ( office ல் மாங்கு மாங்கு என்று வேலை செய்யப்பிடிக்கும் )

புதனாக இருந்தால் - உங்களை கடின உழைப்புக்கு தள்ளினால் கோபம் வரும். பத்து ரூபாய் செலவு செய்து 8 ரூபாய்க்கு வரவு வைத்தால் கோபம வரும். உங்களை தகாத வார்த்தைகளில் பேசினால் கோபம் வரும்.

கேதுவாக இருந்தால் - உங்கள் தீர்வை யாரும் மதிக்கவில்லை என்றால் உங்கள் உண்மையை யாரும் சந்தேகப்பட்டால் கோபம் வரும்.

இதில் ஒரு கோடு மட்டுமே காட்டியுள்ளேன். நிறைய விஷயங்களை சேர்க்க வேண்டும்.

****

கோபத்தை அடக்ககூடாது. அது ஆபத்தானது. அதை மொத்தமாக தவிர்க்க வேண்டும்.

கோபம் வந்தவுடன்.. 

1. எதிராளி ஆற்றல் குறைவில் உள்ளார். அதனால் அவர் அப்படி நடந்து கொண்டார். மற்றபடி அவர் நல்லவர் தான். அவரை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். 
2. அவரிடம் இருந்து விலகி இருங்கள். அது தவறில்லை. ஆனால் வெறுக்காதீர்கள். 
3. கோபத்துடம் இருக்காதீர்கள். கோபம் உங்கள் மனதை விட்டு உடனடியாக செல்லவேண்டும்.
4. உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். நீர் அருந்துங்கள். 
5. அவர் செய்த நல்லவைகளை பற்றி சிந்தியுங்கள். 

கோபம் வந்த மறுகணம் உங்களுக்குள் இருக்க வேண்டியது ஒன்றே ஒன்று தான். நாம் ஆற்றலை இழக்கப்போகிறோம். மீண்டும் இந்த ஆற்றலை பெற ஒரு வாரம் ஆகும். இப்படி இதை இழந்து நாம் நிரூபிக்க ஏதுமில்லை.

பயிற்சி :

முதலில் பதினைந்து நாட்கள் முயற்சி செய்யுங்கள். அது பற்றி அதில் நீங்கள் சந்தித்த சிக்கல்கள் குறித்தும் எனக்கு எழுதுங்கள். என்னால் முடிந்த அளவு உங்களுக்கு வழிகாட்டுகிறேன். எப்பாடு பட்டாவது கோபத்தை மொத்தமாக நீக்கி நிம்மதியை பேரிண்பத்தை அடைந்திடும் வைராக்கியத்தை மட்டும் கைகொள்ளுங்கள்.

இந்த பயிற்சியில் என்னுடன் இனைந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் உங்கள் விருப்பத்தையும்   உங்களுக்கு எந்த எந்த விஷயத்தில் கோபம் வரும் என்பதை comment ல் கூறுங்கள். அல்லது என்னுடைய mail க்கோ ( thiru@timescience.org அல்லது https://gdpd.xyz/thirulakshman kubool id க்கோ தெரிவியுங்கள். 

நான் அதற்கான விளக்கத்தை சரியாக பார்க்க வழி கூறமுயற்சிக்கிறேன். ஆனால் எதுவாகினும் கோபம் கொள்ளக்கூடாது என்று முடிவு செய்துவிடவேண்டும்.