எல்லாம் ஒன்றே
---------------------------
"எல்லாம் ஒன்றே" என்னும் இந்நூல் வையை.ஆர்.சுப்பிரமணிய ஐயர் அவர்களால் எழுதப்பட்டது. பின்னர்
1935 ஆம் ஆண்டில் மிகவும் கிடைப்பதற்கு அரிதாக இருந்த இந்நூலை பகவான் ஸ்ரீரமணமஹரிஷி சந்நிதானத்தில் பிரசுரம் செய்துள்ளார்கள்.
முகவுரை:
மனிதர்கள் விரும்புவது இன்பம்; வெறுப்பது துன்பம். இதையே மற்றப் பிராணிகளும் செய்கின்றன. ஆகையால், இவ்வளவோடு நின்றுவிட் டவர்கள் சாதாரண மனிதர்கள். ஆனால், மனிதர்களுக்குள் உயர்ந்த நிலையைப் பெற்றவர்களது கொள்கை என்னவென்றால் - நியாய வழியில் நடக்க வேண்டும்; அப்பொழுது வரும் இன்பமோ துன்பமோ இரண்டையும் பொறுமையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்- என்பதுதான். இந்த உணர்ச்சி உள்ளவர்களுடைய ஒற்றுமை நீடித்து நிற்குமே யொழிய, மேற்சொன்ன சாதாரண மனிதர்களுடைய ஒற்றுமை நீடித்து நிற்காது. இவ்வுணர்ச்சி யுடையவர்களுடைய ஒற்றுமையினாலேயே உலகத்துக்கு நன்மை உண்டாக வேண்டியிருக்கிறது. இதில், "நியாயம்" என்றால் என்ன?_ என்ற ஒரு கேள்வி மிக அவசியமானது. அதற்கு பதில் எழுதி முடிந்தபாடு எப்பொழுதும் இல்லை; ஏன்? நியாயம் என்பது அந்த அந்த இடம் நோக்கி உணர வேண்டியிருக்கிறது. யார் எவ்வளவு எழுதி வைத்தாலும், அவர்களாலும் விடப்பட்டுப்போன ஒரு இடம் உலகத்தில் நேரிடாமல் இராது. ஆகையால், எந்த ஒரு உணர்ச்சியை அடைந்தால் " நியாயம் என்பது இன்னது" என அந்தஅந்த இடத்துக்குத் தக்கபடி ஒருவனுக்குத் தோற்றுமோ, அந்த ஒரு உணர்ச்சியை ஒவ்வொருவரும் அடையவேண்டியது இன்றியமையாததாயிருக்கிறது.
அது ஒரே உணர்ச்சிதான். அப்படிப்பட்ட உணர்ச்சிகள் பல இல்லை. அது ஒன்றாகவே யிருந்தும் அதை உலகத்தார் உணர்வது மிக அருமையாக இருப்பதுதான் இவ்வுலகத்தில் வியப்பை உண்டுபண்ணுகிறது. இதையன்றி வேறு வியப்பு உலகத்தில் இருப்பதாக எனக்குத் தோற்றவில்லை. அந்த ஒரு உணர்ச்சியை " உபநிஷத்துக்கள்" மிக வெளிப்படையாய்ப் போதிக்கின்றன. இந்நூலில், எனக்குத் தோற்றின ஒரு முறையில், அந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறேனேயொழிய, நான் புதிதாக எழுதினது ஒன்றுமில்லை. ஆயினும், இது என் கடமைகளில் ஒன்றாயிருக்கிறது.
இதில் உள்ள அத்தியாயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவனாய் இருக்கையினாலே, ஒன்றில் விடுபட்டுப் போனதாகத் தோற்றும் ஒருவிஷயம் மற்றொன்றில் சொல்லப்பட்டிருக்கும்; வெளிப்படையாய்த் தோற்றாத ஒருவிஷயம், ஆழ்ந்து கவனித்தால் தோற்றும். அதிலும் விளங்காததை மற்ற நூல்களாலும் பெரியோர்களாலும் உணரவேண்டியது வாசிப்போர் கடமைகளில் ஒன்றாயிருக்கிறது.
ஜகஜ்ஜநநி ஸத்குரோபாஹி.
