Tuesday, October 17, 2017

படித்ததில் பிடித்தது

♦♦படித்ததில் பிடித்தது♦♦

 (இது ராஜபாட்டை அல்ல என்ற நூலிலருந்து)

♥ எனக்கு வரும் எந்தப் புகழும்,பணமும் என் இயல்பை மாற்றிவிடக்கூடாது.என் நிம்மதியைக் குலைத்துவிடக்கூடாது..இதயத்தின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் அடிப்படை மனிதப் பண்புகளைத் தகர்த்துவிடக்கூடாது.
♥ கலைஞன் விட்டுச் செல்ல நல்ல படங்கள் மட்டுமல்ல,நற்பண்புகள் மூலம் ஆற்றவேண்டிய நற்செயல்களும் பல உள்ளன.வாழ்வின் முடிவில் நிம்மதியும் சந்தோசமும் வேண்டுமென்றால் 'நாம் யாருக்கும் கெடுதல் செய்யவில்லை...ஓரளவுக்கு நல்லவன் என்ற பெயரோடு வாழ்ந்திருக்கிறோம்'என்ற திருப்தி வேண்டும்.
♥ கிராமத்திலேர்ந்து வந்தபோது எனக்கு என்ன பலம்னு பார்த்தா பலமே கிடையாது.செல்வமோ,பேமிலி பேக்கிரவுண்டோ,நா பெரிய படிப்பாளியோ கிடையாது.என்கிட்ட பலகீனம் கிடையாதுங்கற ஒரே தகுதி மட்டும் தான் எனக்கு பலமா இருந்திச்சி.
♥ சினிமா உலகின் புகழின் உச்சியினை சிவகுமார் இன்னும் எட்டவில்லை என்கிறார்கள்.அது நூற்றுக்கு நூறு உண்மை.எட்டவே மாட்டான் என்று யாரும் சொல்லவில்லையே!அது பெரிய ஆறுதல்!
♥ இது ஒரு மாரத்தான் ஓட்டம்.பாதி ஓட்டம் நிகழும் போது முன்னால் ஓடுபவனை வெற்றி பெற்றவனாகக் கருத முடியாது.இன்னும் மீதி ஓட்டமிருக்கிறது.
  இமயமலை உச்சியில் கொடி நாட்ட எனக்கும் விருப்பமுண்டு தான்.அதை இப்போதே நாட்ட நான் விரும்பவில்லை.படத்தின் முடிவில் க்ளைமாக்ஸ் வருவது போல, வாழ்வின் இறுதிப் பகுதிகளில் உச்சப் புகழ் பெறவேண்டுமென்பது என் அவா.
 புகழின் உச்சி மட்டுமல்ல...இமயமலையின் உச்சியும் கூட கூரானது,பாதுகாப்பற்றது.கொடி நாட்ட முடியுமே தவிர,அங்குக் குடியிருக்க முடியாது.கொடியேற்றும்போது என் உருவம் சிதைந்து,குணம் அழிந்து ஆரோக்கியம் குன்றிய நிலையில் நான் காட்சியளிக்கக் கூடாது.
♥ எதுவுமே மலிவாய்,சுலபமாய்க் கிடைக்கிற இந்தத் துறையில் இதுவரை ஒழுங்கா வாழ்க்கையை வாழ்வதுதான் நான் செய்த சாதனைன்னு சொல்றதை மனதிற்கு இதமான விஷயம்னு நான் நினைக்கிறேன்.ஏனென்றால், சாதனை என்பது எப்போதுமே முறியடிக்கக் கூடியது.
                               (வளரும்)

No comments:

Post a Comment

நன்றி....