Saturday, October 21, 2017

கவிதை

♪♪ எனது முதல் கவிதை ♪♪

இன்று என் முகம்
மிகவும் அழகு,
மனம் மிகவும்
அழகாக இருந்ததால்...
கண்ணாடி எனும்  கேமராவில்
தெரியும் அழகு
செல்போன் கேமிராவுக்குத்
தெரியவில்லை!
ஒரு மனிதனின்
முகத்தில் தெரியும்
அக அழகை
கண் எனும்
கேமிராவால் மட்டுமே
பார்க்க முடியுமோ!
கண்ணாடி,தான் காண்பதை
அப்படியே பிரதிபலிக்கிறது.
செல்போன் கேமிரா
தன்னுடைய மேதாவித்தனத்தை
அதில் புகுத்திவிடுகிறதோ!?

1 comment:

நன்றி....