---------------------------
"எல்லாம் ஒன்றே" என்னும் இந்நூல் வையை.ஆர்.சுப்பிரமணிய ஐயர் அவர்களால் எழுதப்பட்டது. பின்னர்
1935 ஆம் ஆண்டில் மிகவும் கிடைப்பதற்கு அரிதாக இருந்த இந்நூலை பகவான் ஸ்ரீரமணமஹரிஷி சந்நிதானத்தில் பிரசுரம் செய்துள்ளார்கள்.
முகவுரை:
மனிதர்கள் விரும்புவது இன்பம்; வெறுப்பது துன்பம். இதையே மற்றப் பிராணிகளும் செய்கின்றன. ஆகையால், இவ்வளவோடு நின்றுவிட் டவர்கள் சாதாரண மனிதர்கள். ஆனால், மனிதர்களுக்குள் உயர்ந்த நிலையைப் பெற்றவர்களது கொள்கை என்னவென்றால் - நியாய வழியில் நடக்க வேண்டும்; அப்பொழுது வரும் இன்பமோ துன்பமோ இரண்டையும் பொறுமையோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்- என்பதுதான். இந்த உணர்ச்சி உள்ளவர்களுடைய ஒற்றுமை நீடித்து நிற்குமே யொழிய, மேற்சொன்ன சாதாரண மனிதர்களுடைய ஒற்றுமை நீடித்து நிற்காது. இவ்வுணர்ச்சி யுடையவர்களுடைய ஒற்றுமையினாலேயே உலகத்துக்கு நன்மை உண்டாக வேண்டியிருக்கிறது. இதில், "நியாயம்" என்றால் என்ன?_ என்ற ஒரு கேள்வி மிக அவசியமானது. அதற்கு பதில் எழுதி முடிந்தபாடு எப்பொழுதும் இல்லை; ஏன்? நியாயம் என்பது அந்த அந்த இடம் நோக்கி உணர வேண்டியிருக்கிறது. யார் எவ்வளவு எழுதி வைத்தாலும், அவர்களாலும் விடப்பட்டுப்போன ஒரு இடம் உலகத்தில் நேரிடாமல் இராது. ஆகையால், எந்த ஒரு உணர்ச்சியை அடைந்தால் " நியாயம் என்பது இன்னது" என அந்தஅந்த இடத்துக்குத் தக்கபடி ஒருவனுக்குத் தோற்றுமோ, அந்த ஒரு உணர்ச்சியை ஒவ்வொருவரும் அடையவேண்டியது இன்றியமையாததாயிருக்கிறது.
அது ஒரே உணர்ச்சிதான். அப்படிப்பட்ட உணர்ச்சிகள் பல இல்லை. அது ஒன்றாகவே யிருந்தும் அதை உலகத்தார் உணர்வது மிக அருமையாக இருப்பதுதான் இவ்வுலகத்தில் வியப்பை உண்டுபண்ணுகிறது. இதையன்றி வேறு வியப்பு உலகத்தில் இருப்பதாக எனக்குத் தோற்றவில்லை. அந்த ஒரு உணர்ச்சியை " உபநிஷத்துக்கள்" மிக வெளிப்படையாய்ப் போதிக்கின்றன. இந்நூலில், எனக்குத் தோற்றின ஒரு முறையில், அந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறேனேயொழிய, நான் புதிதாக எழுதினது ஒன்றுமில்லை. ஆயினும், இது என் கடமைகளில் ஒன்றாயிருக்கிறது.
இதில் உள்ள அத்தியாயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவனாய் இருக்கையினாலே, ஒன்றில் விடுபட்டுப் போனதாகத் தோற்றும் ஒருவிஷயம் மற்றொன்றில் சொல்லப்பட்டிருக்கும்; வெளிப்படையாய்த் தோற்றாத ஒருவிஷயம், ஆழ்ந்து கவனித்தால் தோற்றும். அதிலும் விளங்காததை மற்ற நூல்களாலும் பெரியோர்களாலும் உணரவேண்டியது வாசிப்போர் கடமைகளில் ஒன்றாயிருக்கிறது.
ஜகஜ்ஜநநி ஸத்குரோபாஹி.