Sunday, October 15, 2017

குறள்

♪♪ தினம் ஒரு குறள் ♪♪

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

பொருள்: ஒருவன் எந்தெந்நப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கிறானோ,அந்தந்தப் பொருளால் அவன்
துன்பம் அடைவதில்லை.

♦இன்றைய உலகமயமாக்கலில் பெரும் பிரச்சினையே பற்றற்று இருப்பது தான்.ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு பற்றின்
பிடியில் சிக்குண்டு இருக்கிறோம்.இதில் ஆச்சரியத்தக்க இன்னொரு பற்று சதாசர்வ
காலமும் கவலை கொண்டிருப்பது.
♦இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்ன தெரியுமா...உண்மையிலேயே கவலை கொள்வதை நாம் பெரிதும் விரும்புகிறோம்
என்று கூட நமக்குத் தெரியாமல் இருப்பது தான் நாம் வைத்திருக்கும் பற்றிலே மிகப் பெரிய பற்று.
♦நம் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக அமையேவேண்டும் என்ற எண்ணம் நம்
மனதில் தோன்றுவது நியாயம் தான்.ஆனால்
அதையே நாம் கவலையாக மாற்றாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.இந்தக் கவலையும் ஒருவகையில் பற்று தான்.
♦நமக்கு நாமே ஒரு சவாலை மேற்கொள்வோம்.நாம் அதிகம் பற்று வைத்திருக்கும் ஒரு விஷயம் அது எதுவாக
இருந்தாலும் அதை தூர எறிவோம்.இப்போதிருக்கும் மகிழ்ச்சியைவிட
அதிக மகிழ்ச்சியை உணர்வோம்.
                        (நன்றி:இன்ஃபினி)

No comments:

Post a Comment

நன்றி....